தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டா மாறுதல் செய்வதற்காக ரூபாய்.5,000 லஞ்சம் வாங்கிய தோப்புவிடுதி கிராம நிர்வாக அலுவலர்
முருகேசனை ஊழல் தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டா மாறுதல் செய்வதற்காக ரூபாய்.5,000 லஞ்சம் வாங்கிய தோப்புவிடுதி கிராம நிர்வாக அலுவலர் முருகேசனை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் தாலுகா அம்மங்குடியைச் சேர்ந்தவர் குமரேசன். அவரது நிலம் தோப்புவிடுதி கிராமத்தில் கூட்டுப் பட்டாவில் உள்ளதை சர்வே உட்பிரிவு செய்து தனிப்பட்டாவாக மாற்றுவதற்கு, தோப்புவிடுதி கிராம நிர்வாக அலுவலரான புதுக்கோட்டை மாவட்டம் மட்டங்கால் பகுதியில் வசிக்கும் முருகேசன், (வயது 32), என்பவரை அணுகியுள்ளார்.அப்போது, முருகேசன் ரூபாய் ஐந்தாயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், பணத்தை திருவோணம் தாசில்தார் அலுவலகம் அருகிலுள்ள இ - சேவை மையம் நடத்தி வரும் ஊர்காவல்படையில் பணியாற்றும் சுதா என்பவரிடம் கொடுத்து விட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேசன், தஞ்சாவூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தலின் படி, பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய பணத்தை பெற்றுக் கொண்டு நேற்று வேல்முருகன், சுதா நடத்தி வரும் இ- சேவை மையத்திற்கு சென்று, பணத்தை சுதாவிடம் கொடுத்தார். பிறகு, லஞ்சப் பணத்தை கிராம நிர்வாக அலுவலர் முருகேசனிடம் சுதா வழங்கியுள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர், கிராம நிர்வாக அலுவலர் முருகேசனையும், சுதாவையும் பணம் பெற்ற கையுடன் பிடித்தனர். பிறகு இருவரையும் திருவோணம் தாசில்தார் அலுவலகத்தில் வைத்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் அன்பரசன், ஆய்வாளர் பத்மாவதி தலைமையிலான குழுவினர் சுமார் 3 நேரம் விசாரணை நடத்தி பின்னர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் தாலுகா அம்மங்குடியைச் சேர்ந்தவர் குமரேசன். அவரது நிலம் தோப்புவிடுதி கிராமத்தில் கூட்டுப் பட்டாவில் உள்ளதை சர்வே உட்பிரிவு செய்து தனிப்பட்டாவாக மாற்றுவதற்கு, தோப்புவிடுதி கிராம நிர்வாக அலுவலரான புதுக்கோட்டை மாவட்டம் மட்டங்கால் பகுதியில் வசிக்கும் முருகேசன், (வயது 32), என்பவரை அணுகியுள்ளார்.அப்போது, முருகேசன் ரூபாய் ஐந்தாயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், பணத்தை திருவோணம் தாசில்தார் அலுவலகம் அருகிலுள்ள இ - சேவை மையம் நடத்தி வரும் ஊர்காவல்படையில் பணியாற்றும் சுதா என்பவரிடம் கொடுத்து விட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேசன், தஞ்சாவூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தலின் படி, பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய பணத்தை பெற்றுக் கொண்டு நேற்று வேல்முருகன், சுதா நடத்தி வரும் இ- சேவை மையத்திற்கு சென்று, பணத்தை சுதாவிடம் கொடுத்தார். பிறகு, லஞ்சப் பணத்தை கிராம நிர்வாக அலுவலர் முருகேசனிடம் சுதா வழங்கியுள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர், கிராம நிர்வாக அலுவலர் முருகேசனையும், சுதாவையும் பணம் பெற்ற கையுடன் பிடித்தனர். பிறகு இருவரையும் திருவோணம் தாசில்தார் அலுவலகத்தில் வைத்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் அன்பரசன், ஆய்வாளர் பத்மாவதி தலைமையிலான குழுவினர் சுமார் 3 நேரம் விசாரணை நடத்தி பின்னர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கருத்துகள்