இலஞ்ச ஊழல் வழக்கில் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி
லஞ்ச ஊழல் வழக்கில் பொன்னமராவதி தாசில்தாரை சிறையிலடைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. லஞ்ச ஊழல் வழக்கில் புதுக்கோட்டை மாவட்டம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து
பொன்னமராவதி தாசில்தார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்து தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, தாசில்தாரை உடனடியாக சிறையிலடைக்க உத்தரவிட் டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா அரசமலையைச் சேர்ந்த சின்னையா என்ப வர். நெருஞ்சிக்குடி ஆற்றில் உள்ளூர் விவசாயத் தேவை மற்றும் வீடு கட்ட மணல் அள்ளியுள்ளார். இதனால் அவரது டிராக்டரை தாசில்தார் மூலம் பறிமுதல் செய் யப்பட்டது. இதுகுறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமானால் மாதம் ரூபாய்.10 ஆயிரம் லஞ்சமாகத் தரவேண்டும் எனக் கேட்டுப் பெற்ற பொன்னமராவதி தாசில்தாராக இருந்த துரைராஜ் வாங்கிய போது புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை மூலம்
12.7.2013 ல் கைது செய்யப் பட்டார். இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டில் தாசில்தார் துரைராஜிக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூபாய்.5 ஆயிரம் அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து தாசில்தார் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் பணி நீக்கமும் செய்தனர் துரைராஜ் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மேல் முறையீடு செய்தார்
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.முரளிசங்கர் அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர் நியாயம் இல்லாமல் நடந்த நிலையில் அடிப்படைக் கோட்பாட்டின் மீதான நம்பிக்கை சிதைக்கப்படுகி றது. லஞ்சம், ஊழல் புற்று நோயைப் போன்றது என்பது அனைவரும் அறிந்தது தான். இது மாநிலத்தின் ஒவ்வொரு அமைப்பிற்குள்ளும் உள்ளது. இதை சரியான நேரத்தில் கண்டறிந்து அகற்றா விட்டால் உயிரிழப்பைக் கூட ஏற்படுத்தும். மனுதாரர்மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதன் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு தண்டனையை கேள்விக்கு உள்ளாக்க முடி யாது. விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனை அதிகம் எனக் கூறமுடியாது. அந்த உத்தரவில் தலையிட வேண்டியதில்லை என்பதால் இந்த அப்பீல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. எஞ்சியுள்ள தண்டனைக் காலத்தை அனுபவித்திடும் வகையில் விசாரணை நீதி மன்றம் மனுதாரரை உடனடியாக. சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார் உத்தரவிட்டுள்ளார்.




























கருத்துகள்