சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஜெஸ்ரில் சிபிஎஸ்இ பள்ளி மாணவன் மர்மமாக உயிரிழந்ததில், பள்ளித் தாளாளர், முதல்வர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பெற்றோர்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவன் மரணம் தொடர்பாக, பள்ளி தாளாளர் சங்கரநாராயணன் (வயது 62), முதல்வர் சிவகாமி (வயது 60), மகன் மகேஸ்வரன் (வயது 22), மற்றும் பள்ளி வாகன மேற்பார்வையாளர் ஜான்பிரிட்டோ (வயது 33) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் . உயிரிழந்த மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தின் மீது சந்தேகம் எழுப்பியுள்ளனர். மாணவன் காரிலிருந்து இறங்கவில்லை என ஓட்டுநர் கூறிய நிலையில், உணவுப் பெட்டி காலியாக இருந்தது எப்படி எனக் கேள்வி எழுப்பினர்.
மாணவன் இறந்தது குறித்து தகவலறிந்த காவல் நிலையத்தினர் நிகழ்விடத்திற்குச் சென்று, இறந்த மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதற்கிடையில், மாணவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சிங்கம்புணரி நான்கு ரோடு சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காரணமாக, சிங்கம்புணரி - திண்டுக்கல் சாலையில் கடைகள் அடைக்கப்பட்டது. மாணவனின் மரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர் சிங்கம்புணரியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனிநபர் ஒருவர் ஜெஸ்ரில் சிபிஎஸ்இ பள்ளி என்ற பெயரில் புதிதாகத் திறந்து.
மதுராபுரி மற்றும் வேங்கைபட்டியைச் சேர்ந்த பிள்ளைகள் படித்து வந்தனர் அதில் பாலமுருகன் மகன் அஸ்விந்த் (வயது 7) இரண்டாம் வகுப்பில் படித்துவருகிறான் நேற்று முன்தினம் பள்ளிக்குப் புறப்பட்ட நிலையில், பள்ளி வாகனம் வராததால், மாற்று ஏற்பாடாக பள்ளியின் சார்பில் காரில் வந்து மாணவர் அஸ்விந்தை அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளியின் பணியாளர்களோ அல்லது வேறு நபர்களோ, சிறுவனின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு மாணவருக்கு வலிப்பு நோய் வந்ததனால், சிங்கம்புணரி தாலுகா தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
அதிர்ச்சியைடைந்த பெற்றோர்கள் சிறுவனைக் காண அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால், முன்னதாகவே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததைக் கேட்டு சிறுவனின் பெற்றோர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து, சிறுவனைப் பார்த்த போது அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது. வாய் மற்றும் மூக்கில் ரத்தம் கசிந்தவாறு இருந்ததனால், சந்தேகமடைந்த சிறுவனின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ள முயன்றனர். (அப்பா படக்காட்சி போல) ஆனால், பள்ளி நிர்வாகத்தின் அனைத்து எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். ஜெஸ்ரில் பள்ளியில் காருக்குள் மூச்சுத்திணறி 2ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியை நடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளனர் சிங்கம்புணரி ஜெஸ்ரில் தனியார் பள்ளியில் ஜூன் 30 ஆம் தேதியில் மர்மமான முறையில் சிறுவன் இறந்த நிலையில் ரத்தக் காயங்களுடன் அவரது உடலை சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் போட்டு விட்டு பள்ளி நிர்வாகத்தினர் ஓடிவிட்டனர். நீதி விசாரணை வேண்டி உறவினர்கள் 7 மணி நேரம் மறியலில் ஈடுபட்ட போது தற்காலிக சமரசம் செய்யப்பட்டு மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
