முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குப்பைக் குத்தகை வரவு ராம்கி ரெட்டிக்கு ஆனால் செலவு மட்டும் அரசுக்கு

குப்பைக் குத்தகை வரவு ராம்கி ரெட்டிக்கு ஆனால்  செலவு மட்டும் அரசுக்கு    சென்னை ரிப்பன் மாளிகை


முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது விவகாரத்தில். 

13 நாட்களாக நடந்த தொடர் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். அவர்கள் கேட்கும் சலுகைகள் எங்கே?

அவர்கள் கேட்பது  மாநகராட்சியின்_ -ஊழியர்களாகத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே 

அரசு அறிவித்த சலுகைகள் தனியார் காண்ட்ராக்ட் ஒப்பந்ததாரர்களிடம்

வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கிடைக்குமா 



அதோடு பணிப் பாதுகாப்பு மற்றும் சம்பளம் அரசு உறுதி செய்யுமா என்பதே அனைத்துக் கட்டப் பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில் காவல் துறையினர் குவிப்புக்குப்- பின்னர் கைது. நடவடிக்கைகள் அரசு பணிக்கு சேர்ந்த பின் தனியார் குத்தகை நிறுவனங்கள் மூலம் பணி என்பதை தொழிலாளர் நலச் சட்டம் அனுமதிக்கிறதா என்பது இங்கு எழு வினா ?


"தூய்மைப் பணியாளர்களை அப்புறப் படுத்துக" - என உயர்நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் கைது நடவடிக்கை என்பதாகத் தான் தகவல்.

அரசு தானாக இதைச் செய்யவில்லை என்பதாக கூறலாம் ஆனால் 

இரவு 11.45 மணி தொடங்கியது கைதும் தூய்மைப் பணியாளர்களை அகற்றும் பணியும். கைகளில் பிளாஸ்டிக் தேசிய கொடிகளுடன், கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்கள் ஆதரவில் இருந்த போராட்டக் காரர்களை காவல் வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். பெண்களில் சிலர் அதே இடத்தில் மயங்கியும்,  விழுந்தனர்.  குரலற்றவர்களின் குரல் மாநில அரசுக்குக் கேட்காமல் போனது.  ரிப்பன் பிரபு கட்டிய மாளிகை போராடும் இடமல்ல என உயர் நீதிமன்றம் தீர்ப்பு ஆனால் ரிப்பன் என்ற அன்னியர் கட்டிய மாளிகை அதிகமான ஊழல் கமிஷன் வாங்கும் இடமாகவே மக்கள் பார்வைக்குத் தெரிகிறது. கமிஷன் வாங்க இடையூறு செய்யாமல் விலகிச் செல்ல வேண்டும் 



அவர்கள் "அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை".உண்மையிலேயே அவர்கள் அடிப்படை உரிமைப் போராட்டம் மெய் சிலிர்க்கிறது!

நிச்சயம் இந்த போராட்டம் வரலாறு. சென்னை அப்போது தான் ஒரு நல்ல தலைவர் இல்லாத நிலை உணர்ந்து சீராக நடைபெற்றது.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் இருந்த ஒழுங்கமைவும், கட்டுப்பாடும், இரவு, பகல் எனத் தொடர்ந்து குடும்பத்தை விட்டு  அமர்ந்திருந்த பெண்களின் மன உறுதியும் சுயநலம் உள்ள பலரை வியப்பில் ஆழ்த்தின.

இவர்கள் இயற்கை உபாதைகளை எப்படியெல்லாம் சமாளித்திருப்பார்கள் ? இந்தப் 13 நாட்களுக்கான சம்பள இழப்பு ஒரு புறமும், மறு புறம் தினசரி உணவுக்கான செலவுகளையும் எப்படிச் சமாளித்திருப்பார்கள்? யார் செய்தது என பார்க்க வேண்டும் 'இதுவல்லவா? பட்டாளி வர்க்கத்தின் அசல் போராட்டக் குணம்' என பலர் மனம் பெருமிதப்பட்டது.



விரிந்த முக்கிய சாலையின் ஒரு ஓரமாக பிளாட்பாரத்தில்  தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மழை மற்றும் வெயில் மத்தியில் நடந்த இந்தப் போராட்டம் பொது மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் தரவில்லை. சாலைப் போக்குவரத்து அதன் இயல்பில் நடந்து கொண்டிருந்ததை  அங்கு சென்றவர்கள் நாம் உள்ளிட்ட அனைவரும் உணர்ந்தோம்.


