சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதியான எஸ்.ஆர். நாதன் நினைவு நாள்!
தஞ்சாவூர் அருகே வடுவூர் பகுதியை சேர்ந்த சடையார் கோவில் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட செல்லப்பன் ராமநாதன் தேவர் எனும் எஸ். ஆர். நாதன் 03 ஜூன் 1924 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தவர் முன்னரே அவரது குடும்பம் சிங்கப்பூரில் குடியேறியது
சிங்கப்பூர் அரசின் சேவையில் பல பொறுப்புகளை வகித்து சிங்கப்பூருக்குச் சிறந்த சேவையாற்றிய இரண்டு முறை அதிபரான சிறப்புக்குரியவராகக் கருதப்படும் எஸ் ஆர் நாதன் 1979 ஆம் ஆண்டு 55 ஆவது வயதில் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பிரஸ், மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர், அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர், தற்காப்பு வியூக ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார்.!
சிங்கப்பூரின் அதிபராக கடந்த 12 ஆண்டுகள் சிறப்பான முறையில் சேவையாற்றி 31 ஆகஸ்ட் 2012 ஆம் நாளில் அன்று ஓய்வுபெற்றார் தொடர்ந்து இருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் 4382 நாள்கள் சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்தவர்
தனது 92 வது வயதில் 22 ஆகஸ்ட் 22016 ஆம் நாள் காலமானார் அகத்தமிழனின் நினைவு தினத்தில் புகழ் வணக்கம் முக்குலத்தோரில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர், மாவட்டத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் மயிலாடுதுறை, மாவட்டத்தில் வாழும் ஏழு உட்பிரிவு அகமுடையார் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேவர் என்ற பட்டம் 13 நூற்றாண்டுகளாக உள்ளது. அவரது நினைவை போற்றும் வகையில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு நினைவு அஞ்சலி நிகழ்வுகள் நடத்துகிறது.சிங்கப்பூரில் 6 லட்சத்துக்குத் மேற்பட்டத் தமிழர்கள் வசித்தாலும் உயரிய பொறுப்பிலும் உள்ளனர். சிங்கப்பூரின் 6 வது அதிபராக தேர்வு செய்யப்பட்ட எஸ்.ஆர். நாதன். மிகவும் முக்கியமானவர். சிங்கப்பூரின் 'இரண்டாவது தந்தை ' என அழைக்கப்படும் எஸ்.ஆர். நாதன் வரலாற்றில் நீண்ட காலம் அதிபராக இருந்தவர்.
1924 ஆம் ஆண்டு செல்லப்பன் - அபிராமி தம்பதிக்கு நாதன் இல்லாமல் நான்கு குழந்தைகள். அப்போது சிங்கப்பூர் மலேசியாவுடன் இருந்தது. குடும்பத்தில் கஷ்ட ஜீவனம் நாதனின் தந்தை மலேசியாவுக்கு சென்றால் பிழைத்துக் கொள்ளலாம் என நினைத்தார். அவருக்கு ஒரு மலேசிய ரப்பர் தோட்டத்தில் குமாஸ்தா வேலை. சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிலுள்ள ஜோகூருக்கு குடும்பம் புலம் பெயர்கிறது. ரப்பர் தொழில் நசிவை சந்தித்த கால நிலையில், குடும்பத்தைக் காப்பாற்ற முடியாத சூழலில் செல்லப்பன் தற்கொலை செய்து கொள்கிறார். நான்கு குழந்தைகளுடன் தொடர்ந்து மலேசியாவில் வசிக்க முடியத நிலையில் தவிக்கிறார் நாதனின் தாயார். குழந்தைகளை அழைத்துக் கொண்டு மீண்டும் சிங்கப்பூருக்கே திரும்புகிறார்.
கஷ்டப்பட்டு குடும்பம் ஓடுகிறது.வறுமைக்கிடையே வேலை பார்த்துக் கொண்டே பள்ளிப் படிப்பு உயர்கல்வியை முடித்த, எஸ்.ஆர்.
நாதன், தொழிலாளர்கள் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார்தொழிலாளர்கள் உரிமைகளுக்காக போராடத் தொடங்கினார். தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவர் 1955 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரின் பல துறைகளில் பணி புரிந்த எஸ்.ஆர். நாதனின் வாழ்க்கையில் 1974 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் மிக முக்கியமானது. சிங்கப்பூருக்கு சொந்தமான புலாவு புகாம் தீவில் செயல்பட்ட எண்ணெய்க் கிடங்கு மீது ஜப்பான் ரெட் ஆர்மி மற்றும் பாலஸ்தீன விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். நான்கு தீவிரவாதிகளில் இருவர் ஜப்பான் ரெட் ஆர்மியையும் இருவர் பாலஸ்தீனத்தையும் சேர்ந்தவர்கள். சிங்கப்பூரிலிருந்து வியட்நாமுக்கு செல்லும் எண்ணெய் விநியோகம் நிறுத்த வேண்டுமென்பது தான் தீவிரவாதிகளின் நோக்கம். தீவிலிருந்த ஒரு படகையும் அதில் இருந்தவர்களையும் கூடத் தீவிரவாதிகள் பணையக் கைதிகளாக பிடித்துக் கொணட நிலையில் படகை மத்தியத் தரைக்கடலை நோக்கி ஓட்டத் தொடங்கினர். சிங்கப்பூர்கடற் பாதுகாப்புப் படையினர் அவர்களை மடக்கினர்.
