முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரேமலதா படத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் இணைத்த பிரச்சார தந்திரம்

அட, இதென்ன பிரமாதம் இன்னும் இருக்கிறது இந்த புகைப்படம் னு பார்க்கும் மக்கள் ஓட்டு வாங்க


என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாம் எல்.கே.சுதீஷ் கோல்மால் செய்து உருவாக்கிய புகைப்படம் 

திமுகவின் பக்கம் அக்கா பிரேமலதா போவது தம்பிக்கு பிடிக்கவில்லை போலும்..!

இப்படி இவர் போடப் போக,  இரண்டு கட்சியின் தொண்டர்களுமே   பிரமித்துப் பார்க்க சுதீஷை!

நடிகர் விஜயகாந்த் சட்டப்பேரவையில் நாக்கை துருத்தி கைவிரல் நீட்டியது மறந்து விடாத தொண்டன் விமர்சனம் செய்கிறார்கள் 

’’இது தவறு. அரசியல் அறியாமை’’

' எல்.கே.சதீஸ்  என்ன சொல்ல நினைக்கிறார்?  பொழுதோ நேரமோ போகவில்லை போல, எதையாவது எடுத்துப் போட வேண்டியது.. இது சிறுபிள்ளைத்தனம்''


''நடிகர் விஜயகாந்த் புகைப்படங்களை அவர் இறந்த பின் யாரும் பயன்படுத்தக் கூடாது என்றார். இவர் மட்டும் செல்வி ஜெ ஜெயலலிதாவின் புகைப்படங்களைப் பயன்படுத்துகிறார். அதிமுகவுடன் கூட்டணி என்று சொல்லாமல் சொல்கிறாரா..?

’’புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது..’’

இப்படி பலதரப்பட்ட கமெண்ட்ஸ்..! சமூக வலைதளங்களில் வருகிறது. படம் பார்த்த போது 

எனக்கென்ன தோன்றியதென்றால், 'நடிகர் விஜயகாந்த்தை ஒழித்துக் கட்டிய இரண்டு பெண்மணிகள்'  எனத் தோன்றியது!

ஒரு பெண்மணி நேரடியான அரசியல் எதிரி, மற்றொரு பெண்மணி கூடவே இருந்த அனுகூலச் சத்ரு.

முதலில் காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை பார்ப்போம்;


இரங பெரிய திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பார்க்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் செல்லி ஜெ.ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்ததால்  பலவீனப்பட்டார். அவரது கட்சி சார்ந்த ஈரோடு சந்திரகுமார் துவங்கி மைக்கேல் ராயப்பன், மாஃபா. பாண்டிய ராஜன் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்களை தங்கள் பக்கம் வளைத்து விஜயகாந்த் பதவி பறிப்பு 

சட்டமன்றத்தில் தானும், அதிமுகவினருமாக விஜயகாந்தை வசைபாடி, அவரது ரத்த அழுத்ததை அதிகரித்தார்.

 தன் அதிகார ஆட்டத்தால் விஜயகாந்த் உருவாக்கிய தேதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களைத் தூக்கி தேமுதிகவை தேய்பிறையாக்கினார்.

தன் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி, அவரது அரசியல் வாழ்க்கையை முடிக்கத் துடித்தார்.

ஆனால், நடிகை ராதிகாவை மனம் முடிக்காமல் தனது நண்பர் இப்ராகிம் ராவுத்தர் மூலம் திருமணம் செய்த  பிரேமலதாவோ, நடிகர் 

விஜயகாந்தின் பிரம்மாண்டமான பலமான அவரது மிகப் பெரிய நண்பர்கள் வட்டாரத்தை முற்றிலும் விரட்டியடித்து அவரைத் தனிமைப்படுத்தினார்.

தன்னைச் சார்ந்து  - தான் சொல்வதைக் கேட்டு மட்டுமே -அரசியல் முடிவுகளை எடுக்கும்படி நடிகர் விஜயகாந்த்தை வீழ்த்திப் போட்டார்.

கொடை வள்ளல் என்று பெயரெடுத்த கேப்டன் நடிகர் விஜயகாந்தை, தன்னிடம் உழைத்தவர்களுக்கே  ஊதியமில்லை எனக் கூறும் அவல நிலைக்கு கேப்டன் தொலைகாட்சி ஊழியர்கள் விஷயத்தில் கெட்ட பெயர் வாங்கித் தந்தார்.

2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் சேரவும், 2016 ஆம் ஆண்டில் மக்கள் நலக் கூட்டணி உருவாக்கி மாபெரும் வீழ்ச்சியைக் காணவும் அவரே வழிவகுத்தார்.

உடல் நோயுற்ற வேளையிலும் நடிகர் விஜயகாந்தை மேடையேற்றி ஷோகேஷ் பொம்மையாக்கி அரசியல் ரீதியாக சித்து விளையாட்டுகளை அரங்கேற்றினார்.

இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லலாம்!

ஆக, நடிகர் விஜயகாந்தை சாய்த்த இந்த இரண்டு பெண்மணிகளையும் தன் சமூக வலைத்தளத்தில் போட்டு ஏதோ ஒரு அரசியல் ஆதாயத்திற்கு அடித்தளமிடும் எல் .கே.சுதீஷ், எப்படிப்பட்டவர் என்பதை உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறோம்.  விஜயகாந்த் உயிருடன் இருந்த கட்சிக்கும் அவர் காலமான பின்னர் இருக்கும் பிரேமலதா கட்சிக்கும் வித்தியாசங்கள் உண்டு.  பாவம் இதுதான் புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை என கிராமத்தில் பேசப்படும் பழமொழியை நினைவு படுத்தும் செயலாகவே பார்க்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...