இப்படி இருக்க, இந்தப் போராட்டத்தை பொதுமக்களுக்கு இடையூறு என்று வழக்கு போட்டதே தவறானது.  உண்மையை யாரும் உறுதிபடுத்திக் கொள்ள முடியும். அப்படி இருக்க ஒரு வடிகட்டிய அரசு தரப்பில் வந்த மெய்த் தன்மை காணாத பதில் அடிப்படையில் இந்த போராட்டத்தை நீதிமன்றம் தடை செய்தது மிகவும் வேதனைக்குரியது என போராட்டத்தில் பங்கேற்ற பலரது வாதம்.

மேலும் நமது அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்கு போராடும் உரிமையைத் தந்துள்ளது. தொழிலாளர்களுக்கு தங்கள் உழைப்பிற்கான கூலியை வலியுறுத்த உரிமையுள்ளது. இதையும் மீறி நீதிபதி போராட்டத்திற்கு தடை விதித்தது துரதிர்ஷ்டவசமானது எளியோருக்கு இழைக்கப்பட்ட கொடுமை. அடுத்ததாக 

ஆட்சியாளர்கள்  தாங்களே முடிவெடுத்து இந்தப் போராட்டதை ஒடுக்கினால் மக்களிடம் கெட்ட பெயர் என்பதால், நீதிமன்றம் வழியே இதை அரசியல் சூட்சுமமாகச் செய்த நிலையில். பிரதமரையோ, முதல்வரையோ நாம் கடுமையாக விமர்சிப்பதைப் போல, நீதிபதியை யாரும் விமர்சிக்க முடியாது. 

நள்ளிரவில் கைது செய்யும் போது அந்த தாய்மார்களிடையே ஏற்பட்ட வேதனையையும் கொந்தளிப்பும், அவர்கள் கண்களில் வழிந்த கண்ணீரும் பார்க்கையில். நெஞ்சை பதைபதைக்க வைத்தது. தாய்மார்களின் கதறலை பொருட்படுத்தாமல் குண்டுக்கட்டாக அவர்கள் தூக்கி செல்லப்பட்ட போதும், சிலர் மயங்கி விழுந்து ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட போதும்  அறியாமல் பலருக்கும் உள்ளம் துடித்து அழுகை பீறிட்டது.

இந்தப் போராட்டத்தின் இறுதி நிகழ்வை பெரும்பாலான சில காட்சி ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் இருட்டடிப்பு செய்த போதிலும், சமூக ஊடகங்களில் பலர் நேரலை செய்தனர். இந்தப் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை தந்ததற்காக கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த வளர்மதியும், நிலவு மொழியும் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டது குறித்து பலரும் அதிர்ச்சியானார்கள்.

 ஆந்திரப்வில் இருக்கும், ஊரை அடித்து உளையில் போடும் ஒரு கார்ப்பரேட் ராம்கி ரெட்டி சம்பாதித்து கொழுப்பதற்காக, காலம் காலமாக உழைத்த நம் மண்ணின் பெண்கள் தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் நியாயமா என பல கட்சியின் குரல் கேட்க சிலர் வாய் மூடி வேடிக்கை பார்க்க ? அதுவும் ஒரு வகை அரசியல் தான் 

எத்தனையெத்தனை வழிமுறைகளில் டாஸ்மாக், மணல் குவாரிகள், பொதுப் பணித் துறை மற்றும் சாலைப் பணிகள் ஆகியவற்றில் சம்பாதித்து கொள்கிறீர்களே போதாதா? இந்த ஏழைகளை ஒட்டுமொத்தமாக ஒப்பந்ததாரருக்கு விற்று கமிஷன் பார்த்து காசு பார்க்காவிட்டால், என்ன குறைந்துவிடப் போகிறீர்கள்.? என மதுவந்தி உள்ளிட்ட பலர் வினா எழுப்ப 

‘திமுக ஆட்சியில் நாம் பாதுகாக்கப்பட்டோம் . நமக்கு தந்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றினார்’ என காலமெல்லாம் நன்றி பாராட்டி இருப்பார்களே.

13 நாள் போராட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கமுக்கமாக தொடர்ந்து மெளனத்தைக் கடைபிடிப்பது அவரது அதிகார பலத்தை கொண்டு அடக்குவது கோழைத்தனமாகும். இரண்டில் 

ஒரு கம்யூனிஸ்டு மற்றும் விசி.கவின் தூய்மை பணியாளர் அமைப்புகள் இந்த போராட்டத்தில் பங்கேற்காமல் வெறுமனே ஒரு நாள் வந்து வாழ்த்திச் சென்றது முறையல்ல. நீங்கள் வழி நடத்தி, தலைமை தாங்கி இருக்க வேண்டாமா?

