திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூரில் மத்திய பேருந்து முனையத்தில் பேரூந்துகள் அதிகமான நிலையில் நகரில் பயணத் தேவை அதிகரித்து பற்றாக்குறை நிலவுகிறது
திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூரில் மத்திய பேருந்து முனையத்தை திறந்து
அனைத்து புறநகர பேருந்துகள் மற்றும் நகரப் பேருந்துகள் பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு அணைத்து பேருந்துகளும் இன்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது. , திருச்சிராப்பள்ளியின் லூர்து சாமி பிள்ளை பேரூந்து நிலையம் அடையாளங்களில் ஒன்றாகும், ஏற்கனவே அங்கு செயல்படும் பேருந்துகள் பஞ்சப்பூருக்கு மாற்றப்பட்டது
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 09.05.2025 ஆம் தேதி அன்று திறந்து வைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் பயணிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இன்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது. அதன் விபரம் :
விரைவுப் பேருந்துகள் மற்றும் புறநகரப் பேருந்துகள்.
சென்னை,திருப்பதி,வேலூர்,விழுப்புரம்,காஞ்சிபுரம்,புதுச்சேரி, மார்க்கம்
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் நம்பர்.1 டோல்கேட், பழையபால்பண்ணை,தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்குச் செல்ல வேண்டும். பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.
தஞ்சாவூர்,கும்பகோணம்,வேளாங்கண்ணி,காரைக்கால் மார்க்கம்
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சிராப்பள்ளி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் துவாக்குடி, திருவெறும்பூர், பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்லவேண்டும். பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை, டிவிஎஸ் டோல்கேட், பழைய பால்பண்ணை வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.
விரைவுப்பேருந்துகள் மற்றும் புறநகரப் பேருந்துகள்.
சென்னை ,திருப்பதி,வேலூர்,விழுப்புரம்,காஞ்சிபுரம்,புதுச்சேரி மார்க்கம்
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சிராப்பள்ளி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் நெ.1 டோல்கேட், பழையபால்பண்ணை,தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.
நாமக்கல்,சேலம் ,பெங்களுரு மார்க்கம்
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சிராப்பள்ளி நோக்கி உள்வரும் அனைத்துப் பேருந்துகளும் நம்பர்.1 டோல்கேட், பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை,டிவிஎஸ் டோல்கேட், நம்பர்.1 டோல்கேட் வழியாக திரும்பச் செல்லவேண்டும்.
புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி இராமேஸ்வரம், மார்க்கம்
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சிராப்பள்ளி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் விமான நிலையம், டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழித்தடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.
கரூர்,ஈரோடு,திருப்பூர்,கோயம்புத்தூர் மார்க்கம்
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சிராப்பள்ளி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் சத்திரம் பேருந்து நிலையம், கரூர் புறவழிச்சாலை, சாஸ்திரி சாலை, மாவட்ட நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வ.உ.சி சாலை, மத்தியப் பேருந்து நிலையம், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து இதே வழித்தடத்தில் திரும்பச் செல்லவேண்டும்.மணப்பாறை,திண்டுக்கல்,பழனி,குமுளி மார்க்கம்
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சிராப்பள்ளி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் கருமண்டபம், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்
மதுரை,தூத்துக்குடி,விருதுநகர்,திருநெல்வேலி மார்க்கம்
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சிராப்பள்ளி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். இவை பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்ல வேண்டும். திருச்சிராப்பள்ளி
நகரப் பேருந்துகள்
மத்திய பேருந்து நிலையத்தை முனையமாகக் கொண்டு இயங்கும் அனைத்து நகரப் பேருந்துகளும் மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம் வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். இவை பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்லவேண்டும்.
ஆம்னி பேருந்துகள்
மத்தியப் பேருந்து நிலையத்தின் சுற்றுப்பகுதிகளில் ஒப்பந்த ஊர்தி ஆம்னி பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றக்கூடாது. இவை ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு அருகில் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள காலி இடத்தில் பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும்.
உள் வருகை மற்றும் வெளிச்செல்கை
அனைத்து பேருந்துகளும் பேருந்து முனையத்திற்கு உள்வரும்போது காவல் சோதனை சாவடி எண். 2 (CP-2) வழியாகச் சென்று பேருந்து முனையத்தின் பின்வழியாக உள்ளே வரவேண்டும்.
பேருந்து முனையத்திலிருந்து வெளிச்செல்லும் அனைத்து பேருந்துகளும் (மதுரை மார்க்கம் தவிர்த்து) தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் சந்திப்பு வரை சென்று திரும்பி (U Turn) எடுத்துச் செல்ல வேண்டும்.
பயணிகளுக்கான வசதிகள்
திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான உணவு, சிற்றுண்டி, தேநீர், காபி மற்றும் குளிர்பானங்கள் போன்ற உணவு பொருட்கள் விற்பனைக்கு கடைகள் தேவையான அளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்பேருந்து முனையத்தில் 20 எண்ணிக்கையில் 10 கடைகளும், 12 எண்ணிக்கையில் உணவகங்களும், 10 எண்ணிக்கையில் சிற்றுண்டி கடைகளும் செயல்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் திருச்சிராப்பள்ளி நகரப் பேருந்துகள் நகர் பகுதியில் முன்பிருந்த நிலை இல்லாமல் போதிய அளவு குறைவு ஆகவே நகரில் கூடுதல் பேருந்துகள் தேவை என்பதே மக்கள் கருத்துதிருச்சிராப்பள்ளயில் இதுவரை பரபரப்பாக இயங்கிய லூர்து சாமி பிள்ளை மத்திய பேருந்து நிலையம் 53 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுடன் வெளியூர் போக்குவரத்து சேவையை நிறுத்திக்கொள்கிறது .தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிரதான அடையாளமாகத் திகழ்ந்த மத்திய பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்திற்கு,நாள்தோறும் 1,516 புறநகர் பேருந்துகள் 2,893 முறை வந்து சென்றன. இப்பேருந்து நிலையத்தில் இருந்து 750 மீ. தொலைவில் திருச்சிராப்பள்ளி ரயில்வே சந்திப்பும், 5 கி.மீ. தொலைவில் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையமும் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளி மத்தியப் பேருந்து நிலையம் நாள்தோறும் ஒரு லட்சம் பயணிகளைக் கையாண்டது.
1966-ஆம் ஆண்டு ஏ.எஸ்.ஜி.லூர்துசாமி பிள்ளை நகர்மன்றத் தலைவராக இருந்த போது, மத்திய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, 1972-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முதல்வராக இருந்த பக்வத்சலம் பேருந்து நிலையத்தை திறந்துவைத்தார். இதனால், மத்திய பேருந்து நிலையம் ‘ஏ.எஸ்.ஜி.லூர்துசாமி பிள்ளை பேருந்து நிலையம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயராக இருந்த சாருபாலா தொண்டைமான் காலத்தில், மத்திய பேருந்து நிலையம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது 4.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள மத்திய பேருந்து நிலையம் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்றுள்ளது.இத்தகைய சிறப்புமிக்க 53 ஆண்டுகள் பழமையான மத்திய பேருந்து நிலையம் ஜூலை மாதம் 16 ஆம் தேதி வெளியூர் பேருந்துகள் இயக்க சேவையை நிறுத்திக்கொள்கிறது. வெளியூர் பேருந்துகள் இங்கு வந்து செல்லுமே தவிர, இனிமேல் நகரப் பேருந்துகள் மட்டுமே இங்கிருந்து இயக்கப்பட உள்ளன.
கருத்துகள்