தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊழல் காரணமாக உண்மையை மறைத்து பொய்யான பதிலை வழங்கிய அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை
எடுக்க மாநிலத் தகவல் ஆணையம் உத்தரவு.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா கட்டக்காமன்பட்டி சரவணன் நிலக் கோட்டையில் தனியார் நிறு வனத்தால் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் தகடுகள் (சோலார்)குறித்து திண்டுக்கல் உதவி ஆட்சியர், நிலக்கோட்டை வருவாய் வட்டாட்சியர். மற்றும் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஆகியோருக்கு 2022-ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 ன் கீழ் சில தகவல்களைக் கோரி படிவம் A அளித்தார்.
அதன்படி, அவருக்கு தகவல்கள் வழங்கப்பட்டு உள் ளது. ஆனால் அவர், தனக்கு பொய்யான தகவல்களை அலுவலர்கள் வழங்கியதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மாநிலத் தகவல் ஆணையம் விரிவான விசாரணை நடத்தி தவறு செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன்படி, இந்த விவகாரம் குறித்து மாநிலத் தகவல் ஆணையர் தாமரைக்கண்ணன் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து ஆணையம் பிறப் பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- தகவல் உரிமை சட் டத்தின் கீழ் மனுதாரர் 2022- ஆம் ஆண்டு தகவல் கோரிய போது பணியிலிருந்த பொதுத்தகவல் அலுவலரான நிலக்கோட்டை தலைமையிடத்து துணை தாசில்தார், மேல்முறையீட்டு அலுவலரான தாசில்தார், திண்டுக்கல் உதவி ஆட்சியர் மற்றும் தற் போதைய உதவி ஆட்சியர் ஆகியோர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கி இருப்பது ஊர்ஜிதமா கிறது.
எனவே, மனுதாரருக்கு வழங்கிய தகவல்களை வரு வாய்த்துறை ஆவணங்களு டன் மீண்டும் ஒப்பிட்டு உண்மையான தகவல்களை அவருக்கு வழங்க வேண்டும்.
மனுதாரர் 2022-ஆம் ஆண்டு கோரிய தகவல்களுக்கு உரிய காலத்துக்குள் தகவல் வழங்காத அப்போதைய தலைமையிடத்து துணை தாசில்தாருக்கு ரூபாய். 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
மனுதாரரின் ஒரு கேள்விக்கு அலுவலர்கள் அளித்த பதில் வெவ்வேறு விதமாக இருப்பதால் இதில் எது உண்மை எனக் கண்டறிந்து பொய்யான தகவலை அளித்த அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படு கிறது. இந்தப் பரிந்துரையை திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் காலதாமதமின்றி நிறைவேற்றி அது குறித்த அறிக்கையை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மூலம் ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி நேரில் ஆஜராகி அளிக்க வேண்டும்."
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் அணைத்து இடங்களில் அரசு பணி செய்து வருபவர்களிடம் மக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு எந்த விதமான நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்று தான் சாமானிய மக்கள் நீதிமன்றம் வரை செல்கின்றனர் ஆனால் நீதிமன்றமும் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்காமல் மனுவிற்கு மட்டும் சிலவற்றில் தீர்வு காண்கிறது அதுவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தால் தான் அந்த நீதியும் கிடைக்கும் ஒவ்வொரு சாமானிய மனிதனும் நீதி வேண்டி உயர்நீதி மன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் மக்கள் உள்ளனர் அரசாணையை பின்பற்றி மனு மீது நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் மீது நீதிமன்றம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் அதற்கான சட்டம் கொண்டு வர வேண்டும் அதுவே சேவை பெறும் உரிமைச் சட்டம் இதை தெரிந்து கொண்டு நீதிமன்றமும் வேடிக்கை பார்க்குமானால் காலம் தாழ்த்தி வரும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பது புலனாகிறது 2015 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிக்கிறது அரசாணை குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அதிகபட்சம் 30 நாட்கள் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது அதே அரசாணை 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் எவ்வித மாற்றமும் செய்யாமல் வெளியிடப்படுகிறது 2015 ஆம் ஆண்டு முதல் இன்று வரை எத்தனை வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அதன் மீது உயர்நீதிமன்றம் எத்தனை வழக்குகளில் அந்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்திருக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் அரசாணை முழுமையாக அமல்படுத்தபட்டிருக்கும் உயர் நீதிமன்றங்கள் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதே ஒரு சாமானிய மனிதனின் வேண்டுகோள் நீதிமன்றத்தைத் தவிர ஆண்டவரால் கூட இந்த நாட்டை காப்பாற்ற முடியாது சாமானிய மனிதனின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் என்பதை நீதிமன்றம் உணர வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுக்கிறது.

கருத்துகள்