நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனுக்கு கடுமையான
கண்டன தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், நாளை ஜூலை மாதம் 10- ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டது. சென்னை மாநகராட்சியின் 5-வது மண்டலம் இராயபுரம் பகுதியில் விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்ககா கோரி முன்னாள் மாநகராட்சி கவுன்சிலரும் வழக்கறிஞருமான ருக்மாங்கதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க 2021-ஆம் ஆண்டில்
உத்தரவிட்டிருந்தது.
ஆனால் இந்த உத்தரவை சென்னை மாநகராட்சி முறையாக செயல்படுத்தவில்லை என வழக்கறிஞர் ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
அதை ஜூலை மாதம் 8-ஆம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஶ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனுக்கு ரூபாய்.1 லட்சம் அபராதம் விதித்தது. இந்த அபராதத் தொகையை தமது ஊதியத்தில் இருந்து அடையாறு புற்று நோய் மருத்துவமனை வங்கிக் கணக்கில் அபராதத் தொகையை டெபாசிட் செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர், அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்ற உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் இரவீந்தரன், தலைமை நீதிபதி ஶ்ரீராம் அமர்வில் இன்று 9-ஆம் தேதி முறையிட்ட போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ஶ்ரீராம், வழக்கறிஞர்கள் தவறான பிரமாணப் பத்திரத்தைக் கொடுத்திருந்தாலும் கூட, சென்னை மாநகராட்சி ஆணையர் படித்துப் பார்த்துத் தான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். அப்படி செய்யவில்லை எனில் மாநகராட்சியின் ஆணையராக இருக்கவே அவர் தகுதி இல்லாதவர்; ஐ.ஏ.எஸ். உயர் அலுவலர் (அதிகாரி) என்றால் நீதிமன்றத்தை விட மேலானவர் என நினைக்கிறாரா? நீதிமன்றத்தின் அதிகாரத்தை நாங்கள் காட்டவா? எனக் காட்டமாக சாடிய நிலையில்.
மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் நேற்று ஏன் ஆஜராகவில்லை? எனக் கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி ஶ்ரீராம், உரிய பிரமாணப் பத்திரத்துடன் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் நாளை ஜூலை மாதம் 10- ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டது. அத்துடன் அபராதம் குறித்து பின்னர் முடிவு செய்யலாம் என்றும் தலைமை நீதிபதி ஶ்ரீராம் தெரிவித்தார் ர்.



கருத்துகள்