முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வலுவில்லாத லோக் ஆயுக்தா சட்டம் என்பது சிறிய பொறியில் ஊழல் வாதிகள் எனும் பெரிய எலிகள் சிக்குமா என்பதே தற்போதய நிலை

தமிழ்நாட்டில் வலுவில்லாத லோக் ஆயுக்தா சட்டம் என்பது சிறிய பொறியில் ஊழல் வாதிகள் எனும் பெரிய எலிகள் சிக்காது


ஆகவே சட்டத் திருத்தம் அல்லது மாற்றம் தேவை என்பது தான் பலரது கருத்து. இந்தியாவின் லோக்பால் சட்டத்திற்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டத்திற்கும் சில முரண்பாடுகள் உள்ள நிலையில் தற்போது தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பு  என்பது ஒரு ஊழல் தடுப்பு ஆணையம் என்ற நிலையில். ஊழலை ஒழிக்கும் வகையில் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தமிழ்நாடு அரசு எடப்பாடி கே. பழனிச்சாமி முதல்வராக இருந்த போது சட்டப் பேரவையில் லோக் ஆயுக்தா அமைப்புக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது 2018 ஆம் ஆண்டு நான்கு ஆண்டுகள் மட்டுமே ஊழல் குறித்து விசாரணை நடத்தும் படி 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடந்துள்ள ஊழல்கள் குறித்து மட்டுமே விசாரணை நடத்தும் படி  நிறைவேற்றப்பட்டது.



முதல்வர், பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட தேர்ந்தெடுக்கும் குழுவும்  அமைக்கப்பட்டது. அரசியல்வாதிகள் மற்றும் உயர் அலுவலர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கவும், தீர்ப்பளிக்கவுமான ஒரு அமைப்பாக அது செயல்படுகிறது.

மேலும் இந்த அமைப்பு, ஊழலை ஒழிக்கவும், பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கவும், அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்கும் ஒரு முக்கிய அங்கமாகவே செயல்படுகிறது. இந்த லோக் ஆயுக்தா அமைப்பின் வரம்பிற்குள், மாநில முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகிய அனைவரும் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

மேலும், குற்ற நிகழ்வு நடைபெற்ற நான்கு ஆண்டுகளுக்குள் பெறப்படும் புகார் மனுக்களை லோக் ஆயுக்தா விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும். இதில் பெறப்படும் புகார் மனுக்களின் தன்மையையும் குற்றம் சுமத்தப்பட்டப் பொது ஊழியரின் நிலையினையும் பொறுத்து, அந்தப் புகாரை விசாரிக்க, தனது லோக் ஆயுக்தா காவல்துறை எனும் விசாரணைப் பிரிவையோ அல்லது மாநிலத்தின் வேறு ஏதாவதொரு விசாரணை அமைப்பினையோ கோருவதற்கு லோக் ஆயுக்தா அமைப்பிற்கு முழு அதிகாரம் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.  சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பி.ராஜமாணிக்கம், லோக் ஆயுக்தா வின் தலைவராக தற்போதுள்ளார் அதற்கு முன் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்றத்தின் நீதிபதி தேவதாஸ் இருந்து பின் ஓய்வு பெற்றார். இதனைத் தெடர்ந்து, இரண்டு நீதித்துறை உறுப்பினர்கள், இரண்டு நீதித்துறை அல்லாத உறுப்பினர்கள் இருக்க வேண்டும் இவர்களின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் என்பதாகும். இதில் ஒரு நீதித்துறை உறுப்பினர் இடம் தற்போது காலியாக உள்ளது.



இந்த உறுப்பினரை தேர்வு செய்வது தொடர்பான குழுவை அமைப்பது தொடர்பான கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சட்ட மன்றப் பேரவைத் தலைவர் பி.எஸ்.அப்பாவு, லோக் ஆயுக்தா தலைவர் நீதிபதி ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்து கொள்ளவில்லை.இது அரசின் முதல்வர் மற்றும் ஆட்சியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்கும் ஒரு அமைப்பாக இருந்து வருகிறது. ஒரு தலைவர், 2 நீதித்துறை சார்ந்த உறுப்பினர்கள், 2 நீதித்துறை சாராத உறுப்பினர்கள் இந்த அமைப்பில் உள்ளனர். அதன்படி தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவராக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ராஜமாணிக்கம் இருந்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். நீதித் துறை சாரா உறுப்​பினர்களாக  நாமக்கல் மாவட்​டத்தைச் சேர்ந்த மாவட்ட நுகர்வோர் விவகாரங்கள் குறை தீர்வு ஆணையத்​தின் தலைவர் வி.ராமராஜ், வருமானவரி மேல்​முறை​யீட்டு தீர்ப்​பா​யத்​தின் முன்​னாள் உறுப்​பினர் ஆறுமுக மோகன் அலங்​காமணி ஆகியோர் இருந்து வருகின்றனர். இரண்டு நீதித்துறை உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இந்த உறுப்பினர் பதவியை நிரப்புவது காலியாக உள்ள நீதித்துறை உறுப்பினரை தேர்வு செய்வது பற்றிய குழுவை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.





