ரேஷன் கார்டுகளில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் பொது விநியோகத் திட்டத்திலிருந்து மானிய விலையில் உணவு தானியங்களை வாங்குவது
தகுதியுள்ள வீடுகளுக்கு இந்தியாவில் மாநில அரசுகளால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ ஆவணமாகும் . அவை பல இந்தியர்களுக்கு பொதுவான அடையாள வடிவமாகவும் உள்ளது
NFSA-வின் கீழ், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் பொது விநியோகத் திட்ட மானிய விலையில் உணவு தானியங்களைப் பெறத் தகுதியுடையவை வீடுகளைக் கண்டறிந்து அவர்களுக்கு ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும். NFSA-வின் கீழ் இரண்டு வகையான ரேஷன் கார்டுகள் உள்ளது.மாநில குடும்ப (PHH) ரேஷன் கார்டுகள், அந்தந்த மாநில அரசு நிர்ணயித்த தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யும் குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு குடும்பமும் ஒரு உறுப்பினருக்கு மாதத்திற்கு 5 கிலோகிராம் உணவு தானியத்தைப் பெற உரிமை உண்டு.
அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) ரேஷன் கார்டுகள் "ஏழைகளிலும் ஏழ்மையான" குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு AAY குடும்பமும் மாதத்திற்கு 35 கிலோகிராம் உணவு தானியங்களைப் பெற உரிமை உண்டு.
"ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு" என்பது இந்தியாவிற்குள் உள்நாட்டு குடியேறிகள் உட்பட அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆதார்அடிப்படையிலான தேசிய ரேஷன் கார்டு பெயர்வுத்திறன் திட்டமாகும், இதன் கீழ் பயனாளிகள் இந்தியாவில் எங்கிருந்தும் மானிய விலையில் உணவை வாங்கலாம். உதாரணமாக, ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி தனது தற்போதைய மற்றும் புலம்பெயர்ந்த இடத்திலேயே தனது பங்கைப் பெறலாம், அதே நேரத்தில் அவரது குடும்பத்தினர் தங்கள் பங்கை அவர்களின் மூல மற்றும் சொந்த ஊர் வீட்டில் பெறலாம். இந்த நிலையில் AAY, PHH ரேசன் கார்டுகளில் தானாக நீக்கப்படும் பெயர்கள்! உயிருடன் இருக்கும் நபர்களை இறந்தவர்கள் என நீக்கிய சம்பவமும் நடக்கிறது இது மக்கள் தங்கள் குடும்ப அட்டையை சரி பார்க்க வேண்டியது அவசியம் தமிழ்நாடு அரசின் பெரும்பாலான நலத்திட்ட உதவிகள் குடும்ப அட்டை எனும் ரேஷன் கார்டு மூலமாகவே வழங்கப்படுகிற நிலையில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் தாமாகவே ரேஷன் கார்டில் இருந்து நீங்குவதாகவும், ஆனால் சில உயிருடன் உள்ள நபர்கள் பெயரை நீக்கம் செய்து அதற்கு சட்ட நடவடிக்கை எடுத்த பிறகு பெயர்கள் சேர்ந்த நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பல பிரச்சனைகளை மக்கள் எதிர்கொள்வதாகக் கூறுகின்றனர் ரேஷன் கார்டுதாரர்கள். குறிப்பாக குடும்பத் தலைவர்களின் பெயர் மாறுவது உள்ளிட்டவற்றில் கடும் சிக்கலைச் சந்திப்பதாகக் கூறுகின்றனர்
.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல்வேறு நலத்திட்ட உதவிகள் விலையில்லா உணவு பொருட்கள், பொங்கல் பரிசுத்தொகுப்பு, கலைஞர் பெயரில் மகளிர் உரிமை தொகை திட்டம் வாங்குவதில் தான் பெயர் நீக்கம் குழப்பம் நடந்துள்ளது. மற்றும் பல்வேறு அரசின் நலத்திட்டங்கள் ரேஷன் கார்டுகள் மூலமாக வழங்கப்படுகிறது.மேலும் பல்வேறு திட்டங்களுக்கு முக்கிய அடையாள அட்டையாகவும் ரேஷன் கார்டு இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுமார் இரண்டு கோடியே 26 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ளன. டிஜிட்டல் முறையில் தற்போது அவை ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளதன் மூலம் 7 கோடியே 46 லட்சம் மக்கள் அதில் பயன்பெறுகின்றனர். அந்தியோதயா கார்டு வைத்துள்ளவர்களுக்கு 35 கிலோ அரிசி, பருப்பு, ஜீனி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மற்ற அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி மட்டும் வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு உணவுப் பொருட்கள் வழங்கப்படும் அளவு மாறி மாறி அமையும். குழந்தை பிறப்பு, திருமணம் ஆகியவற்றின் மூலம் புதிய உறுப்பினர்கள் ரேஷன் கார்டுகளில் சேர்க்கப்படுவதும், புதிய ரேஷன் கார்டுகள் விண்ணப்பிக்கும் போது ஏற்கனவே உள்ள குடும்ப அட்டையில் இருப்பவர்களின் பெயர்கள் நீக்கப்படுவதும் தான் வழக்கம்.
