காலஞ்சென்ற முன்னாள் அமைச்சரும் முக்கிய திராவிட இயக்கத்தின் தலைவரும் ஆன நாவலர் நெடுஞ்செழியன் மகன் மதிவாணன் காலமானார்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரத்தில், 1920 ஆம் ஆண்டு இராசகோபாலனார்-மீனாட்சிசுந்தரி மகனாக பிறந்த இரா.கோ.நாராயணசாமி. பின்னர் நாட்களில் ஈ.வே.ரா வின் திராவிடக் கருத்துகளாலும், தமிழ்மொழிப் பற்றாலும் தனது பெயரை நெடுஞ்செழியன் என்று மாற்றிக் கொண்டார். இவரது மனைவி மருத்துவர் விசாலாட்சி இவர்களுக்கு மதிவாணன் 1951 பிறந்த ஆம் மகன் அவரது மனைவி கல்யாணி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தலர். இவர்களுக்கு ஜீவன் நெடுஞ்செழியன் (இந்திய டென்னிஸ் வீரர்) சொப்னா மதிவாணன் என்னும் பிள்ளைகள் உள்ளனர்.அறிஞர் அண்ணாதுரை, 1949 ஆம் ஆண்டு 'திராவிட முன்னேற்றக் கழகம்' தொடங்கிய நிலையில் அவரது சமூக நபராக அங்கமாக அக்கட்சியின் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
1949 ஆம் ஆண்டு முதல் 1956 ஆம் ஆண்டு வரை அக் கட்சி பிரச்சாரக்குழுச் செயலாளராக இருந்தார்.1962 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரை எதிர்க்கட்சித்தலைவராகவும்.1956 ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டு வரை கட்சியின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார். அண்ணாதுரையின் மறைவிற்குப் பின்னர், 1969 முதல் 1977ஆம் ஆண்டு வரை மீண்டும் பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார்1977- ஆம் ஆண்டில் அஇஅதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராகவும் இருந்தார். பின்னர், 1977 ஆம் ஆண்டு முதல் 1978 ஆம் ஆண்டு வரை செயல் பொதுச்செயலாளராக இருந்தார். 1978 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை கட்சியின் பொதுச்செயலாளராக மாறிய நிலையில் 1987ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். மறைந்த நிலையில் கொள்கைபரப்புச் செயலாளரான ஜெ. ஜெயலலிதாவை அஇஅதிமுகவின் தலைமையாகத் தேர்ந்தெடுக்கப்பாடுபட்டார்.1967 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை அண்ணாதுரை தலைமையில் தி.மு.க. அமைச்சரவையில் கல்வி அமைச்சராகவும் (தி.மு.க.)
அண்ணாதுரை மறைந்த போது ஏற்பட்ட பிணக்கால், அதன்பின் பதவியேற்ற மு.கருணாநிதியின் அமைச்சரவையில் பங்கேற்காமல் விலகி இருந்தார்.
1969 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரை மு. கருணாநிதி அமைத்த அமைச்சரவையில் கல்வி அமைச்சராகவும் (தி.மு.க.).
1977 முதல் 1980 வரை முதல்வர் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் உணவு அமைச்சராகவும் (அ.தி.மு.க.).
1980 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எம்.ஜி.ஆர், ஜெ.ஜெயலலிதா ஆகியோர் அமைச்சரவையின் நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார் (அ.தி.மு.க.) .
இதுவரை தமிழ்நாடு அரசின் இடைக்கால முதலமைச்சராக 3 முறை இருந்தவர் முதலமைச்சர் அறிஞர் அண்ணா இறந்த 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி முதல் 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி வரையும், முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு சிகிச்சையில் இருந்த 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் 1985 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி வரை, பின்னர் எம்.ஜி.ஆர் காலமானார் அதில் 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் 1988 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் தேதி வரை இடைக்கால முதலமைச்சராக நாவலர் நெடுஞ்செழியன் பதவி வகித்தார். அவர் அரசியல் ரீதியாக நம்பர் 2 என மூன்று முதல்வர்களை வழிநடத்தியவர். ஆனால் தன் மகன் மதிவாணனை வாரிசு அரசியல் மூலம் கொண்டு வர முயற்சி செய்யவில்லை. அதைத் தான் அவரது கொள்கைத் தலைவர் அறிஞர் அண்ணாதுரையும் வாரிசாக உள்ள டாக்டர் பரிமளத்தை கொண்டுவற வில்லை.



கருத்துகள்