இலங்கை முன்னாள் அதிபர் ரணிலவிக்கிரமசிங்க கைது
இலண்டன் பயண நிதி முறைகேடு வழக்கில், இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கேகைது செய்யப்பட்டார். இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, (வயது 76) பிரதமராகவும் பதவி வகித்தார். பல ஆண்டு காலம் இலங்கை அரசியலில் உள்ளார். இலங்கை பொருளாதார ரீதியாக திவாலான போது, அதிபராக பொறுப்பேற்று மீண்டும் நிலைமையை சீர்படுத்தியவர் அதிபராக இருந்த போது செப்டம்பர் மாதம் 2023 ஆம் ஆண்டு லண்டன் பயணம் மேற்கொண்டார். அவரது மனைவி மைத்ரி, லண்டன் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றதை முன்னிட்டு இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதில், ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிலரும் கலந்து கொண்டனர். இங்கிலாந்து பயணத்தின் ஒரு பகுதி தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அரச நிதியில் இருந்து நிதியளிக்கப்பட்டதாகவும், ரூ. 16.9 மில்லியன் செலவாகியதாகவும் பொலிஸார் தெரிவித்த நிலையில் அது தொடர்பிலான விசாரணைக்காகவே அழைக்கப்பட்டிருந்தார்..
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியிருந்தார்.குற்றப்புலனாய்வுதிணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
அவரது பதவிக் காலத்தில் அமெரிக்காவிற்கும் பின்னர் இங்கிலாந்துக்கும் பயணம் மேற்கொண்டார்.இதற்கென அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி உள்ளார் என்பது புகார்.இந்தப் புகாரின் படி விசாரணைக்கு ஆஜராகும்படி இலங்கை குற்றப்பிரிவு காவல்துறையினர், ரணில் விக்கிரமசிங்க வுக்கு சம்மன் அனுப்பினர். அதன்படி இன்று காலை ஆஜரான ரணில் விக்கிரமசிங்கே கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கருத்துகள்