டில்லியில், கடந்த மார்ச் மாதத்தின் மத்தியில் நீதிபதியின் வீட்டில் கணக்கில் வராத, சட்டவிரோதமான மற்றும் காரணம் சொல்ல முடியாத
பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பல நாட்களாக அந்த விஷயம் பொது வெளியில் மக்களால் விவாதிக்கப்பட்டது. அது வெளியில் தெரியாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும். அமைப்புகளில் இருந்து, கறைபடிந்த, கணக்கில் வராத மற்றும் காரணம் சொல்ல முடியாத பணம் கைப்பற்றப்படும் போது, அது யாருடையது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். பணம் வந்த பாதை என்ன?
எங்கிருந்து வந்தது?
பின்னணியில் பெரிய புள்ளிகள் யாரும் உள்ளனரா?
நீதித்துறை அல்லது நீதித்துறைப் பணிகளில் பணம் செலுத்தப்பட்டுள்ளதா?
இந்தப் பிரச்னைகள் அனைத்தும் வழக்கறிஞர்களை மட்டுமல்ல சாமானிய மக்களையும் கோபமடைய வைத்துள்ளது.
ஏன் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை? விசாரணை ஏன் நடத்தப்படவில்லை? என கேள்வி எழுகிறது. ஒரு ஜனநாயகத்தில் சிலர் மட்டும் விசாரணை மற்றும் ஆய்வுக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தால், சட்டத்தின் ஆட்சி மற்றும் சட்டத்தில் சமத்துவம் கடுமையாக சமரசம் செய்யப்படுகின்றன.இரண்டு மாநிலங்களின் நீதித்துறையை உள்ளடக்கிய உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி, நீதித்துறை பணியைச் சார்ந்து, நிர்வாக பணியையும் செய்கிறார். இந்த நிர்வாகப் பணி மிகப்பெரியது இதற்கு நீதிபதிகளுக்கான குழு அனுமதி வழங்கி உள்ளதா?
அதற்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளதா?
அதன் அறிக்கை ஏதேனும் விளைவை ஏற்படுத்துமா?
அந்த அறிக்கையை செயல்படுத்த முடியுமா?
ஒரு நீதிபதியை நீக்கும் வழிமுறை இருந்தால், அதனை நாடாளுமன்ற மக்கள் அவை அல்லது மாநிலங்கள் அவை தான் துவங்க முடியும் என அரசியலமைப்பு கூறுகிறது. இது தான் ஒரே வழியா? அப்படியென்றால், நீதிபதிகள் குழுவானது, FIR.,க்கு மாற்றாக இருக்க முடியாது.
ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீது நாம் உரிமை கோரியிருந்தால் சட்டத்தின் முன் சமத்துவம் இருக்க வேண்டும். குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுனர்கள் கூட பதவியிலிருக்கும் வரை வழக்குத் தொடர்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். இந்த நாட்டில் யாருக்கும் இந்த சலுகை கிடையாது.
என குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்