முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதுரை மாநகராட்சி மேயர் பதவி பறிபோகும் நிலை

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு திமுகவின் மேயர் கணவர் கைதால் பதவி பறிபோகும்  நிலையில், மண்டலத் தலைவர்களை போல் மாநகராட்சி மேயர் இந்திராணியின் பதவியும் பறிக்கப்படலாம் எனத்  தெரிகிறது. 

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி. கணவர் பொன் வசந்த், அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாக ராஜன்  ஆதரவாளராக இருந்ததற்கு பொன்வசந்த் மனைவி இந்திராணியை மேயராக்கினார். 20024-ஆம் ஆண்டு ஆணையராக இருந்த தினேஷ்குமார், 150 கட்டிடங்களில் சொத்துவரி முறைகேடு நடந்ததாக பூஜ்யக்  குற்றக் காவல்துறையில்   புகார் செய்தார். ஆனால், உள்ளூர் திமுகவின் அரசியல் அழுத்தம் காரணமாக ஆணையர் கொடுத்த புகார் மீது  ஏழு மாதங்களாக வழக்குப்பதிவு செய்யாமல் முடக்கிய நிலையில் 150 கட்டிடங்களில் நடந்த சொத்துவரி குறைப்பு மட்டும் மறுசீரமைக்கப்பட்டு புதிய வரி விதிக்கப்பட்டது. ஆனால், மாநகராட்சியில் 100 வார்டுகளில் நடந்த பிற வணிகக் கட்டிடங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த குடியிருப்பு வரி, ‘ஏ’ கிரேடுக்கு பதில் ‘பி’ மற்றும் ‘சி’ கிரேடு விதிப்பும் மறுசீரமைக்கப்படாததால் மாநகராட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தி நிதி இழப்பு நெருக்கடி ஏற்பட்ட நிலையில் 6 மாதங்களுக்கு முன்னர் மாநகராட்சி ஆணையராக சித்ரா பொறுப்பேற்ற பின் சொத்துவரி முறைகேடு வழக்கு வேகமானது.


மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையின் விசாரணைக்கு ஆணையர் அனுமதி வழங்கியதால் சொத்துவரி முறைகேடு புகாரை வழக்குப்பதிவு செய்து 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய உதவி ஆணையர் உள்ளிட்ட 19 பேரை ஆணையர் சித்ரா பணியிடை நீக்கம் செய்தார் .இந்த வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட 5 மண்டலத் தலைவர்களும், 2 நிலைக்குழு தலைவர்கள் பதவிகளும் பறிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் எதிர்க்கட்சியினரால் குற்றம் சாட்டப்பட்ட மேயர் இந்திராணி, அவரது கணவர் பொன்வசந்த் ஆகியோர் மட்டும் விசாரணைக்குக் கூட அதுவரை அழைக்கப்படவில்லை. இது பதவி இழந்த மண்டலத் தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியானது.

இந்த வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட 5 மண்டலத் தலைவர்களும், 2 நிலைக்குழு தலைவர்கள் பதவிகளும் பறிக்கப்பட்டன.

சொத்துவரி முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ததோடு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அதிமுக, இந்த வழக்கில் மேயர் இந்திராணி, அவரது கணவர் விசாரிக்கப்பட வேண்டும் என்றனர். கடந்த வாரம் கைது செய்யப்பட்ட சொத்துவரி விதிப்புக் குழு தலைவர் விஜய லெட்சுமியின் கணவர் கண்ணனின் வாக்கு மூலத்தில் மேயர் கணவர் பொன் வசந்த், மேயர் கணவரின் பி.ஏ.வாக இருந்த பொன்மணியின் கணவர் ரவி மூலம், பல்வேறு கட்டிடங்களில் சொத்து வரி முறைகேடு செய்ததாக தெரிவித்திருந்தார்.

