தமிழ்நாட்டில் வலுவில்லாத லோக் ஆயுக்தா சட்டம் என்பது சிறிய பொறியில் ஊழல் வாதிகள் எனும் பெரிய எலிகள் சிக்காது

ஆகவே சட்டத் திருத்தம் அல்லது மாற்றம் தேவை என்பது தான் பலரது கருத்து. இந்தியாவின் லோக்பால் சட்டத்திற்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டத்திற்கும் சில முரண்பாடுகள் உள்ள நிலையில் தற்போது தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பு என்பது ஒரு ஊழல் தடுப்பு ஆணையம் என்ற நிலையில். ஊழலை ஒழிக்கும் வகையில் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தமிழ்நாடு அரசு எடப்பாடி கே. பழனிச்சாமி முதல்வராக இருந்த போது சட்டப் பேரவையில் லோக் ஆயுக்தா அமைப்புக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது 2018 ஆம் ஆண்டு நான்கு ஆண்டுகள் மட்டுமே ஊழல் குறித்து விசாரணை நடத்தும் படி 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடந்துள்ள ஊழல்கள் குறித்து மட்டுமே விசாரணை நடத்தும் படி நிறைவேற்றப்பட்டது.
முதல்வர், பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட தேர்ந்தெடுக்கும் குழுவும் அமைக்கப்பட்டது. அரசியல்வாதிகள் மற்றும் உயர் அலுவலர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கவும், தீர்ப்பளிக்கவுமான ஒரு அமைப்பாக அது செயல்படுகிறது.மேலும் இந்த அமைப்பு, ஊழலை ஒழிக்கவும், பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கவும், அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்கும் ஒரு முக்கிய அங்கமாகவே செயல்படுகிறது. இந்த லோக் ஆயுக்தா அமைப்பின் வரம்பிற்குள், மாநில முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகிய அனைவரும் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

மேலும், குற்ற நிகழ்வு நடைபெற்ற நான்கு ஆண்டுகளுக்குள் பெறப்படும் புகார் மனுக்களை லோக் ஆயுக்தா விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும். இதில் பெறப்படும் புகார் மனுக்களின் தன்மையையும் குற்றம் சுமத்தப்பட்டப் பொது ஊழியரின் நிலையினையும் பொறுத்து, அந்தப் புகாரை விசாரிக்க, தனது லோக் ஆயுக்தா காவல்துறை எனும் விசாரணைப் பிரிவையோ அல்லது மாநிலத்தின் வேறு ஏதாவதொரு விசாரணை அமைப்பினையோ கோருவதற்கு லோக் ஆயுக்தா அமைப்பிற்கு முழு அதிகாரம் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பி.ராஜமாணிக்கம், லோக் ஆயுக்தா வின் தலைவராக தற்போதுள்ளார் அதற்கு முன் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்றத்தின் நீதிபதி தேவதாஸ் இருந்து பின் ஓய்வு பெற்றார். இதனைத் தெடர்ந்து, இரண்டு நீதித்துறை உறுப்பினர்கள், இரண்டு நீதித்துறை அல்லாத உறுப்பினர்கள் இருக்க வேண்டும் இவர்களின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் என்பதாகும். இதில் ஒரு நீதித்துறை உறுப்பினர் இடம் தற்போது காலியாக உள்ளது.

இந்த உறுப்பினரை தேர்வு செய்வது தொடர்பான குழுவை அமைப்பது தொடர்பான கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சட்ட மன்றப் பேரவைத் தலைவர் பி.எஸ்.அப்பாவு, லோக் ஆயுக்தா தலைவர் நீதிபதி ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்து கொள்ளவில்லை.இது அரசின் முதல்வர் மற்றும் ஆட்சியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்கும் ஒரு அமைப்பாக இருந்து வருகிறது. ஒரு தலைவர், 2 நீதித்துறை சார்ந்த உறுப்பினர்கள், 2 நீதித்துறை சாராத உறுப்பினர்கள் இந்த அமைப்பில் உள்ளனர். அதன்படி தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவராக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ராஜமாணிக்கம் இருந்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். நீதித் துறை சாரா உறுப்பினர்களாக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட நுகர்வோர் விவகாரங்கள் குறை தீர்வு ஆணையத்தின் தலைவர் வி.ராமராஜ், வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முன்னாள் உறுப்பினர் ஆறுமுக மோகன் அலங்காமணி ஆகியோர் இருந்து வருகின்றனர். இரண்டு நீதித்துறை உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இந்த உறுப்பினர் பதவியை நிரப்புவது காலியாக உள்ள நீதித்துறை உறுப்பினரை தேர்வு செய்வது பற்றிய குழுவை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

