முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உண்மைத் தகவல் வழங்காத அலுவலருக்கு ரூபாய் 25,000 ஆணையத்தில் அபராதம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊழல் காரணமாக உண்மையை மறைத்து பொய்யான பதிலை வழங்கிய அலுவலர்கள் மீது  துறை ரீதியான நடவடிக்கை


எடுக்க மாநிலத் தகவல் ஆணையம் உத்தரவு.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா கட்டக்காமன்பட்டி சரவணன் நிலக் கோட்டையில் தனியார் நிறு வனத்தால் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் தகடுகள் (சோலார்)குறித்து திண்டுக்கல் உதவி ஆட்சியர், நிலக்கோட்டை வருவாய் வட்டாட்சியர். மற்றும் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஆகியோருக்கு 2022-ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டம்  2005 ன் கீழ் சில தகவல்களைக் கோரி படிவம் A அளித்தார்.


அதன்படி, அவருக்கு தகவல்கள் வழங்கப்பட்டு உள் ளது. ஆனால் அவர், தனக்கு பொய்யான தகவல்களை அலுவலர்கள் வழங்கியதாகக் கூறி  சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். விசாரித்த  உயர்நீதிமன்றம், மனுதாரர் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மாநிலத் தகவல் ஆணையம் விரிவான விசாரணை நடத்தி தவறு செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன்படி, இந்த விவகாரம் குறித்து மாநிலத் தகவல்  ஆணையர் தாமரைக்கண்ணன் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து ஆணையம் பிறப் பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- தகவல் உரிமை சட் டத்தின் கீழ் மனுதாரர் 2022- ஆம் ஆண்டு தகவல் கோரிய போது பணியிலிருந்த பொதுத்தகவல் அலுவலரான நிலக்கோட்டை தலைமையிடத்து துணை தாசில்தார், மேல்முறையீட்டு அலுவலரான தாசில்தார், திண்டுக்கல் உதவி ஆட்சியர் மற்றும் தற் போதைய உதவி ஆட்சியர் ஆகியோர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கி இருப்பது ஊர்ஜிதமா கிறது.

எனவே, மனுதாரருக்கு வழங்கிய தகவல்களை வரு வாய்த்துறை ஆவணங்களு டன் மீண்டும் ஒப்பிட்டு உண்மையான தகவல்களை அவருக்கு வழங்க வேண்டும்.

மனுதாரர் 2022-ஆம் ஆண்டு கோரிய தகவல்களுக்கு உரிய காலத்துக்குள் தகவல் வழங்காத அப்போதைய தலைமையிடத்து துணை தாசில்தாருக்கு ரூபாய். 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

மனுதாரரின் ஒரு கேள்விக்கு அலுவலர்கள் அளித்த பதில் வெவ்வேறு விதமாக இருப்பதால் இதில் எது உண்மை எனக் கண்டறிந்து பொய்யான தகவலை அளித்த அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படு கிறது. இந்தப் பரிந்துரையை திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் காலதாமதமின்றி நிறைவேற்றி அது     குறித்த அறிக்கையை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மூலம் ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி நேரில்  ஆஜராகி அளிக்க வேண்டும்."

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.    இந்த நிலையில் தமிழ்நாட்டில் அணைத்து இடங்களில் அரசு பணி செய்து வருபவர்களிடம்        மக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு  எந்த விதமான நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்று தான் சாமானிய மக்கள் நீதிமன்றம் வரை செல்கின்றனர் ஆனால் நீதிமன்றமும்   சம்பந்தப்பட்ட அலுவலர் மீது எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்காமல் மனுவிற்கு மட்டும் சிலவற்றில் தீர்வு காண்கிறது அதுவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தால் தான் அந்த நீதியும் கிடைக்கும் ஒவ்வொரு சாமானிய  மனிதனும் நீதி வேண்டி உயர்நீதி மன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டிய அவல நிலைக்கு  தள்ளப்பட்ட நிலையில் மக்கள் உள்ளனர் அரசாணையை பின்பற்றி மனு மீது   நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் மீது நீதிமன்றம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் அதற்கான சட்டம் கொண்டு வர வேண்டும் அதுவே சேவை பெறும் உரிமைச் சட்டம் இதை தெரிந்து கொண்டு நீதிமன்றமும் வேடிக்கை பார்க்குமானால் காலம் தாழ்த்தி வரும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பது புலனாகிறது 2015 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிக்கிறது அரசாணை குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அதிகபட்சம் 30 நாட்கள் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது அதே அரசாணை 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் எவ்வித மாற்றமும் செய்யாமல் வெளியிடப்படுகிறது 2015 ஆம் ஆண்டு முதல் இன்று வரை எத்தனை  வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அதன் மீது உயர்நீதிமன்றம் எத்தனை வழக்குகளில் அந்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்திருக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் அரசாணை முழுமையாக அமல்படுத்தபட்டிருக்கும் உயர் நீதிமன்றங்கள் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதே ஒரு சாமானிய மனிதனின் வேண்டுகோள் நீதிமன்றத்தைத் தவிர ஆண்டவரால் கூட இந்த நாட்டை காப்பாற்ற முடியாது சாமானிய மனிதனின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் என்பதை நீதிமன்றம் உணர வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...