முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நடந்தும் பாமக உரிமை மீட்பு பயணம் ஒரே இரவில் தடை விலகியது எப்படி ?

பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் அளித்த புகார் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளைக் காரணம் காட்டி, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்



நடத்தும்"உரிமை மீட்க, தலைமுறை காக்க" எனும் 100 நாள் நடைபயணத்திற்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் தடை விதித்த உத்தரவை அனைத்து மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும், மற்றும் மாநகரக் காவல்துறை ஆணையர்களுக்கும்  அனுப்பினார்.

நேற்று செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் தொடங்கி10 அடிப்படை உரிமைகளை மீட்டெடுத்து, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுவதாக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பயணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள், வியாபாரிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.


இந்த நிலையில் டிஜிபி அறிக்கையில் கூறியதாவது:- பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த மனுவின் அடிப்படையில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனது அனுமதி இல்லாமல் பாமக கொடியையோ, கட்சியின் பெயரையோ அன்புமணி பயன்படுத்தக்கூடாது என்றும், இந்த நடைபயணம் பாமகவில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ராமதாஸ் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இருதரப்பு ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளதால், நடைபயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் பாமக நிறுவனரின் ஒப்புதல் அல்லது அங்கீகாரம் இல்லாமல் அன்புமணியின் 100 நாள் நடைபயணத்திற்கு எந்த நிலையிலும் அனுமதி வழங்கப்படாது என்று டிஜிபி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 உத்தரவின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். நடைபயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி அறிக்கையில் குறிப்பிட்ட நிலையில் நடைப்பயணத்துக்கு தடையில்லை, என பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். மருத்துவர் அன்புமணி ராம்தாஸின் தமிழக உரிமை மீட்பு பயணம் திட்டமிட்டபடி தொடரும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை ஊடகங்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது என பாமக வழக்கறிஞர் பாலு குறிப்பிட்டுள்ளார்.இரவில் நடந்தது தான் என்ன? 


தடை உடைப்பு .. மருத்துவர் அன்புமணி ராமதாஸின் தீரத்திற்கு கிடைத்த திரில் வெற்றிகர நிகழ்வு 

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸின் முதல் நாள் பயணமே அமோக வெற்றி பெற்றவுடன் அரசு தமிழட காவல்துறை மூலம் அடுத்த 99 நாட்கள் நடக்கும் பயணத்திற்கு தடை விதித்தது. அதை அனைத்து மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியது.

உடனடியாக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தரப்பில் எந்தப் பிரச்சனை வந்தாலும் பயணம் தொடரும் என அறிவித்த நிலையில் கூடுதலாக பாமகவின் சமூக நீதி வழக்கறிஞர் பேரவை அணி தயார் நிலையில் இருந்தது.

தடையை மீறி பயணம் தொடர்ந்தால் மருத்துவர் அன்புமணி ராமதாஸுக்கு மேலும் மிகப்பெரிய அளவில் ஆதரவு அலையும் எழுச்சியும் கிடைக்கும்.


நீதிமன்றம் சென்றால் அவர் தான் தலைவர் என மருத்துவர் அன்புமணி ராமதாஸிடம் உள்ள தேர்தல் ஆணையம் வழங்கிய ஆதாரத்தைக் காட்டி அனுமதி பெற்றுவிடுவார்கள் அதோடு மட்டுமில்லாமல் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தான் தலைவர் என நீதிமன்றமே சாட்சி வழங்கி விடும் என்பதால்,







அவசர அவசரமாக ஊடகங்களில் வெளியானது தவறான செய்தி எனவும்  மருத்துவர் அன்புமணியின் நடைப்பயணத்திற்கு தடை இல்லை என அந்தர் பல்டி அடித்துள்ளது அரசியலில் காணும் பொது நீதி அப்பட்டமான உண்மை..காவல்துறை அனுமதி- டிஜிபி அலுவலக தெளிவுபடுத்தல் மெமோராண்டம் இணைப்பில் உள்ளது.  "வண்டு குடைகிற அத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டுதான் இத்தனை சுவையை கூட்டியிருக்கிறது-மாங்கனி " எனும் அண்ணன் கண்மணி குணசேகரன் வார்த்தை தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...