பேரவைத் தலைவர் பி.எஸ். அப்பாவு, லோக் ஆயுக்தா தலைவர், மனிதவள மேலாண்மை துறை செயலாளர் ர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கவில்லை. ஊழலுக்கு எதிரான வலுவான லோக் ஆயுக்தா சட்டம் மற்றும் மக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் சேவை பெறும் உரிமைச் சட்டம் அமல்படுத்தக் கோரிக்கையுடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடந்த நிலையில் ஊழல் செய்யும் அரசியல் வாதிகள் அலுவலர்கள் தொடர்பான புகார்களை சம்மந்தப்பட்ட நபர்களிடம் கொடுப்பதால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றன. அதனால் ARC கமிட்டி 1966 ஆம் ஆண்டு பரிந்துரையின் அடிப்படையில் 2013 ஆம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட்டது. வலுவான லோக் ஆயுக்தா சட்டம் அமைக்கப்பட்டால் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி அல்லது உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அல்லது அவர்களால் நியமனம் செய்யப்படுகின்ற நீதிபதியின் கீழ் புகார்கள் விசாரணை செய்யப்படும்.
முதலமைச்சர், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உட்பட அரசின் கடைநிலை ஊழியர் வரை A B C D என யார் மீதும் ஒரு சாமானிய மனிதன் ஊழல் முறைகேடுகள் தொடர்பாக புகார் அளித்தாலும் முகாந்திரம் இருந்தால் போதும். ஆதாரம் தேவையில்லை. உடனடியாக லோக் ஆயுக்தா விசாரணை செய்து அவர் முதலமைச்சராக இருந்தாலும் அவர் பதவி பறிக்கப்படும். சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைதாவார்கள். அதன் பிறகே விசாரணை நடைபெற்று தண்டனை வழங்க வழிவகை செய்யும் இந்த அதிகாரமிக்க லோக் ஆயுக்தா.
அரசியல் வாதிகள், அலுவலர்கள் ஒவ்வொரு ஆண்டும் சொத்து விவரங்களை வெளியிடுவது மட்டும் அல்லாமல் அவர்களின் இரத்த சம்மந்தமான உறவுகள் அனைவரின் சொத்து விவரங்களையும் ஆண்டு தோறும் தாக்கல் செய்ய வேண்டும். வருமானத்திற்கு அதிகமாக சொத்து இருந்தால், அந்த சொத்துக்களை முழுவதுமாக லோக் ஆயுக்தா கையகப்படுத்தும். இதன் மூலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்க முடியாதபடி வழிவகை செய்யும் இந்த அதிகாரமிக்க லோக் ஆயுக்தா.
ஆட்சி நடத்திய மற்றும் நடத்தும் அரசியல் வாதிகள், உயர் அலுவலர்கள் சொத்து விவரங்கள் ஆண்டு தோறும் இணையதளத்தில் தங்களது சொத்து விவரங்களை கண்டிப்பாக வெளியிட வேண்டும்.
அனைத்துத் துறைகளையும் விசாரணை செய்வதற்கும், தேவை ஏற்படின் கைது செய்யவும், பதவி பறிப்பு, பணியிடமாற்றம், பணியிடை நீக்கம் செய்வதற்கும் வலுவான லோக் ஆயுக்தாவிற்கு அதிகாரம் இருக்கிறது. அதுபோல் சேவை பெறும் உரிமை சட்டம்
சேவை பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைக்கிறது.
ஒவ்வொரு அரசு ஊழியரும் துறை செய்ய வேண்டிய கடமை என்ன? அந்தக் கடமையை செய்து முடிக்க குறைந்தபட்சம் எத்தணை அலுவலக வேலை நாட்கள் தேவையாக இருக்கும் என்பதை மக்கள் சாசனமாக அரசு அறிவிக்கும்.
பொதுமக்கள் குறைதீர் ஆணையத்தை உருவாக்க வேண்டும்
அரசு துறைகள், அரசு நிதிஉதவி பெறும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் அனைத்தும் இந்த சட்டவரம்புக்குள் வருகின்றன.
குறிப்பிட்ட காலத்திற்குள் மனுதாரரின் மனு மீது நடவடிக்கை இல்லை என்றால் தகுந்த காரணமின்றி சேவையை மறுத்த அல்லது தாமதித்த அரசு அலுவலரின் மாதச்சம்பளத்திலிருந்து ரூபாய்.500/- முதல் ரூபாய்.50,000/- வரை அபராதமாக பிடித்தம் செய்து மனுதாரருக்கு நஷ்ட ஈடாக இந்த சட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
மேலும் அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
இந்தியாவில் இதுவரை 13 மாநிலத்தில் அமல்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களில் அமல்படுத்தவில்லை. ஆனால் மாநிலங்கள் இந்த சட்டத்தை தமிழ்நாடு அரசு இதுவரை அமல்படுத்த முயற்சிக்கவே இல்லை
இதுகுறித்து
சட்ட விழிப்புணர்வுக்காக
K. குருநாதன்
பகளவாடி
கிராம சபை மீட்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்கம் ஒரு அறப்போராட்டம் கடந்த 25-05-2025 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ஊழலுக்கு எதிராக தற்போது உள்ளதை மாற்றம் செய்து வலுவான லோக் ஆயுக்தா சட்டம் மற்றும் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த ஆளும் திமுக அரசு தேர்தலுக்கு முன் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு மாநில அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம், திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில், தமிழ்நாடு கிராமசபை மீட்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்கம் சார்பில் நடைபெற்றது. ஆகையால், அறிவார்ந்த தோழர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளார்கள் பெருவாரியாக மக்கள் இந்த சட்டம் குறித்து அறியவில்லை , உண்ணாவிரதப் போராட்டம் தங்களுக்கானது என மக்கள் யாரும் உணர்வில்லை அதற்குக் காரணம் பல, இதற்கு தீர்வு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஊழல் ஒழிப்புப் போராளி துறையூர் பகலவாடி குருநாதன் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் தீர்வு வந்தால் மட்டுமே நடக்கும் அதுவரை இந்த வலுவிழந்துள்ள்ள அமைப்பு ஊழல் தடுக்க முடியுமா என்பது எழு வினா? பலருக்கும் உண்டு. பெரிய ஊழல் பெருச்சாளிகள் சின்னதாக உள்ள பொறியில் சிக்குவதில் சிரமம் உள்ளது.
கருத்துகள்