நேற்று காலை மாணவனின் தந்தை பாலமுருகன், உறவினர்கள் போலீஸ் நிலையம் முன் கூடி தெரிவித்த போது மாணவனை அழைத்துச் சென்ற அதே காரில் தான், உடலையும் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அந்தக் காரிலுள்ள தனது மகனின் ஸ்கூல் பேக், சாப்பாடு கொண்டு சென்ற பை ஆகியவற்றை சோதனை செய்ய தடயவியல் அலுவலர் காரைத் திறந்து ஆய்வு செய்த போது மாணவனின் மதிய உணவு டப்பா காலியாக இருந்தது. புத்தக பையை டி.எஸ்.பி., செல்வகுமார் உள்ளே எடுத்துச் சென்றார். அதை வெளியில் வைத்தே திறந்து காட்ட பெற்றோர் வலியுறுத்தினர். அதற்கு டி.எஸ்.பி., மறுத்தார். இதனால் உறவினர்கள் காவல் நிலையத்தில் வாசலில் மறியலில் ஈடுபட்டனர். பேருந்து நிலையம் அருகே பெண்கள் மறியல் செய்தனர். அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், தேவகோட்டை சார் ஆட்சியர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களைச் சூழ்ந்துகொண்டு உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மறியலால் காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அஸ்விந்த் உடலை மருத்துவமனையில் போட்டுவிட்டு பள்ளி நிர்வாகத்தினர் ஓட்டம் பிடித்த நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் ஓட்டுனர் ஜான்பிரிட்டோவிடம் காவல் நிலையத்தில் விசாரித்த போது, பள்ளி வேன் பழுதான நிலையில் 6 மாணவர்களை காரில் அழைத்துச் சென்றதாகவும், பள்ளியில் அஸ்விந்த் காரை விட்டு இறங்காததை கவனிக்காமல் கதவைச் சாத்திவிட்டு சென்று, மாலை கதவைத் திறந்த போது அஸ்வின் உள்ளே மூச்சுத் திணறி இறந்து கிடந்ததாகவும் தெரிவித்துள்ளார்மாணவன் வகுப்புக்கு வராததால் ஆப்சென்ட் போட்டதாக பள்ளி நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த பெற்றோர், எதற்காக தங்கள் குழந்தைக்கு வலிப்பு நோய் வந்தது என்று கூறி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும், மதிய உணவு கொடுத்து விட்ட டப்பாவில் இருந்த உணவை மாணவன் சாப்பிட்டுள்ள நிலையில் எப்படி வகுப்பறைக்கு வராமல் இருக்க முடியும், தண்ணீர் பாட்டில், மூடி எப்படி காருக்குள் தனியாக சிதறிக் கிடந்திருக்கும் என்று கேள்வி எழுப்பினர்.
மாணவனின் சித்தப்பா தினேஷ், தனது 5 வயது மகள், மாணவர் அஸ்விந்த் தன்னுடன் காரில் இருந்து இறங்கி வகுப்பறைக்கு வந்ததாகவும், மதியம் சாப்பிட்டதாகவும் கூறியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மாணவரின் தந்தை பாலமுருகன் கூறும்போது, பள்ளியில் வேறு ஒரு சம்பவத்தில் தனது மகன் இறந்து விட்ட நிலையில் அதை மூடி மறைக்க நிர்வாகம் கட்டுக்கதை கட்டி திசை திருப்பி உள்ளதாகவும், காவல் நிலையத்தில் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் சிங்கம்புணரி காவல் நிலையத்தில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் பள்ளி முதல்வர் சிவகாமி அவரது கணவர் தாளாளர் சங்கரநாராயணன், சிவகாமியின் மகன் மகேஸ்வரன், வாகன மேற்பார்வையாளர் ஜான்பிரிட்டோ ஆகியோரைக் கைது செய்தனர். வாகனம் பறிமுதலானது கைதானவர்களை மதுரை சிறையில் அடைத்தனர்.இதில் பொது நீதி யாதெனில் தகுதிகள் இல்லாத கல்வி நிறுவனங்கள் தனியார் வியாபாரக் கடைகள் போல வந்த நிலை தான் இதுபோன்ற தவறுகள் நடக்கும் நிலை












கருத்துகள்