திருவாரூர் மாவட்டத்தில் கூலிப்படை கொலைகாரர்கள் சிக்கியது எப்படி ?காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அடுத்த
மேவலூர் குப்பத்தில் அரிகிருஷ்ணன் என்று நபர் பிரியாணி கடை வைத்து உள்ளார்.
அவரது மனைவி பவானி (வயது 39). இவரும் பிரியாணி கடையில் உதவியாக இருந்துள்ளார். கடையில் வேலை பார்த்த நபர் மதன்குமார் (வயது 29) அரிகிருஷ்ணன் வெளியில் செல்லும் நேரம்
கடையில் வேலை பார்த்த மதன்குமாருடன் பவானிக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். அதனை அறிந்த அரிகிருஷ்ணன் கடையில் கண்காணிப்புக் கேமராவைப் பொருத்தி கண்காணித்தார். இதில் மனைவி பவானி, கள்ளக்காதலன் மதன் குமாருடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் பதிவானதையடுத்து அரிகிருஷ்ணன் தனது மனைவி பவானியை கண்டித்து கடையில் வேலைபார்த்த மதன்குமாரை இனிமேல் கடைக்கு வேலைக்கு வரவேண்டாம் என நிறுத்திவிட்டார். அதனால் கள்ளக்காதலர்கள் ஒன்றாக சந்திக்க வாய்ப்பு இல்லாமல் போனதையடுத்து தவிப்பான பவானி கள்ளகாதலன் மதன்குமாருடன் சேர்ந்து இடையூறாக இருக்கும் கணவன் அரிகிருஷ்ணனை கொலை செய்ய முடிவு செய்தார்.
அதற்காக கள்ளக்காதலர்கள் சேர்ந்து திருவாரூர் பகுதியைச் சேர்ந்த கூலிபடையினரை அணுகி ரூபாய்.15 லட்சம் பேரன் பேசி ரூபாய்.2 லட்சம் முன்பனம் கொடுத்ததை அறியாத அரிகிருஷ்ணன் எப்போதும் போல் வீட்டிலிருந்து பிரியாணிக் கடைக்குச் சென்ற நிலையில் மேவலூர் குப்பம் அருகில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற அரிகிருஷ்ணனை கூலிப்படைக் கும்பல் கார் ஏற்றிக் கொல்ல முயன்றதில் அரிகிருஷ்ணன் சிறிய இடைவெளியில் காயங்களுடன் அவருக்கு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அப்போது கூலி படையினர் அரிகிருஷ்ணனைத் தொடர்பு கொண்டு பேசியபோது, "உன் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து உன்னைக் கொலை செய்ய ரூபாய்.15லட்சம் பேரம் பேசி ரூபாய்.2லட்சம் கொடுத்துள்ளார். நீ எங்களுக்கு ரூபாய்.5 லட்சம் கொடுத்தால் உன்னை உயிரோடு விட்டு விடுகிறோம்" எனமிரட்டனராம்.
இதனால் அதிர்ந்த அரிகிருஷ்ணன் இது பற்றி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஆய்வாளர் தர்மலிங்கம் வழக்குப்பதிவு செய்து அரிகிருஷ்ணனின் மனைவி பவானி, அவரது கள்ளக்காதலன் மதன்குமார் ஆகியோரை பிடித்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் கூலிப்படையை ஏற்பாடு செய்து அரிகிருஷ்ணனை கொலை செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டனர்.
அதையடுத்து பவானி, கள்ளக்காதலன் மதன்குமார், கூலிப்படை குறித்து விசாரணை மூலம் கொடுத்த தகவலின்படி கூலிப்படையைச் சேர்ந்த திருவாரூர் மாவட்டம் விக்னேஷ், விஜய், மணிகண்டன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.


கருத்துகள்