புகார் மனுக்கள் மீது உரிய இரசிதுகளை அரசு அலுவலகங்களில் வழங்க வேண்டும் அரசாணை வெளியீடு
தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு வரும் புகார் மனுக்கள் மற்றும் ஜமாபந்தி மனுக்கள் மீதான நடவடிக்கைகளை பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும் செயலாளர், மனிதவள மேலாண்மை துறை சார்ந்த அரசாணை வெளியிடப்பட்டது
தலைமைச் செயலாளர் முருகானந்தம் இஆப உத்தரவு.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் இஆப வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது:
அரசு அலுவலகங்க ளில் நேரடியாக மற்றும் மின்னஞ்சல் வாயிலாக பெறப்படும் குறைகளைவு புகார் மனுக்களின் பரிசீலனை குறித்து மாற்றியமைக்கப்பட்ட நடவடிக்கைகள் வெளியிடப்பட்டன. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட நடைமுறைகளின்படி 3 நாட்களுக்குள் மனுவை பெற்றுக்கொண் டதற்கான ஒப்புகையை ரசிதுகள் மூலம் வழங்குவதுடன் மனு பெற்றப்பட்ட ஒரு மாத காலததிற்குள் குறை களையப்பட வேண்டும். மேலும் ஜமாபந்தி எனும் வருவாய்த் தீர்வாயம் மூலம் மனு பெறப்படும் நாளிலேயே கடந்த ஆண்டுகளில் தீர்வு காணும் நிலை இருந்தது ஆனால் தற்போது அந்த நிலை இல்லை காரணம் இரயத்துவாரி மனுக்களை மட்டுமே வாங்கி தீர்வு கண்ட நிலை மாறியது, தற்போது ஊழல் காரணமாக மாறியுள்ளது.
அரசு அலுவலகங்களில் பெறப்படும் குறைகளைவு மனுக் களை கையாளும் போது அரசாணைகள், அரசு கடிதங்களில் வகுத்த ளிக்கப்பட்ட அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகள் தவறாது கடைபிடிக்கப் பட வேண்டும். மேலும் நடைமுறைகளும், அறிவுறுத்தல்களும் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அனைத்து அரசு அலுவலகங்களும் அலு வலகத்தில் பெறப்படும் குறைகளைவு மனுக்களை பதிவு செய்திட 'குறைகளைவு மனுப்பதிவேடு' அவசியம் பராமரித்தல் வேண்டும்.
அந்த பதிவேட்டில் அம் மனுக்களின் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகளை பதிவு செய்திடல் வேண் டும். அப்பதிவேட்டை மாத இறுதியில் அந்தந்த அலுவலகத் தலைமை அலுவலர் ஆய்வு செய்து நிலுவையில் உள்ள மனுக்களை விரைந்து தீர்வு செய்ய ஆவன செய்திட வேண்டும்.
மேலும் குறைகளைவு மனுப் பதிவேடு அந்தத்துறையின் துறை ரீதியிலான வார. இருவார, மாதாந்திர ஆய்வுப் பணிகளில் மற்றும் மனித வள மேலாண்மை வருடாந்திர ஆய்வுகளின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது. அதன் முழுமையான விபரம் பின்வருமாறு:-மனித வள மேலாண்மைத் (ஏ) துறை
அரசாணை (நிலை) எண்.25 ன் படி
1 அரசாணை (நிலை) எண். 114, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்த்திருத்த (ஏ)த் துறை, நாள்.02.08.2006.
2 அரசாணை (நிலை) எண். 114, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்த்திருத்த (ஏ)த் துறை, நாள்.12.09.2013.
3. அரசுக் கடித எண் 41169/ஏ/2014-1, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்த்திருத்த (ஏ)த் துறை, நாள்.03.11.2014.
4. நீதிப்பேராணை மனு 6 6.20527/2014 இல் சென்னை உயர்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட 01.08.2014 ஆம் நாளிட்ட உத்தரவு.
5. அரசாணை (நிலை) எண்.99, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்த்திருத்த (ஏ)த் துறை, நாள்.21.09.2015.
6. அரசுக் கடித எண் 6112/ஏ2/2018-1, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்த்திருத்த (ஏ)த் துறை, நாள்.16.03.2018.
7. அரசு சிறப்பு வழக்குரைஞர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட கடிதம், நாள். 25.01.2021.
8. அரசுக் கடித எண் 2342/ஏ2/2021-1, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்த்திருத்த (ஏ)த் துறை, நாள்.03.02.2021.
9. தலைமைச் செயலாளரின் நேர்முகக் கடித எண்.1137/CS/SG/2024, நாள் 26.11.2024.
10. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எண்.2261/2024-இல் சென்னை உயர்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட 12.02.2025-ஆம் நாளிட்ட உத்தரவு.
ஆணை:
மேலே ஒன்று முதல் மூன்று வரை படிக்கப்பட்ட அரசாணைகள் மற்றும் அரசுக் கடிதத்தில் குறைகளைவு மனுக்களைக் கையாளுதல் குறித்துப் பல்வேறு அறிவுறுத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2. மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட 0108.2014 ஆம் நாளிட்ட நீதிமன்றத் தீர்ப்பிற்கிணங்க வெளியிடப்பட்ட ஐந்தாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், அரசு அலுவலகங்களில் நேரடியாக மற்றும் மின்னஞ்சல் வாயிலாகப் பெறப்படும் குறைகளைவு மனுக்களின் பரிசீலனை குறித்து மாற்றியமைக்கப்பட்ட நடைமுறைகள் வெளியிடப்பட்டன. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட நடைமுறைகளின்படி மூன்று (3) நாட்களுக்குள் மனுவைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையை வழங்குவதுடன், மனு பெறப்பட்ட ஒரு மாதத்திற்குள் குறை களையப்படல் வேண்டும். மேற்படி நடைமுறைகள், மேலே ஆறாவதாக மற்றும் எட்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதங்களின் வாயிலாக மீண்டும் வலியுறுத்தப்பட்டன.