அப்போது சிங்கப்பூரின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறைத் தலைவராக எஸ்.ஆர். நாதன் இருந்தார். பணயக்கைதிகளை மீட்கும் இந்த நடவடிக்கைக்கு எஸ்.ஆர். நாதன் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். தீவிரவாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 7 நாட்களாக நடந்த இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், "தங்களை பாதுகாப்பாக குவைத் செல்ல அனுமதித்தால் பணயக் கைதிகளை விடுவிப்பதாக தீவிரவாதிகள் உறுதியளித்தனர்." தொடர்ந்து "பணயக் கைதிகளை விடுவித்து விடுங்கள். நீங்கள் குவைத் செல்ல நான் பணயக் கைதியாக உங்களுடன் வருகிறேன்" என எஸ்.ஆர். நாதன் கூறினார். அதனடிப்படையில் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
உறுதியளித்தபடி, எஸ்.ஆர் நாதன் உட்பட 13 உயர் அலுவலர்கள் பணயக் கைதியாகி 1974 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி தீவிரவாதிகளுடன் விமானத்தில் குவைத் நோக்கி பயணித்தனர். அடுத்த நாள் தாயகம் திரும்பிய போது, சிங்கப்பூரே திரண்டு அவரை வரவேற்றது'என்னை விட என் தேசம்தான் எனக்கு முக்கியம்" இது எஸ்.ஆர். நாதன் அடிக்கடி கூறும் வார்த்தை. அது போலவே தன் தேசத்து மக்களுக்காக உயிரைப் பணயம் வைக்கத் துணிந்தவர் தான் எஸ்.ஆர். நாதன். ஒரு உயிரிழப்புக் கூட இல்லாமல், இந்த நடவடிக்கையை வெற்றிக்கரமாக நடத்திக் காட்டினார்
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவுக்கு நெருக்கமானவராகவும் இருந்தார். அதிபர் ஆவதற்கு முன், 1988-90 ஆம் ஆண்டுகளில் மலேசியத் தூதராகவும் 1990 - 96 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதராகவும் பணியாற்றினார். தொடர்ந்து 1999ம் ஆண்டு செப்டம்பர் 1ம் மேதி சிங்கப்பூரின் அதிபராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 2005 ஆம் ஆண்டும் மீண்டும் போட்டியில்லாமல் தேர்வு செய்யப்பட்டார். சிங்கப்பூர் வரலாற்றில் அதிக காலம் சுமார் 12 ஆண்டுகள் பதவியில் இருந்த ஒரே தலைவர்சிறந்த நிர்வாகியான எஸ்.ஆர். நாதன், சொன்ன சொல் மாறாமல் நிறைவேற்றிக் காட்டுபவர். 'லிட்டில் இந்தியா ' பகுதியிலுள்ள முத்தையா உணவகத்திற்கு ஒரு முறை சாப்பிட வருவதாக எஸ்.ஆர். நாதன் வாக்குறுதி அளித்திருந்தார். அதிபர் பதவியிலிருந்து விலகிய பின், அந்த ஹோட்டலுக்கு மதிய உணவுக்கும் சென்று. அந்த உணவகத்தின் உரிமையாளருக்கு இன்பஅதிர்ச்சி அளித்தார். குழந்தைகளிடம் அன்பும் பரிவும் காட்டுவார். எஸ்.ஆர். நாதனின் மனைவி ஊர்மிளா மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர். இருவருக்கும் காதல் திருமணம் சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலில் செய்து கொண்டனர். கடந்த சில தினங்களாகவே 92 வயது எஸ்.ஆர் நாதனுக்கு வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. 3 வாரங்களாக மருத்துவமனையில் தான் இருந்தார். சிசிக்சை பலனளிக்கவில்லை. மருத்துவமனையில் நாதனின் உயிர் பிரிந்தது" என் சிங்கப்பூர் அரசு அறிக்கை வெளியிட்ட போது அந்த சிறிய தேசமே சோகத்தில் மூழ்கியிருந்தது. அதோடு பிறந்த பூர்வீகம் கொண்ட தஞ்சாவூர் மண்னும் மாநுடமும்.நினைவு கூறும்.



கருத்துகள்