முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலஞ்ச ஒழிப்புத் துறை என்ன போஸ்ட் ஆபிஸா? கண்டித்த உயர்நீதிமன்றம்

வி ஏ ஓ வுக்கு ஜிபேயில் லஞ்சம் ! லஞ்ச ஒழிப்புத் துறை என்ன போஸ்ட் ஆபிஸா?


கண்டித்த உயர்நீதிமன்றம்!தபால் துறையை போல் செயல்படுவதற்காக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை தொடங்கப்படவில்லை, லஞ்ச ஒழிப்புத் துறை வலிமையாக இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை  தெரிவித்தது. கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தும் லஞ்ச ஒழிப்புத் துறையை பலப்படுத்த தமிழ்நாடு அரசு 6 மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. மதுரை எழுமலை அதிகாரிப்பட்டி மலர்விழி, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: "என் கணவர் 2022 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதிகாரிப்பட்டி கிராமத்தில் எங்கள் பரம்பரை சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகள் மோசடியாக பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரித்த போது, தில்லையம்பல நடராஜன் என்பவர் அலுவலர்களுடன் சேர்ந்து கொண்டு எங்கள் பரம்பரை சொத்துகளை மோசடியாகப் பட்டா மாறுதல் செய்தது தெரியவந்ததை சரி செய்ய வருவாய்த் துறை அலுவலர்களைச் சந்தித்தபோது ரூபாய்.2 லட்சம் லஞ்சமாகத் தரும் படி கேட்டனர். அதன் காரணமாக பல தவணைகளில் ரூபாய் .2 லட்சம் வழங்கினேன்.


கடைசியாக, அதிகாரிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மனைவிக்கு ஜீ-பே மூலம் ரூபாய்.45 ஆயிரம் அனுப்பினேன். அதன் பிறகும் கூடுதல் பணம் கேட்டதால், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைமினருக்கு புகார் மனு அனுப்பினேன். அந்தப் புகார் மனுவின் பேரில், பேரையூர் தாலுகா வருவாய் வட்டாட்சியர், எழுமலை சார்-பதிவாளர், அதிகாரிப்பட்டி வருவாய் ஆய்வாளர், அதிகாரிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டப் படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் வாதிட்டார். ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், அரசு ஊழியர்கள் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய முன் அனுமதி பெற வேண்டும். அதற்காக புகார் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டது. மேலும், மனுதாரரின் புகாரில் வாங்கிப் பரிவர்த்தனை மற்றும் துணை ஆதாரங்கள் இணைக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.  அதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: லஞ்சம் கேட்பதும், பெறுவதும் பெரும் குற்றமாகும். இது தொடர்பாக புகார் வந்தால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். புகார்தாரர் ஆதாரங்களையும், துணை ஆவணங்களையும் அளிக்கவில்லை. இதனால், புகாரை ஆட்சியருக்கு அனுப்பினோம் என ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை கூறுவது சரியல்ல நியாயமுமல்ல. புகார்தாரரை அழைத்து விசாரித்திருந்தால், கூடுதல் ஆவணங்களை வழங்கியிருப்பார்.மேலும், புகாரில் ஜீ-பே மூலம் பணம் அனுப்பியதாகக் கூறியுள்ளார். அதைப் பின்பற்றி விசாரணை நடத்தியிருந்தால் உண்மை தெரிய வந்திருக்கும். இதைச் செய்யாமல் இயந்திரத்தனமாக புகாரை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியது சரியல்ல. இது கைதுக்குரிய குற்றமாகும். இதனால் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் விளக்கம் ஏற்கக்கூடியதல்ல

தபால் துறையைப் போல் செயல்படுவதற்காக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை தொடங்கப்படவில்லை. ஆவணங்களை இணைக்கவில்லை என்பதற்காக, ஒரு புகாரை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. உண்மையைக் கண்டுபிடிக்க ஆதாரங்களை சேகரிக்கவும், சோதனை நடத்தவும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை வலிமையாக இருக்க வேண்டும். இத்துறைக்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 611. தற்போது 541 நபர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மாநிலத்தில் 16.93 லட்சம் அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர். ஆண்டுக்கு 15 ஆயிரம் புகார்கள் வருகின்றன. இந்தப் புகார்களை விசாரிக்க தற்போதுள்ள ஊழியர்கள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இதனால் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்தும், கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையை பலப்படுத்த தமிழ்நாடு அரசு 6 மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது விருப்ப கொள்கை அல்ல, அது அரசியலமைப்பு சட்டத்தின் கட்டாயக் கடமையாகும். இந்த வழக்கில் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டாக்கள் சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது. கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடிக்கு அவரை மட்டும் பலிகடாவாக ஆக்க முடியாது. விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மோசடியில் தொடர்புடைய அனைத்து அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரரின் புகாரின் பேரில், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...