அதனால், பொன்வசந்த் எந்த நேரத்திலும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் இதற்கிடையில் நேற்று மேயர் இந்திராணி, கணவர் பொன் வசந்த்தைப் பற்றி 2 பக்க அளவில் எழுதப்பட்ட புகார் கடிதத்தை, பதிவுத் தபால் மூலம் யாரோ மர்ம நபர்கள் 100 வார்டு கவுன்சிலர்களுக்கும் அனுப்பிய

கடிதத்தை யார் அனுப்பியது என்று காவல்துறை விசாரித்து வந்த சூழ்நிலையில் நேற்று சென்னையில் மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த்தை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் காவல்துறை மற்றும் திமுக மேலிடத்தின் அதிரடி நடவடிக்கைகளால் மண்டலத் தலைவர்களைப் போல் இந்திராணியின் மேயர் பதவியும் பறிக்கப்படும் எனத் தெரிகிறது.

மேயராகவே செயல்பட்ட ‘பொன் வசந்த்  குறித்து வந்த தகவலின் படி மேயர் இந்திராணி பொறுப்பேற்ற நாள் முதல் பெயரளவுக்கு மட்டுமே அவர் மேயராகச் செயல்பட்டார். அவரது கணவர் பொன்வசந்த் தான், மேயர் பங்களாவில் அமர்ந்து கொண்டு அலுவலர்கள், ஊழியர்களை இயக்குவது, வார்டுகளில் ஊழியர்களுக்கு உத்தரவிடுவது, டெண்டர்கள் ஒதுக்கீடு செய்வது என மாநகராட்சி நிர்வாகத்தில் நேரடியாகத் தலையிட்டார் அதனால் மேயர் கணவருக்கும், ஆணையராக வந்தவர்களுக்கும் இடையே நீடித்த மோதல் ஏற்பட்டதால் 5 ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு மாநகராட்சி நிர்வாகம் ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்தது.

மேயர் இந்திராணியின் தொடர்பு எண் தற்போது வரை அலுவலர்களுக்கும், மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்களுக்கும் வழங்கப்படவில்லை. மேயர் கணவர் பொன்வசந்த்தைத்தான் அனைவரும் தொடர்புகொள்ள வேண்டியதிருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் பொன்வசந்த் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார். ஆனாலும், கடைசி வரை மாநகராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதை மட்டும் அவர் நிறுத்தவில்லை. என்கின்றனர் மாநகராட்சிப் பணியாளர்கள் .மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த், பதினான்காம் நபராகக் கைது செய்யப் பட்டிருக்கிறார். மதுரை மாநகராட்சியில்,

 ரூபாய் 150 கோடி சொத்து வரி முறைகேடு புகார் தொடர்பாக திமுகவிலிருந்து நீக்கப் பட்டிருந்தார், இந்திராணியின் கணவரான பொன். வசந்த்.

உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரை, பெண்களுக்கு 33 சதவீதமல்ல, 100 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தாலும்;  கணவர், அண்ணன், தம்பி, அப்பா போன்ற உறவுகள் தான் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறார்கள்.  பகுதி வாசிகள் முதல் அலுவலர்கள் வரை மேயருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் 

"கவுன்சிலர் இருக்காங்களா?" என்றவுடன் 

"சொல்லுங்க. நான்தான் பேசுகிறேன், என்ன விஷயம்ன்னு சொல்லுங்க"

என்கிற உரையாடலைக் கடந்து போகாத ஆட்களைப் பார்க்கவே முடியாது. அது ஊராட்சி மன்றம் துவங்கி மாநகராட்சி வரை  இதே நிலை தான்.

"நான்தான் பேசுகிறேன்" - என்ற ஒற்றைச் சொல்லின் பின்னே தான், மிகவும் வெளிப்படையாக, மகளிருக்கு எதிரான; அவர்களின் ஆற்றலை; தனித் தன்மையை உடைத்து நொறுக்கும் 'ஆதிக்க'  சக்தியாக; ஆண்கள் மற்றும் உறவுகள் இருக்கின்றன; அவர்களின் பின்னேதான் அரசியல் கட்டமைப்பும் இயங்கும் படி இருக்கிறது.

கடந்த 25 ஆண்டுகளாகவே இப்படித்தான் உள்ளாட்சி கள நிலவரம் உள்ளது;  பலரும் தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

என்றாவது இந்த நிலை மாறாதா என்ன?  அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் முறைகேடுகள் நீக்க 

மாற்றம் வரவேண்டும். அதுவும் விரைவில்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...