இதற்கிடையில் சின்மயி, மதுவந்தி, அம்பிகா.. போன்றவர்கள் வந்து ஆதரித்துச் சென்றதை வைத்து திமுக சார்பில் ஆதரவாளர்கள் தூய்மை பணியாளர் போராட்டத்தை களங்கப்படுத்துகிறார்கள். போராடும் எளியோருக்கு உற்ற துணையாக இருக்கத் தவறியது  யார் குற்றம்…? 

இந்தச் சூழலில் மனசாட்சியுள்ள திமுகவினர் தூய்மை பணியாளர்களுக்கு நியாயம் வழங்கக் கோரி, தங்கள் கட்சித் தலைமைக்கு  நிர்பந்தம் தந்திருக்கலாமே. அன்று 

Police crackdown against Sanitation workers Protest, CPM announces protest against police action. 

Protest will take place at 6 pm.11 ஜோன்ல , 2 ஜோன் மட்டும் தான் அரசுக்கு ஆதரவு தரல மற்ற 9 ஜோன் அரசு தரப்பு நடவடிக்கைக்கு ஒத்துக்கிட்டாங்க. 

12 சுற்றுக்கு மேல பேச்சு வார்த்தை நடத்தி இருக்கு.

70 சதவீதம் பணியாளர்கள் இதற்கு உடன்படுறாங்க.

அப்போது ஏன் இந்த 2 zone ல் மட்டும் இந்தப் பிரச்சினை நடக்கிறது?  யாரு இதை வழி நடத்துறாங்கனு தெரியவில்லையே? தூய்மைப்பணியாளர் போராட்டம் 

தொடர்ந்து பத்தாவது நாளாக நாட்டின் கடைநிலை கூட அல்ல; கடைசி நிலை ஊழியர்கள், வீதியில் இறங்கி அல்ல; வீதியில் கிடந்தே போராடி விட்டார்கள்.

துப்புரவு என்பது தூய்மை என்று ஆனதைத் தவிர வேறெந்த வாழ்வியல் முன்னேற்றமும் காணாதவர்கள், இவர்கள்.

தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் கூலியாக மாதம் 22 ஆயிரத்து 950 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி 2025 முதல் சென்னை ராயபுரம், திரு.வி.க நகர் மண்டலங்களின் தூய்மைப்பணிகள் தனியார் கைகளில் கொடுக்கப் பட்டிருக்கிறது. சம்பளமாக மாத்துக்கு 16 ஆயிரத்து 950 ரூபாய் .

தண்டையார்பேட்டை, அண்ணா நகர், அம்பத்தூர் ஏரியாக்கள், அடுத்ததாக

 குறி வைக்கப் பட்டிருக்கிறது. அதிமுக ஆட்சியில் 11 மண்டலங்கள் இப்படி தனியார் கைகளுக்குப் போய்விட்டது.

அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி கே. பழனிசாமி இப்போது என்ன நியாயம் பேசுகிறாரோ, அதைத்தான் திமுக தலைவரான முதல்வர். மு.க.ஸ்டாலின் அப்போது பேசினார். "தி.மு.க ஆட்சி அமைந்ததும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் நல்ல காலம் ஏற்படும்" என்றார்.

 நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில் 

வேலை பார்த்து வந்த இரண்டாயிரம் பேரை எந்த நிபந்தனையும் இல்லாமல், தினக்கூலியாக 750 ரூபாய் சம்பளத்தில் சேர்த்துக்கொள்ள 'தனியார்' ஒப்பந்த நிறுவனத்துக்கு தாயுள்ளத்தோடு பரிந்துரை செய்யப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. 

"குடுத்தத வாங்கிட்டு வேலையைப் பாப்பியா" என்று யாரும் சொன்னார்களா, தெரியவில்லை.

தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர் மண்டலங்களைத் தொடர்ந்து நெரிசல் மிகுந்த வண்ணாரப்பேட்டை,

பிராட்வே, மண்ணடி, எழும்பூர், புதுப்பேட்டை ஏரியாக்களும் அகற்றாத குப்பை கூளங்களால் லேசாக துர்நாற்றம் வீசத் தொடங்கியிருக்கிறது. வானிலை அறிக்கை சொல்வது போல, மழைப் பொழிவு நான்கு நாள் தொடர்ந்தால் நாற்றத்தோடு சுகாதார சீர்கேடும் மொத்தமாய் சேர்ந்து கொள்ளும்.