பேரவைத் தலைவர் பி‌.எஸ். அப்பாவு, லோக் ஆயுக்தா தலைவர், மனிதவள மேலாண்மை துறை செயலாளர் ர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கவில்லை.               ஊழலுக்கு எதிரான வலுவான லோக் ஆயுக்தா சட்டம் மற்றும் மக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் சேவை பெறும் உரிமைச் சட்டம் அமல்படுத்தக் கோரிக்கையுடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடந்த நிலையில் 
ஊழல் செய்யும் அரசியல் வாதிகள் அலுவலர்கள் தொடர்பான புகார்களை சம்மந்தப்பட்ட நபர்களிடம் கொடுப்பதால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றன. அதனால் ARC கமிட்டி 1966 ஆம் ஆண்டு பரிந்துரையின் அடிப்படையில் 2013 ஆம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட்டது. வலுவான லோக் ஆயுக்தா சட்டம் அமைக்கப்பட்டால் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி அல்லது உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அல்லது அவர்களால் நியமனம் செய்யப்படுகின்ற நீதிபதியின் கீழ் புகார்கள் விசாரணை செய்யப்படும்.
முதலமைச்சர், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உட்பட அரசின் கடைநிலை ஊழியர் வரை A B C D என யார் மீதும் ஒரு சாமானிய மனிதன் ஊழல் முறைகேடுகள் தொடர்பாக புகார் அளித்தாலும் முகாந்திரம் இருந்தால் போதும். ஆதாரம் தேவையில்லை. உடனடியாக லோக் ஆயுக்தா விசாரணை செய்து அவர் முதலமைச்சராக இருந்தாலும் அவர் பதவி பறிக்கப்படும். சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைதாவார்கள். அதன் பிறகே விசாரணை நடைபெற்று தண்டனை வழங்க வழிவகை செய்யும் இந்த அதிகாரமிக்க லோக் ஆயுக்தா.

அரசியல் வாதிகள், அலுவலர்கள் ஒவ்வொரு ஆண்டும் சொத்து விவரங்களை வெளியிடுவது மட்டும் அல்லாமல் அவர்களின் இரத்த சம்மந்தமான உறவுகள் அனைவரின் சொத்து விவரங்களையும் ஆண்டு தோறும் தாக்கல் செய்ய வேண்டும். வருமானத்திற்கு அதிகமாக சொத்து இருந்தால், அந்த சொத்துக்களை முழுவதுமாக லோக் ஆயுக்தா கையகப்படுத்தும். இதன் மூலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்க முடியாதபடி வழிவகை செய்யும் இந்த அதிகாரமிக்க லோக் ஆயுக்தா.

ஆட்சி நடத்திய மற்றும் நடத்தும் அரசியல் வாதிகள், உயர் அலுவலர்கள் சொத்து விவரங்கள் ஆண்டு தோறும் இணையதளத்தில் தங்களது சொத்து விவரங்களை கண்டிப்பாக வெளியிட வேண்டும்.
அனைத்துத் துறைகளையும் விசாரணை செய்வதற்கும், தேவை ஏற்படின் கைது செய்யவும், பதவி பறிப்பு, பணியிடமாற்றம், பணியிடை நீக்கம் செய்வதற்கும் வலுவான லோக் ஆயுக்தாவிற்கு அதிகாரம் இருக்கிறது. அதுபோல் சேவை பெறும் உரிமை சட்டம்

சேவை பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைக்கிறது.

ஒவ்வொரு அரசு ஊழியரும் துறை செய்ய வேண்டிய கடமை என்ன? அந்தக் கடமையை செய்து முடிக்க குறைந்தபட்சம் எத்தணை அலுவலக வேலை நாட்கள் தேவையாக இருக்கும் என்பதை மக்கள் சாசனமாக அரசு அறிவிக்கும்.

பொதுமக்கள் குறைதீர் ஆணையத்தை உருவாக்க வேண்டும்

அரசு துறைகள், அரசு நிதிஉதவி பெறும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் அனைத்தும் இந்த சட்டவரம்புக்குள் வருகின்றன.

குறிப்பிட்ட காலத்திற்குள் மனுதாரரின் மனு மீது நடவடிக்கை இல்லை என்றால் தகுந்த காரணமின்றி சேவையை மறுத்த அல்லது தாமதித்த அரசு அலுவலரின் மாதச்சம்பளத்திலிருந்து ரூபாய்.500/- முதல் ரூபாய்.50,000/- வரை அபராதமாக பிடித்தம் செய்து மனுதாரருக்கு நஷ்ட ஈடாக இந்த சட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

மேலும் அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

இந்தியாவில் இதுவரை 13 மாநிலத்தில் அமல்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களில் அமல்படுத்தவில்லை. ஆனால் மாநிலங்கள் இந்த சட்டத்தை தமிழ்நாடு அரசு இதுவரை அமல்படுத்த முயற்சிக்கவே இல்லை 
இதுகுறித்து 
சட்ட விழிப்புணர்வுக்காக
K. குருநாதன்
பகளவாடி
கிராம சபை மீட்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்கம் ஒரு அறப்போராட்டம் கடந்த 25-05-2025 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை,   ஊழலுக்கு எதிராக தற்போது உள்ளதை மாற்றம் செய்து வலுவான லோக் ஆயுக்தா சட்டம் மற்றும் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த ஆளும் திமுக   அரசு தேர்தலுக்கு முன் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு மாநில அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்,  திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில், தமிழ்நாடு கிராமசபை மீட்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்கம் சார்பில் நடைபெற்றது. ஆகையால்,  அறிவார்ந்த தோழர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளார்கள் பெருவாரியாக மக்கள் இந்த சட்டம் குறித்து அறியவில்லை ,  உண்ணாவிரதப் போராட்டம் தங்களுக்கானது என  மக்கள்  யாரும் உணர்வில்லை  அதற்குக் காரணம் பல, இதற்கு தீர்வு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஊழல் ஒழிப்புப் போராளி துறையூர் பகலவாடி குருநாதன் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் தீர்வு வந்தால் மட்டுமே நடக்கும் அதுவரை இந்த வலுவிழந்துள்ள்ள அமைப்பு ஊழல் தடுக்க முடியுமா என்பது எழு வினா? பலருக்கும் உண்டு. பெரிய ஊழல் பெருச்சாளிகள் சின்னதாக உள்ள பொறியில் சிக்குவதில் சிரமம் உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...