3. இதனைத் தொடர்ந்து, நீதிப்பேராணை மனு எண்.32798/2024இல் சென்னை உயர்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட 14.11.2024-ஆம் நாளிட்ட உத்தரவின் அடிப்படையில், மேலே ஒன்பதாவதாகப் படிக்கப்பட்ட தலைமைச் செயலாளரின் நேர்முகக் கடிதம் வாயிலாக குறைகளைவு மனுக்களைக் கையாளுதல் குறித்தப் பல்வேறு நடைமுறைகள் மற்றும் அறிவுறுத்தங்களைத் தவறாது பின்பற்றுமாறும், மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்குமாறும், அனைத்துத் துறைச் செயலாளர்களும், மாவட்ட ஆட்சியர்களும் அறிவுறுத்தப்பட்டனர்.
4. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மேலே பத்தாவதாகப் படிக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கீழ்க்காணுமாறு தீர்ப்பு வழங்கியுள்ளது:-
...........This Court expects that such delays shall be avoided in future, so that citizens can get timely responses from from the Government authorities, rather than resorting to legal action. Hereinafter, the Authorities concemed are directed to comply with the directions of this Court in its letter-and-spirit, failing which, this Court will take serious action against those erring officials. Further, if any order is passed by the officials after the filing of the contempt petition, the same will not be considered by this Court.
6. The Registry is directed to send a copy of this order to the Chief Secretary of the Government of of Tamil Nadu, Secretariat, Chennai, who in tum shall issue necessary proceedings to all the Government officials for strict compliance of the orders that would be passed".
5. அரசாணை மற்றும் அரசுக் கடிதங்கள் மட்டுமின்றி நீதிமன்றத் தீர்ப்புகளைக் குறிப்பிட்டுத் தொடர்ந்து அறிவுறுத்தங்கள் வெளியிடப்பட்டிருப்பினும், குறைகளைவு மனுக்களை முறையாகத் தீர்வு செய்தலில் குறைபாடுகள் காணப்படுகின்றன என்பதை மேற்படி 12022025-ஆம் நாளிட்ட மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு சுட்டிக்காட்டுகிறது.
6. எனவே, அரசு அலுவலகங்களில் பெறப்படும் கையாளும்போது மேலே குறைகளைவு மனுக்களைக் படிக்கப்பட்ட அரசாணைகள்/அரசுக் கடிதங்களில் வகுத்தளிக்கப்பட்ட, அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகள் தவறாது கடைபிடிக்கப்பட வேண்டும் என ஆணையிடப்படுகிறது.
7. நடைமுறைகளும், அறிவுறுத்தங்களும் பின்பற்றப்படுவதை உறுதி செய்திட, அனைத்து அரசு அலுவலகங்களும் அலுவலகத்தில் பெறப்படும் குறைகளைவு மனுக்களைப் பதிவு செய்திட, "குறைகளைவு மனுப்பதிவேடு" ஒன்றினை இவ்வரசாணையின் பின்இணைக்கப்பட்ட படிவத்தில் உள்ளவாறு பராமரித்தல் வேண்டும்; அப்பதிவேட்டில், அம்மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பதிவு செய்திடல் வேண்டும்: அப்பதிவேட்டினை மாத இறுதியில் அவ்வலுவலகத் தலைமை அலுவலர் ஆய்வு செய்து நிலுவையில் உள்ள மனுக்களை விரைந்து தீர்வு செய்திட ஆவன செய்திடல் வேண்டும்: மேற்படி "குறைகளைவு மனுப்பதிவேடு", அத்துறையின் துறைரீதியிலான வார /இருவார / மாதாந்திர ஆய்வு மற்றும் மனித வள மேலாண்மை (ஆய்வு)த் துறையின் வருடாந்திர ஆய்வுகளின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் ஆணையிடப்படுகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி) என் உள்ளது.
இது குறித்து காரைக்குடி ஜமாபந்தி எனும் வருவாய் தீர்வாயம் உள்ளிட்ட மனுக்களை அரசு அலுவலர்கள் ஊழல் காரணமாக மனு ரசீதுகள் வழங்காமல் போகவே அது குறித்து பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் சார்பில் இந்திய பத்திரிக்கை ஆசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் அனைத்து இந்தியப் பத்திரிக்கை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் இருந்து புகார்கள் வந்த நிலையில் மேலும் சென்னை பிரஸ் கிளப் மூலம் அதை விழுப்புரம் பிரமுகர்கள் தலைமைச் செயலாளர் கவணத்திற்கு கொண்டு சென்ற நிலை தற்போது இந்த அரசாணை வெளியிடப்பட்டது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில் வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில் கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல் வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான் இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...
ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்.எல்.பி வழங்கும் * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு.. பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது, ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில் முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில் கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...
"அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண் பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால் இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய் பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும். தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல் இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும், கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...
கருத்துகள்