மருத்துவ முகாம் கட்டாயம் தூய்மைப் பணியாளர்கள் சார்ந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் நடந்த வாதமும், உத்தரவும்  முழு விவரம் ரிப்பன் பிரபு மாளிகை முன்பு போ​ராட்​டம் நடை​பாதை, சாலையை மறித்து போராடு​வதை ஒரு​போதும் அனு​ம​திக்க முடி​யாது எனத் தெரி​வித்​துள்ள சென்னை உயர் நீதி​மன்றத்தின் தலைமை நீதிபதி அமர்​வு, ரிப்​பன் மாளிகை முன்பாகப் போராட்​டம் நடத்தி வரும் தூய்​மைப் பணியாளர்​களை உடனடி​யாக அங்​கிருந்து அப்​புறப்​படுத்த காவலதுரையினருக்கு உத்​தர​விட்​டது.

சென்னை மாநக​ராட்​சி​யின் 5, 6-வது மண்​டலங்​களில் தூய்​மைப் பணிக்​காக ரூபாய். 276 கோடிக்​கான ஒப்பந்​தத்தை ராம்கி என்ற ஆந்திரப் பிரதேச தனி​யாரிடம் ஒப்​படைப்​பதை எதிர்த்து தூய்மைப் பணி​யாளர்​கள் மாநகராட்சி அலு​வல​கம் முன்​பாக கடந்த 13 நாட்​களுக்​கும் மேலாக தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டனர்.

சென்னை மாநக​ராட்சி ரிப்​பன் மாளிகை முன்​பாக சட்​ட​விரோத​மாக நடை​பாதை மற்​றும் சாலையைமறித்து பொது​மக்​களுக்கு இடையூறு ஏற்​படுத்தி வரும் தூய்​மைப் பணி​யாளர்​களை அங்​கிருந்து அப்​புறப்​படுத்த கோரி தேன்​மொழி என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி எம்​.எம்​. ஸ்ரீவஸ்​தவா, நீதிபதி சுந்​தர்​மோகன் அமர்​வில் இந்த வழக்கு நேற்று முன்தினம் விசா​ரணைக்கு வந்​த போது நடந்த வாதப் பிரதி வாதங்கள் குறித்த விபரம். மனு​தா​ரர் தேன்மொழி தரப்​பில் தாக்கல் செய்த மனுவானதில்  மூத்த வழக்​கறிஞர் வி.​ராக​வாச்​சா​ரியின் வாதத்தில்: தூய்​மைப் பணி​யாளர்​கள் 13 நாட்​களாக நடத்தி வரும் போராட்​டத்​தால் தேவையற்ற பிரச்​சினை​கள் ஏற்​பட்டு வரு​கின்​றன.அரசு தரப்​பில் ஆஜரான அரசு கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் ஜெ.ர​வீந்​திரன் வாதத்தில்: சட்​ட​விரோதப் போராட்​டத்தைக் கைவிட்டு நடை​பாதையை காலி செய்ய வேண்​டும் என காவலதுறை தரப்​பில் ஆகஸ்ட் மாதம்.7 ஆம் தேதி அன்று நோட்டீஸ் பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. தூய்​மைப் பணி​யாளர்​கள் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் ஆர்​.சங்​கரசுப்​பு வாதிடுகையில் : மாநக​ராட்சி அலு​வல​கத்​தில் பணி​யாற்றி வந்த துப்​புரவுத் தொழிலா​ளர்​கள் தங்​களது கோரிக்​கையை வலி​யுறுத்தி மாநகராட்சி அலு​வல​கம் முன்​பாகத்​தான் போராட்​டம் நடத்த முடி​யும். இதை சட்​ட​விரோதம் என்று கூற முடி​யாது.

இந்தப் பிரச்​சினை தொடர்​பாக அமைச்​சர்​கள் பேச்​சு​வார்த்தை நடத்தி வந்த நிலை​யில் அவர்​களை அங்​கிருந்து அப்​புறப்​படுத்​தக்​ கூடாது என்றார். அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள் தமது உத்​தர​வில் : தூய்​மைப் பணி​யாளர்​கள் தங்​களது கோரிக்​கைகளுக்​காக போராட்​டம் நடத்த உரிமை உண்டு என்​றாலும், போராட்​டம் என்ற பெயரில் நடை​பாதை, சாலைகளை மறித்து பொது​மக்​களுக்கு இடையூறாக போராடு​வதை ஒரு​போதும் அனு​ம​திக்க முடி​யாது.எனவே, உரிய அனு​ம​தி​யின்றி நடை​பாதை​யில் போராட்​டம் நடத்தி வரும் அவர்​களை காவலதுறை உடனடி​யாக அப்​புறப்​படுத்த வேண்​டும். அதே​நேரம் முறைப்​படி போராட்​டம் நடத்த அனு​மதி கோரி​னால் அதற்கு சட்​டப்​படி பரிசீலித்து  காவல்துறை அனு​மதி வழங்க வேண்​டும். என உத்​தர​விட்டு வழக்கை நீதிப​தி​கள் முடித்து வைத்​துள்​ளனர்.

