ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஸ்வயம்சேவக் திருப்பூர் மாவட்டம் சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன்,
குடியரசுத் துணைத் தலைவர் நேற்று பதவிக்கான வேட்பு மனுவைத்தாக்கல் செய்தார் அதில் பிரதமர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளார் ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி தொடங்கி. 21-ஆம் தேதிக்குள் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும். சி.பி.ராதாகிருஷ்ணன் 20-ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 422 உறுப்பினர்களும், எதிர்க்கட்சி சார்ந்த இண்டியா கூட்டணிக்கு 312 உறுப்பினர்களும் உள்ளனர். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை பலமுள்ளதால், அந்தக் கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஸ்வயம்சேவகர் ஆன அவர் வெற்றி பெற 50 சதவீத உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதன்படி, 391 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும் வேட்பாளர், புதிய குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்படுவார்.தற்போது நாடாளுமன்ற மக்களவையில் ஒரு உறுப்பினர் மாநிலங்களவையில் 5 உறுப்பினர்களின் இடங்கள் காலியாகவே உள்ளது. எனவே, நடைபெறும் தேர்தலில் 782 உறுப்பினர்கள் கள் வாக்களிக்க உள்ளனர். இந்திய நாட்டில் சுதந்திரம் அடைந்து மன்னர் காலத்திற்குப் பிறகு
“தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. எந்தத் தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை.
சமண மதம் தோன்றியபோது, மூன்றில் இரண்டு பங்கு தமிழர்கள் அதைப் பின்பற்றினர். இன்று, 40,000 தமிழ் சமணர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்”
எனக் கூறுவது தான் உண்மை வரலாறு பொய்யான வரலாறு திணிப்பு நடத்தும் நபர்கள் மத்தியில் அதை
மும்பையில் நடைபெற்ற ஹெட்கேவர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு அரசியல் களத்தில் வரலாற்று உண்மை பேச மனோதிடம் உள்ளவர் என்பதை அனைவருக்கும் உணர்த்தியது. இந்த நிலையில் இந்தியக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான பி. சுதர்ஷன் ரெட்டி வியாழக்கிழமை இன்று (ஆகஸ்ட் மாதம் 21, 2025 ல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்தார் அந்த நிகழ்வில் தேசியவாத காங்கிரஸ் (SCP) தலைவர் சரத் பவார், சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கோபால் யாதவ், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, சிவசேனா (UBT) நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் மற்றும் கூட்டணியின் பல தலைவர்களும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் "எண்ணிக்கைகள் என்பது முக்கியமாகத் தொடர்கிறது.. நிச்சயமாக, நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவனல்ல என்பதால், எல்லோரும் என்னை ஆதரிப்பார்கள் என நம்புகிறேன். நேற்று நான் அதை மிகத் தெளிவாகச் சொன்னேன். இது சித்தாந்தத்திற்கான போர்," என்று தெரிவித்தார் ரெட்டி அவரது வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு முன் செய்தியாளர்களிடம் மேலும் கூறிமதாவது வேட்புமனு தாக்கல் செய்வது எளிது, நான் தேர்தல் அலுவலரியிடம் சென்று எனது வேட்புமனுவை சமர்ப்பிக்கப் போகிறேன்," என்றார்.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி நடைபெறும் அன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்திருந்தது.துணைத் தலைவர், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு ஜனநாயக அமைப்பில் தேர்தல் நடைமுறைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். துணைத் தலைவரின் தேர்தல்கள் அரசியலமைப்பின் பிரிவுகள் 64 மற்றும் 68 ன் கீழ் விதிகளால் உருவான நிலையில் நிர்வகிக்கப்படுகின்றது. தேர்தல் ஆணையம், குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் சட்டம், 1952 மூலம் துணைத் தலைவர் தேர்தல்களை அறிவிக்கிறது.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 66(1) ன் படி, துணைக் குடியரசுத் தலைவரின் தேர்தல் விகிதாசார பிரதிநிதித்துவ முறையால் ஒற்றை மாற்று வாக்கு மூலம் நடத்தப்படும், மேலும் அத்தகைய தேர்தலில் வாக்களிப்பு இரகசிய வாக்கெடுப்பு மூலம் இருக்கும்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜூலை 21 அன்று, உடல்நலக் குறைவு எனும் காரணங்களைக் கூறி, ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, துணைத் தலைவர் பதவி காலியாகியது இந்தியா கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் B.சுதர்சன ரெட்டி(வயது 79),உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி! இவர் சில ஆயிரம் உயிர்களை பலி வாங்கிய போபால் விஷவாயுக் கசிவுக்குக் காரணமானவர்களான காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர்களின் நெருங்கிய கூட்டாளியான யூனியன் கார்பைடு தலைவர் வாரன் ஆண்டர்சன் மீதான வழக்கை மறுவிசாரணை செய்ய மறுத்து தள்ளுபடி செய்தவர் சுதர்சன் ரெட்டி. என்பதும்.
தற்போது இந்திய துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தும் இந்தியா கூட்டணி அளவுக்கு அவருக்கு காங்கிரஸ் நன்றி க்கடன் பட்டிருப்தாகவே தெரிகிறது. இருப்பினும் தற்போது உள்ள நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக களம் காணும் சி.பி. இராதாகிருஷ்ணன் வெற்றிக்கு இப்போதே கட்டியம் கூறலாம் என்பது தான்.




















கருத்துகள்