அட, இதென்ன பிரமாதம் இன்னும் இருக்கிறது இந்த புகைப்படம் னு பார்க்கும் மக்கள் ஓட்டு வாங்க
என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாம் எல்.கே.சுதீஷ் கோல்மால் செய்து உருவாக்கிய புகைப்படம்
திமுகவின் பக்கம் அக்கா பிரேமலதா போவது தம்பிக்கு பிடிக்கவில்லை போலும்..!
இப்படி இவர் போடப் போக, இரண்டு கட்சியின் தொண்டர்களுமே பிரமித்துப் பார்க்க சுதீஷை!
நடிகர் விஜயகாந்த் சட்டப்பேரவையில் நாக்கை துருத்தி கைவிரல் நீட்டியது மறந்து விடாத தொண்டன் விமர்சனம் செய்கிறார்கள்
’’இது தவறு. அரசியல் அறியாமை’’
' எல்.கே.சதீஸ் என்ன சொல்ல நினைக்கிறார்? பொழுதோ நேரமோ போகவில்லை போல, எதையாவது எடுத்துப் போட வேண்டியது.. இது சிறுபிள்ளைத்தனம்''
''நடிகர் விஜயகாந்த் புகைப்படங்களை அவர் இறந்த பின் யாரும் பயன்படுத்தக் கூடாது என்றார். இவர் மட்டும் செல்வி ஜெ ஜெயலலிதாவின் புகைப்படங்களைப் பயன்படுத்துகிறார். அதிமுகவுடன் கூட்டணி என்று சொல்லாமல் சொல்கிறாரா..?
’’புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது..’’
இப்படி பலதரப்பட்ட கமெண்ட்ஸ்..! சமூக வலைதளங்களில் வருகிறது. படம் பார்த்த போது
எனக்கென்ன தோன்றியதென்றால், 'நடிகர் விஜயகாந்த்தை ஒழித்துக் கட்டிய இரண்டு பெண்மணிகள்' எனத் தோன்றியது!
ஒரு பெண்மணி நேரடியான அரசியல் எதிரி, மற்றொரு பெண்மணி கூடவே இருந்த அனுகூலச் சத்ரு.
முதலில் காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை பார்ப்போம்;
இரங பெரிய திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பார்க்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் செல்லி ஜெ.ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்ததால் பலவீனப்பட்டார். அவரது கட்சி சார்ந்த ஈரோடு சந்திரகுமார் துவங்கி மைக்கேல் ராயப்பன், மாஃபா. பாண்டிய ராஜன் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்களை தங்கள் பக்கம் வளைத்து விஜயகாந்த் பதவி பறிப்பு
சட்டமன்றத்தில் தானும், அதிமுகவினருமாக விஜயகாந்தை வசைபாடி, அவரது ரத்த அழுத்ததை அதிகரித்தார்.
தன் அதிகார ஆட்டத்தால் விஜயகாந்த் உருவாக்கிய தேதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களைத் தூக்கி தேமுதிகவை தேய்பிறையாக்கினார்.
தன் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி, அவரது அரசியல் வாழ்க்கையை முடிக்கத் துடித்தார்.
ஆனால், நடிகை ராதிகாவை மனம் முடிக்காமல் தனது நண்பர் இப்ராகிம் ராவுத்தர் மூலம் திருமணம் செய்த பிரேமலதாவோ, நடிகர்
விஜயகாந்தின் பிரம்மாண்டமான பலமான அவரது மிகப் பெரிய நண்பர்கள் வட்டாரத்தை முற்றிலும் விரட்டியடித்து அவரைத் தனிமைப்படுத்தினார்.
தன்னைச் சார்ந்து - தான் சொல்வதைக் கேட்டு மட்டுமே -அரசியல் முடிவுகளை எடுக்கும்படி நடிகர் விஜயகாந்த்தை வீழ்த்திப் போட்டார்.
கொடை வள்ளல் என்று பெயரெடுத்த கேப்டன் நடிகர் விஜயகாந்தை, தன்னிடம் உழைத்தவர்களுக்கே ஊதியமில்லை எனக் கூறும் அவல நிலைக்கு கேப்டன் தொலைகாட்சி ஊழியர்கள் விஷயத்தில் கெட்ட பெயர் வாங்கித் தந்தார்.
2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் சேரவும், 2016 ஆம் ஆண்டில் மக்கள் நலக் கூட்டணி உருவாக்கி மாபெரும் வீழ்ச்சியைக் காணவும் அவரே வழிவகுத்தார்.
உடல் நோயுற்ற வேளையிலும் நடிகர் விஜயகாந்தை மேடையேற்றி ஷோகேஷ் பொம்மையாக்கி அரசியல் ரீதியாக சித்து விளையாட்டுகளை அரங்கேற்றினார்.
இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லலாம்!
ஆக, நடிகர் விஜயகாந்தை சாய்த்த இந்த இரண்டு பெண்மணிகளையும் தன் சமூக வலைத்தளத்தில் போட்டு ஏதோ ஒரு அரசியல் ஆதாயத்திற்கு அடித்தளமிடும் எல் .கே.சுதீஷ், எப்படிப்பட்டவர் என்பதை உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறோம். விஜயகாந்த் உயிருடன் இருந்த கட்சிக்கும் அவர் காலமான பின்னர் இருக்கும் பிரேமலதா கட்சிக்கும் வித்தியாசங்கள் உண்டு. பாவம் இதுதான் புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை என கிராமத்தில் பேசப்படும் பழமொழியை நினைவு படுத்தும் செயலாகவே பார்க்கலாம்.



கருத்துகள்