வாழ்​வா​தா​ரம் பாது​காக்கக் கோரி.. இந்த நிலை​யில், தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு வழங்​கும் தீர்​மானத்தை ரத்து செய்​து, தூய்​மைப் பணி​யாளர்​களின் வாழ்​வா​தா​ரத்தை பாது​காக்க கோரி உழைப்​போர் உரிமை இயக்​கம் சார்​பில் அதன் தலை​வ​ரான வழக்​கறிஞர் கு.​பாரதி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

நீதிபதி கே.சுரேந்​தர் முன்பு இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, நடந்த வாதம்:

மனு​தா​ரர் தரப்பு வழக்​கறிஞர் எஸ்​.கு​மாரசு​வாமி: சென்னை மாநக​ராட்​சி​யில் தூய்​மைப் பணி​களை தனி​யாரிடம் ஒப்​படைப்​பதை எதிர்த்​தும், இது​வரை பணி​யாற்றி வந்த தூய்​மைப் பணி​யாளர்​களை பணி நீக்​கம் செய்​வதை எதிர்த்​தும் சென்னை தொழிலா​ளர் நல தீர்ப்​பா​யத்​தில் வழக்கு தொடரப்​பட்டு நிலு​வை​யில் உள்​ளது. இந்த சூழலில் மாநக​ராட்சி தூய்​மைப் பணி​களை தனி​யாரிடம் ஒப்​படைத்து சென்னை மாநக​ராட்சி நிர்​வாகம் கடந்த ஜூன் மாதம் தீர்​மானம் நிறைவேற்​றி​யுள்​ளது.


மாநக​ராட்சி நிர்​வாகத்​தின் இந்த நடவடிக்​கை​யால் தற்​போது 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் வேலை இழக்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. இந்த பணி​களை தனி​யாரிடம் ஒப்​படைத்​தால் தற்​போது ரூ.750 ஊதி​யம் பெறும் ஊழியர்​களுக்கு ரூ.500 மட்​டும்​தான் கிடைக்​கும். பாதி பேருக்கு வேலை கிடைக்​காது. அதனால்​தான் தொழிலா​ளர்​கள் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

மாநக​ராட்சி நிர்​வாகம் தரப்​பில் அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன்: தூய்மைப் பணி​யாளர்​கள் யாரும் வேலையை விட்டு வெளி​யேற்​றப்பட மாட்​டார்​கள். அவர்​களுக்கு ஒப்​பந்​த​தா​ரர் மூல​மாக பணி வழங்​கப்​படும். சென்னை மாநக​ராட்​சி​யில் மொத்​தம் உள்ள 15 மண்​டலங்​களில் 11 மண்​டலங்​களில் தூய்​மைப் பணி ஏற்​கெனவே தனி​யாருக்கு ஒப்​படைக்​கப்​பட்டு பணி​கள் நடந்து வரு​கின்​றன.


தற்​போது 5, 6-வது மண்​டலங்​களின் தூய்​மைப் பணி தனி​யாரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. ஒப்​பந்த அடிப்​படை​யில் பணி​யாற்​றும் 2 ஆயிரம் தூய்​மைப் பணி​யாளர்​களுக்​கும் ஒப்​பந்த நிறு​வனம் ஊதி​யத்​துடன், வருங்​கால வைப்பு நிதி, இன்​சூரன்ஸ் உள்​ளிட்ட சலுகைகளு​டன் பணிப் பாது​காப்பு வழங்​கப்​படும்.

தனி​யார் ஒப்​பந்த நிறு​வனம் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் விஜய் நாராயண்: தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு வழங்​கு​வது என்​பது அரசின் கொள்கை முடிவு. இதில் விதி​மீறல்​கள் இருந்​தால் மட்​டுமே நீதி​மன்​றம் தலை​யிட முடி​யும். மொத்​தம் 1,900 தொழிலா​ளர்​கள் தேவை என்ற நிலை​யில் பணி​யில் சேரு​வதற்​கான தேதி ஆக.31 வரை நீட்​டிக்​கப்​படும். இவ்​வாறு வாதம் நடந்​தது. அனைத்து தரப்பு வாதங்​களை​யும்​ கேட்​ட நீதிப​தி கே.சுரேந்​தர்​ வழக்​கின்​ தீர்ப்​பை தேதி குறிப்​பி​டாமல்​ அப்போது தள்ளி வைத்​தார்​.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...