குற்றவாளி ப்ரஜ்வல் ரேவண்ணா வுக்கு ஆயுள் தண்டனை உடன் பத்து லட்சம் அபராதம்
முன்னாள் பிரதமர் தேவகௌடா
முன்னாள் கர்நாடகா முதன் மந்திரி மற்றும் தற்போது மத்திய எஃகுத் துறை அமைச்சர் குமாரசாமி அவரது சித்தப்பா அவரது சகோதரர் சட்ட மன்ற உறுப்பினர் ரேவண்னா மகன்
முன்னாள் பிரதமர் பேரன். ரேவனண்னா மகன்.
முப்பது வயதானவர் 47 வயதான வீட்டு வேலைக்காரியை இரண்டு முறை பாலியல் வன்முறை செய்து
அதை தன்னுடைய ஐ போனில் பதிவு செய்து அதை " வெளியிடவா? " என மிரட்டி வேறு இருக்கிறார்.
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா .
அந்தப் பெண்மணி காவல்துறையில் புகாரளிக்க, பூதம் கிளம்பியது
இன்னும் இரண்டு பெண்கள் இதே வகையில் புகாரளிக்க
இன்னொரு பூதம் எங்கிருந்தோ கிளம்பியது ரேவண்ணனாவின் பாலியல் விடீயோக்கள் ..வெளியே வந்து ஒன்றல்ல இரண்டல்ல 3000 க்கும் அதிகமாக என்கிறார்கள் .அதில் ஆண்கள் கூட உண்டாம் அவரது கட்சி மத சார்பற்ற ஜனதா தளம் அல்லவா ..ஐயாவும் ஆண் பெண் வித்தியாசம் பார்க்காமல் இரு பாலாரையும் துவம்சம் செய்திருக்கிறார் இயற்கைக்கு மாறான முறையில். ஒரு முன்னாள் பிரதமர் குடும்ப உறுப்பினர்கள்
ஆனால் எடுத்த வீடியோவில் தன்னுடைய முகம் துளியும் தெரியாமல் எடுத்திருக்கிறார் .
துருக்கி முறையில் (Turky methode ) விசாரணைக் குழு புலன் விசாரணை துலக்க குற்றவாளியின் உடல், சுருக்கங்கள்,காய வடு , அங்க மச்சம் அனைத்தையும் ஒப்பிட்டு வீடியோவில் அபலைப் பெண்களை நாசாமாக்குவது அவன்தான் என்று தடம அறிவியல் ஆய்வு அறிக்கை நிரூபணமாக்கியது
அவன் அந்தப் பெண்ணின் ஆடை அந்த அறையின் அலமாரியில் சிக்கிய நிலையில் டி என் ஏ தேர்வில் இன்னொரு உறுதியைக் கொடுக்க
கையும் களவுமாக மாட்டிக்கொண்டான் .
நேற்று குற்றவாளி என்றது உறுதி செய்த நீதிமன்றம்
இன்று ஆயுள் தண்டனையும் 10 லட்சம் அபராதமும் விதித்திருக்கிறது
இன்னும் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது
அப்புறம் இவனது காணமால் போன இன்னொரு ஐ போனை கண்டுபிடிக்க ஆப்பிளின் உதவியை நாடி உள்ளது விசாரணைக் குழு
என்ன... ஒரு கொலை செய்தாலும் ஆறு கொலை செய்தாலும் ஒரே தண்டனை தானே..
உண்மையில் இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் தெரியுமா ?
இவன் இப்படி அத்தனை தைரியமாக நூற்றுகணக்கான வர்களை நாசம் செய்வதற்கு காரணம் யார் தெரியுமா ? இவர்கள் அட்டகாசத்தை கண்டு கொள்ளாத
முன்னாள் பிரதமர் தேவகௌடாவும் தான் இவரை நம்பி இந்திய மக்கள் அளித்த கௌரவத்தை இவர் குடும்பம் தற்போது அவமானம் என திருப்பிச் செய்துள்ளது.
இளம் நடிகையை பலதாரச் சட்டத்தை மீறி மணந்த இவரது சிறிய தந்தை குமாரசாமியும் தான். இதில் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் பலர் கூறும் கருத்து இது
ஆதித்திய கரிகாலனைக் கொன்ற கொலைகாரர்களுக்கு மாமன்னர் இராஜராஜன் சோழன் விதிப்பாரே தண்டனை கொலை கார்களுக்கு கழு மரம் ஏற்றுவது அவன் குடும்பம் கொண்டார் கொடுத்தார் அனைவரின் சொத்துக்களையும் பறிமுதல் செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் இந்திய ஜனநாயக நாட்டில் அதெல்லாம் சாத்தியமில்லை .இத்தனை நடந்ததே நல்ல தீர்ப்பு வந்த அதிசயம் நீதிபதி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்பை கேட்டதும் பிரஜ்வல் ரேவண்ணா கதறி அழுதார். பி என் எஸ் சட்டம் வரும் முன் பதிவு செய்யப்பட்ட வழக்கு இது ஆகவே இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 376(2)(k) மற்றும் 376(2)(n) ஆகியவற்றிற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் நிலை
முன்னதாக பிரிவு 354(A), 354(B), 354(C) ஆகியவை 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகுக்கும். பிரிவு 506-க்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், பிரிவு 201-க்கு ஒரு ஆண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரையிலும் தண்டனை விதிக்கப்படலாம். என்ற நிலையில் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2008-ன் பிரிவு 66(E) 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இதே நிலை இங்கே பாருங்கள் கல்லூரிப் பையனைக் கார் ஏற்றிக் கொன்றவனை 50 பேர் வாழ்க கோஷத்தோடு வந்து காவல் நிலையத்தில் சரணடைய ஒப்படைத்தார்களாம் .
இங்கு கவுன்சிலரே அப்படியென்றால் . பிரபலமான ஒரு முன்னாள் பிரதமர் பேரன் ஆடிய ஆட்டம் தான் என்ன ... தீர்ப்பு வந்த நிலையில் அவர்கள் அதிர்ந்தது போனார்கள் என செய்தி. வாழ்க ஜனநாயகம்.







கருத்துகள்