காப்புக்காடாகிய வனப்பகுதியில் மலை ஏறி மாடு மேய்க்கும் போராட்டம். நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த வனத்துறை.
தடையை மீறி கையில் கம்பு மாடுகளுடன் மலையேறிய அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தேனி மாவட்டத்தில் வனத் துறையினர்
தடையை மீறி மலையேறி மேய்ச்சலுக்கு ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சென்றால் மட்டுமே மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிகள் உயிர்ப்புடன் இருக்கும். எனும் கோரிக்கை வைத்து
தேனி மாவட்டம் கரட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி ஒருவர் மேய்ச்சலுக்காக அவரது வளர்ப்பு மாடுகளை வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்ற போது வனத்துறையினர் அவரைத் தாக்கி கீழே தள்ளிவிட்டனர். இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் பரவியதற்கு கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் வனத்துறையினர் சமரசம் பேசி பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காப்புக் காடுகளுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது போல் சிலர் அரியவகை மரங்களை வெட்டிக் கடத்துவதாக வனத்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனைக் கண்டித்து தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அடவுப்பாறையில் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். அதன்படி இன்று அவர் அடவுப்பாறையில் கால்நடைகளுடன் சில மாடு மேய்க்கும் நபர்கள் மற்றும் அவரது கட்சியினருடன் வனப்பகுதிக்குள் நுழைய முயன்றார். அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் என பலரும் சென்றனர். ஆனால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அவர்களை தடுத்து நிறுத்திய வனத்துறையினர் அனுமதியில்லை எனத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் .
ஆடு,0மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சென்றால் மட்டுமே மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிகள் இருக்கும். கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் விவசாயிகளுக்கு வனத்துறையினர் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
எனவே ஆடு, மாடுகளுக்கும் ஓட்டுரிமை வேண்டும். இலங்கையில் நடந்தது மட்டும் இனப்படுகொலை அல்ல. தமிழகத்தில் மதுப் பழக்கத்தை பழக்கி சாமானிய மக்களை கொல்வதும் இனப்படுகொலைதான். வெளி மாநிலத்தவர்களுக்கு இங்கு அனுமதி கொடுத்தால் விரைவில் அவர்கள் நம்மை வெளியே அனுப்பி விடுவார்கள்.எனத் தெரிவித்தார்
இதையடுத்து மலையேறி மாடு மேய்க்கும் சீமானின் போராட்டத்தை தடுத்து வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் வனத்துறையினரின் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஆகியோர் வனப்பகுதிக்குள் மாடு மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறையினர் விதித்த தடையை மீறி சீமான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏறபட்டுள்ளது. இதில் பொது நீதி யாதெனில்:- தமிழ்நாட்டில் மேய்ச்சல் நிலம் மற்றும் மேய்ச்சல் புறம்போக்கு தனியே உண்டு ஆனால் இவர்கள் கொடிய மிருகங்கள் உள்ள காப்புக் காடுகளில் ஆடுமாடு மேய்க்கும் போராட்டம் நடத்துவது அதற்கான முயற்சியாகத் தெரியவில்லை .. இந்திய வனத்துறை சட்டம் எப்போதும் அனுமதிக்காது ..
இந்திய வனச் சட்டம், 1927, இந்தியாவின் வனப் பாதுகாப்பிற்கு ஒரு முக்கிய சட்டமாகும். இந்த சட்டம் காடுகளை அழிவிலிருந்து பாதுகாக்கவும், வனப் பொருட்களை முறையாக நிர்வகிக்கவும் உதவுகிறது. The Indian Forest Act, 1927 was largely based on previous Indian Forest Acts implemented under the British Raj. The most famous one was the Indian Forest Act of 1878. கிராமப்புற பழமொழி உண்டு 'கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதை' என்பது இதுதான்


கருத்துகள்