முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏடிஜிபிஐ கைது செய்து சிறைக்கு அனுப்பி எம்எல்ஏ ஜெகனை விசாரணை வளையத்தில் கொண்டு வந்த நீதிமன்றத்தின் உத்தரவு சபாஷ்

கீழ் வைத்தினாங் குப்பம் (தனித் தொகுதி) சட்ட மன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி

i மக்கள் எதற்காக உங்களுக்கு ஓட்டுப் போட்டார்கள் என்பதை மறந்து நீங்கள் கட்டப் பஞ்சாயத்து செய்யலாமா?

2 விசாரிக்க வந்த காவல்துறையினரை உங்கள் கட்சிக்காரர்கள் தடுப்பது ஏன்?

3 ROLE MODEL ஆக இருக்க வேண்டிய நீங்கள், ஏன் கட்டைப் பஞ்சாயத்து செய்தீர்கள்? யார் உங்களுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது?           4. 200, 300 பேரைக் கூட்டி வந்தால் நீதிபதி பயந்துவிடுவார் என நினைக்காதீர்கள். விசாரணைக்கு ஒத்துழையுங்கள்.

5  நீதிமன்றம் நினைத்தால் 10 நிமிடத்தில் உங்களைக் கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருக்க முடியும்" என்ற நிலையில் கைதான ஏடிஜிபி ஜெயராமன் சிறையில் அடைப்பு

சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராம் திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று 

கைரேகை பதியப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்கு பின் கிளைச்சிறையில் அடைக்கப்படுகிறார்



சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்ற வளாகத்திலேயே ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம், களப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுசு என்ற பையனுக்கும் ஒரு பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நாடகக் காதல் முறையில் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணத்தை முறைப்படி பதிவும் செய்து கொண்டனர். இந்தத் திருமணத்துக்கு, அந்த பெண் வீட்டார் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து  வந்தனர். அதன்படி, கூலிப்படை மூலம் தனுசை கடத்துவதற்கு திட்டம் தீட்டினர். ஆனால், தனுஷ் இல்லாததால் அவரது மைனர் தம்பியை கடத்தி சென்றனர். அந்தச் சிறுவன் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து, அந்தச் சிறுவனை அந்தக் கூலிப்படைக் கும்பல் விட்டு விட்டது. இந்த சம்பவத்தில் புரட்சி பாரதம் என்ற ஒரு கட்சியைச் சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்திக்கும், ஏடிஜிபி ஜெயராமன் என்பவருக்கும் தொடர்பு இருந்தது ஆதாரங்கள் மூலம் தெரியவந்தது. மேலும், சிறுவனைக் கடத்துவதற்கு ஏடிஜிபி ஜெயராமனின் அரசு கார் பயன்படுத்தப்பட்டிருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து, காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்யச் சென்றனர். கீழ்வைத்தினகுப்பம் (தனித் தொகுதி) சட்ட மன்ற உறுப்பினர் 'பூவை(பூவிருந்த வள்ளி) எம். ஜெகன் மூர்த்தியும் சந்தேகத்திற்குரியவராக உள்ள கடத்தல் வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு, தமிழ்நாடு கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (ஆயுதப்படை) எச்.எம். ஜெயராம், திங்கள்கிழமை ஜூன் 16, 2025 இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் .இந்த வழக்கில் ஏடிஜிபி சந்தேக நபர்களில் ஒருவர் என்று காவல்துறையினர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டதை அடுத்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டது. ஜெயராம் 1996-ஆம் ஆண்டில் ஐபிஎஸ் அலுவலர் ஆவார்.



வேலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்வைத்தினகுப்பம் (SC) தனித் தொகுதியில் 2021 ஆம் ஆண்டு அதிமுகவின் 'இரட்டை இலை' சின்னத்தில் போட்டியிட்ட புரட்சி பாரதம் என்ற கட்சியை வழிநடத்தும் சட்ட மன்ற உறுப்பினர் தனது ஆதரவாளர்களை அதிக அளவில் கூட்டி, இந்த வழக்கில் காவல்துறை அவரை விசாரிப்பதைத் தடுத்ததற்காக நீதிபதி பி. வேல்முருகன் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார். அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதி, விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு சட்டமன்ற உறுப்பினருக்கு உத்தரவிட்டார், மேலும் ஜூன் மாதம் 26 ஆம் தேதி அன்று அவரது மனு மீது விசாரணை நடத்தி முடிவெடுக்க முடிவு செய்தார். ஏடிஜிபியைப் பொறுத்தவரை, அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று நீதிபதி கூறினார்.


