கார்ப்பரேட் கம்பெனியா இந்து சமய அறநிலையத்துறை? உயர்நீதிமன்றம் சாடல்
ஆண்டுக்கு இவ்வளவு எண்ணிக்கையில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்து கார்ப்பரேட் கம்பெனி போல அறநிலையத்துறை செயல்படுகிறது' என. சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை விமர்சனம்.
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயக் கும்பாபிஷேகம் தொடர்பான வழக்கில், நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு பிறப்பித்த இறுதி உத்தரவில்
தமிழ்தாட்டின் ஆலயங்களில் பல புனரமைப்புப் பணிகள் முழுமை பெறாமலேயே கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு இவ்வளவு எண்ணிக்கையில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்து, கார்ப்பரேட் கம்பெனி போல இந்து சமய அறநிலையத்துறை செயல்படுகிறது.
இதனால் கோவில் நிர்வாகமும், கும்பாபிஷேகத் தேதியைட் முன்கூட்டியே முடிவு செய்து புனரமைப்புப் பணிகளை அவசர கதியில் செய்து வருகின்றன. இது போன்ற இலக்குகளால் கும்பாபிஷேகத்தின் உண்மையான நோக்கம் சிதைகிறது. ஆலயம் என்பது வெறும் கட்டடங்கள் மாத்திரமல்ல; குடி யிருக்கும் தெய்வங்களின் அங்கமாகும். அதை உணர்ந்து இந்து சமய அறநிலையத்த்துறை செயல்பட வேண்டும்.
புனரமைப்புப் பணிகள் துவங்கும் முன், சென்னை ஐ.ஐ.டி., சிவில் இன்ஜினியரிங் துறையிடம் ஆலயத்தில் உள்ள பாதிப்புகள், சேதங்கள் குறித்து விரிவான திட்ட அறிக்கை பெற வேண்டும். புளரமைப்புப் பணிகளின் போது களரக இயந்திரங்களைத் தவிர்த்து. அத்துறையால் அனுமதிக்கப்பட்ட பொருட்கள்,
மற்றும் இரசாயனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பணிகள் முடிந்த பின்னர் அந்தத் துறையிடம் தகுதிச்சான்றும் பெற வேண்டும்.
பின்னர் கட்டமைப்புப் பொறியியல் நிபுணர், தொல்லியல் ஆய்வு நிபுணர், பாதுகாப்பு நிபுணர், பாரம்பரிய ஸ்தபதி, இரண்டு ஆகம நிபுணர்கள் அடங்கிய மாநில நிபுணர்கள் குழுவிடம் பணி முடிந்ததற்கான சான்றிதழ் பெற வேண்டும்.
ஆலயத்தில் அவற்றை பார்வைக்கு வைக்க வேண்டும். அதன் பின்னரே நாள் குறித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். நன் கொடையாளர்கள் சார்பில் நடத் தும் புனரமைப்புப் பணி களை, மாநில நிபுணர் குழு கண்காணிக்க வேண் டும். வழக்கு இத்துடன் பைசல் செய் யப்படுகிறது என உத்தரவிட்டனர். தென்காசி ஆலயம் ஒரு பார்வை:- மதுரையில் வீரபாண்டியன் சுந்தரபாண்டியன் ஒரே தந்தை இரு வேறு தாய்க்கும் மகன்களான சகோதரர்களின் சண்டை காரணமாக அலாவுதீன் கில்ஜி படைத் தளபதி அலியான மாலிக்காபூர் தென்னிந்திய முகலாயப் படையெடுப்பு காரணமாக பாண்டிய நாட்டின் தலைநகராக இருந்த மதுரையை சூறையாடி அழித்த போது அங்கிருந்த பாண்டியர் பல கிளையினராகப் பிரிந்து தெற்கு நோக்கி நகர்ந்து கொற்கை, கருவை எனப்படும் கரிவலம்வந்த நல்லூர், தென்காசி குற்றாலம் முதலான இடங்களில் இருந்து கொண்டு சிற்சில ஊர் பகுதியில் ஆண்டுவந்தனர். இவர்களைப் பொது வகையால் தென்காசிப் பாண்டியர் எனக் குறிப்பிடுவது வழக்கம். இவர்களில் மூன்று பாண்டியர் சிறந்த தமிழ்ப் புலவர்களாகவும் விளங்கினர். இவர்களால் பாடப்பட்ட நூல்கள் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத் தக்கவை. 1445- ஆம் ஆண்டில் பரக்கிரம பாண்டிய மன்னரால் தென்காசி ஆலயம் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, பொது ஆண்டு 1446-ல் சுவாமி மற்றும் அம்மன் உருவச்சிலைகள் அமைக்கப்பட்டன. ஆலயத்தின் நீளம்: கிழக்கு-மேற்கு -554 அடியும் அகலம்: தெற்கு-வடக்கு-318 அடியும்
கோபுரத்தின் உயரம்: 180 அடியும் கொண்டது. ஓலக்க மண்டபத்தில் கற்றூணில் அற்புதச்சிலைகள் அமைந்துள்ளது
பரக்கிரம பாண்டிய மன்னர் இக்கோவிலைக் கட்டும் போது 8 விநாயகர் கோயில்களையும், 8 திருமடங்களையும் அமைத்தார்.
இந்தக் கோபுர வாசல் வழியில் எப்பொழுதும் காற்று வீசிக் கொண்டே இருக்கும்.1524- ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த ஜெயதுங்க நாட்டு மன்னர் சங்கரநாராயண பூதல வீரமார்த்தாண்ட ராமவர்மன் என்ற சிறைவாய் மூத்தவரால் செப்பனிடப்பட்டு பிரம கலசாபிசேகம் நடத்தப்பட்டது. சிறப்பு வாய்ந்த இராஜகோபுரமானது
பொது ஆண்டு 1456-ல் பரக்கிரம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கபட்டு, பொது ஆண்டு 1462-ல் பரக்கிரம பாண்டிய மன்னர் காலமான பின்பு அவரது தம்பியான குலசேகர பாண்டியரால் கட்டி முடிக்கப்பட்டது.
கோபுர அமைப்பின் உயரம்: 175 அடிமுதல் 180அடியும் 9 நிலை நீளம்: வடக்கு - தெற்கு -110 அடியும் அகலம்: கிழக்கு-மேற்கு- 84 அடியும் கொண்ட இந்த இராஜ கோபுரத்தின் சிறப்பு " இந்தக் கோவில் கோபுரத்தினுள் நுழையும் போது கோவிலுக்குள்ளிருந்தும் பாதி பகுதி நுழைந்த பின் நம் முதுகுக்குப் பின்னிருந்தும் (கோவிலுக்கு வெளியிலிருந்தும்) தென்றல் காற்று வீசுகிறது. இது போன்ற சிறப்பு வேறெந்த கோவிலிலும் கிடையாது.







கருத்துகள்