ரேசன் கார்டுகளில் பெயர்களை சேர்க்கும் போது காட்டும் ஆர்வத்தை நீக்குவதற்கு மக்கள் காட்டுவதில்லை. குறிப்பாக குடும்ப உறுப்பினர் யாராவது இறந்தால் அது குறித்த தகவலை பொதுமக்கள் தெரிவிப்பதில்லை. இதனால் இறந்தவர்களுக்கும் உணவு பொருட்கள் கூடுதலாக வழங்கப்படுவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. தற்போது தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் இணைக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்படும் நிலையில் பிறப்புச் சான்றிதழ், இறப்பு சான்றிதழ் ஆகியவை ஆன்லைன் மூலம் வழங்கப்படுகிறது. இதனால் இறந்தவர்களுக்கும் உணவு பொருட்கள் கூடுதலாக வழங்கப்படுவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், குடும்பத்தில் யாராவது ஒருவர் இறந்ததாக இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டால் தானாகவே ஆதார் எண் அடிப்படையில் ரேஷன் கார்டில் இருந்து நீங்குகிறது. அதாவது ஒருவர் இறந்துவிட்டார் என்றால் அவரது ஆதார் எண்ணை கொடுத்து உறவினர்கள் இறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பார்கள். சான்றிதழ் வழங்கப்பட்டு பதிவான உடன் அது தமிழ்நாடு அரசின் உணவு பொருள் வழங்கல் துறைக்கு அனுப்பப்படும். இதை அடுத்து தானியங்கியாகவே அந்தப் பெயர் நீக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த நடைமுறை இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் உயிருடன் உள்ள நபர்கள் நீக்கம் செய்து அதை சட்ட நடவடிக்கை எடுத்த பிறகு சரிசெய்த மாவட்ட வழங்கல் அலுவலர் நடவடிக்கை எடுத்த நிகழ்வு உண்டு. ஆனால் அடிப்படையில் இது ஒரு நல்ல திட்டம் என்றாலும் சில சிக்கல்களையும் மக்கள் சந்திக்க வேண்டி இருக்கிறது. குடும்பத் தலைவர் ஒருவேளை இறந்து விட்டால் அந்த ரேஷன் கார்டில் இருக்கும் பெரியவர்கள் சிறியவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் தானியங்கியாகவே யாராவது ஒருவர் குடும்பத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால் புகைப்படம் மாற்றப்படுவதில்லை. இதனால் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கிறது.மேலும் புகைப்படத்தை மாற்றவும் அரசு சிவில் சப்ளை அலுவலர்களை நேரில் சந்தித்து முறையிட வேண்டி இருக்கிறது. இதற்கு கால தாமதமும் ஆகிறது. எனவே தானியங்கி பெயர் நீக்கும் முறையைக் கைவிட்டு இறந்தவர்களின் பெயரை நீக்க வேண்டும் உயிருடன் உள்ள நபர்களை இறந்தவர்கள் என நீக்கம் செய்யக் கூடாது. இதில் பயனாளிகளை அறிவுறுத்தலாம் எனவும், இதன்மூலம் பொதுமக்கள் தாங்களாகவே ரேஷன் கார்டில் பெயர்களை மாற்றி குடும்ப தலைவரை தேர்ந்தெடுக்க முடியும் என சட்ட ரீதியான செயலாகும் எனக் கூறுகின்றனர் பொதுமக்கள்.
.jpg)







கருத்துகள்