முன்ஜாமீன் மனு இன்று காலை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டபோது, ​​ஜெகன் மூர்த்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன், தனது கட்சிக்காரருக்கு கடத்தல் வழக்கில் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இருப்பினும், கூடுதல் காரணங்களுக்காக அவரைக் கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை ஆர்வமாக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கடத்தல்


மறுபுறம், கூடுதல் அரசு வழக்கறிஞர் (APP) ஏ. தாமோதரன் நீதிமன்றத்தில், ஆஜராகி லட்சுமி என்ற பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். அவரது மூத்த மகன் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து, மே மாதம் 2025 ல் அந்தப் பெண்ணை 'சுயமரியாதைத் திருமணம்' செய்து கொண்டதாக லட்சுமி தெரிவித்தார். அந்த இளம் பெண்ணின் தந்தை வனராஜா, திருமணத்தை முறித்து, தனது மகளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல, பணியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் பெண் காவலர் மகேஸ்வரியின் உதவியை நாடினார். முன்னாள் காவலர் ஏடிஜிபியிடம் பேசியுள்ளார். அவர், இந்தப் பிரச்சினையை சட்ட மன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தியிடம் எடுத்துச் சென்றுள்ளார்.

அவரின் "கூட்டாளிகள்" லட்சுமியின் 22 வயது மூத்த மகனைக் கடத்த அவரது வீட்டிற்குச் சென்றதாகவும், ஆனால் அவர் வீட்டில் இல்லாததால், மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த 17 வயது மைனரான் இளைய மகனைக் கடத்திச் சென்றதாகவும் ஏபிபி தரப்பில் கூறப்பட்டது. பாதிக்கப்பட்டவரை இரண்டு கார்களில் வந்த ஒரு கும்பல் கடத்திச் சென்றது.


அதைத் தொடர்ந்து, காவல்துறை அந்த இளைஞரைத் தேடத் தொடங்கியபோது, ​​ஏடிஜிபியின் அதிகாரப்பூர்வ கார், அந்த இளைஞரை ஒரு பேருந்து நிலையம் அருகே இறக்கிவிட்டுச் சென்றதாகவும், சோதனையைத் தவிர்ப்பதற்காக அதை ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் ஓட்டிச் சென்றதாகவும் ஏடிஜிபி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மகேஸ்வரியும் வனராஜாவும் ஏடிஜிபியின் அதிகாரப்பூர்வ காரில் பயணம் செய்ததாக ஏபிபி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதுள்ளார் . குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ரூபாய் 7.5 லட்சம் மீட்கப்பட்டுள்ளதாகவும், காவலில் வைத்து விசாரித்தால் மட்டுமே கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.

ஏடிஜிபியை ஏன் கைது செய்யவில்லை என்று நீதிபதி முதலில் அறிய விரும்பியபோது, ​​திருவள்ளூர் மாவட்டக் காவல்துறை முதலில் சட்ட மன்ற உறுப்பினரைக் கைது செய்து, ஏடிஜிபி மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அவரை க்காவலில் எடுத்து விசாரிக்க விரும்புவதாக ஏபிபி தரப்பில் கூறினார். மேலும் சட்ட மன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தி சுமார் 2,000 ஆதரவாளர்களைக் கூட்டி, காவல்துறை அவரைக் கைது செய்யவிடாமல் தடுத்ததாகவும் அவர் கூறினார். அரசியல்வாதிகளின் வீட்டிற்கு வெளியே கூடி, சட்டப்பூர்வமான கடமையைச் செய்வதைத் தடுக்கும் மற்ற ஒவ்வொரு ஆதரவாளர் மீதும் குற்றவியல் சதி மற்றும் உடந்தையாக இருந்ததாக காவல்துறை வழக்குப் பதிவு செய்தால் மட்டுமே, காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்யவிடாமல் தடுக்கும் அரசியல் பிரமுகர்களின் நடைமுறை நிறுத்தப்படும் என்று நீதிபதி வேல்முருகன் கூறினார்.

'முழு ஒத்துழைப்பையும் வழங்குங்கள்'

பின்னர், பிற்பகல் அமர்வில், ஏடிஜிபி ஜெயராமன் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தி . ஆகியோர் சம்மன் அனுப்பப்பட்டு நீதிபதி முன் ஆஜரானபோது, ​​நீதிபதி கூறுகையில், ஒரு எம்.எல்.ஏ. தனக்கு வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும், மேலும் காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்வதைத் தடுக்க கட்டப் பஞ்சாயத்து எனும் கங்காரு நீதிமன்றங்களை நடத்துவது அல்லது தனது ஆதரவாளர்களைக் கூட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

மனுதாரர் விசாரணைக்காக காவல்துறை முன் ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். "உங்களிடம் மறைக்க எதுவும் இல்லையென்றால், நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள் ஏன் இருக்க வேண்டும்? நீங்கள் ஒரு எம்.எல்.ஏ. போய் அவர்கள் கேட்க விரும்பும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்" என்று நீதிபதி சட்டமன்ற உறுப்பினரிடம் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...