அமெரிக்காவில் "ஹெச்-1பி விசா கட்டணத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் உயர்த்தியிருப்பது
அமெரிக்க ஆய்வுகளைப் பாதித்து இந்தியாவின் வளர்ச்சியை வேகப்படுத்தும். உலகளாவிய திறமைசாலிகளுக்கான கதவுகளை அடைப்பதன் மூலம் அமெரிக்கா அடுத்தக்கட்ட ஆய்வகங்கள், காப்புரிமைகள், புதிய ஆய்வுகள் மற்றும் ஸ்டார்ட்அப்களை இந்திய நகரங்களான பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் குருக்கிராமை நோக்கி நகர்த்துகிறது."
"இந்தியாவின் சிறந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் தற்போது இந்தியாவின் வளர்ச்சிக்கும் வளர்ந்த இந்தியாவிற்கும் பங்களிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். அமெரிக்காவின் இழப்பு இந்தியாவின் லாபமாக மாறும்." எனப் பலரும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முக்கிய ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகியவை நீண்ட காலமாக ஹெச்-1பி விசாக்களை மட்டுமே நம்பியிருந்தன.
பன்னாட்டு நிறுவனங்களான கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், ஆப்பிள், இந்திய வல்லுநர்களை அதிகளவில் பணியமர்த்தியுள்ளன. யூஎஸ்சி ஐஎஸ் தரவுகளின் படி இந்த நிறுவனங்கள் தான் அதிகபட்சமான ஹெச்-1பி விசாக்களைப் பெற்றுள்ளன.
இவ்வளவு அதிக கட்டணம் விதிப்பது அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் செயல்பாட்டை கடினமாக மாற்றும் எனக் கூறுகிறார் அஜய் ஸ்ரீவஸ்தவா.
மேலும் கூறுகையில், "அமெரிக்காவில் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஒரு ஐடி நிறுவன மேலாளர் ஆண்டுக்கு 1.2 லட்சம் முதல் 1.5 லட்சம் டாலர்கள் வரை சம்பாதிக்கிறார். ஆனால் ஹெச்-1பி விஷாதாரர் சம்பளம் அதைவிட 40 சதவீதம் குறைவாகவே இருக்கும், அதுவே இந்தியாவில் 80 சதவீதம் குறைவாகவே உள்ளது. அதிகமான கட்டணத்தால் நிறுவனங்கள் இந்தியாவிலேயே வேலையை முடிக்க நிர்பந்திப்பார்கள். அதன் மூலமாக ஹெச்-1பி விண்ணப்பங்கள் குறைந்து, உள்ளூர் வேலைவாய்ப்புகளும் குறைந்து அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கான திட்டச் செலவுகள் அதிகரிக்கும், புதிய ஆய்வுகளும் குறையும்." என்கிறார். இந்த முடிவு கிட்டத்தட்ட ஒரு தடை விதிக்கப்பட்டதைப் போன்றது தான். நம் இந்திய மக்கள் விளையாட்டுக்காக அங்கு செல்வதில்லை, அவர்களின் தொழில்நுட்பம் மற்றும் அமைப்பை மேம்படுத்துகின்றனர். இந்தியாவுக்கு இழப்புகள் உண்டு, ஆனால் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய இழப்புகள் இருக்கும். சிறிது காலம் கழித்து தான், அமெரிக்கா இதனை உணரும்." என்கிறார் மற்றொரு நிறுவன நபர்.
அமெரிக்காவில் உள்ள இந்திய ஐடி நிறுவனங்கள் ஏற்கெனவே 50 முதல் 80 சதவீதம் வரை உள்ளூர் மக்களைத் தான் வேலைக்கு சேர்ப்பதாகவும் இந்த முடிவால் புதிய வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாகாது எந்தப் பலன்களும் இருக்காது என்கிறார் அஜய். "இந்த நகர்வு விளம்பரத்திற்கானது. இனி இந்தியர்களை அமெரிக்காவில் பணியமர்த்துவது அமெரிக்க குடிமக்களை வேலைக்கு வைப்பதை விட அதிக செலவானதாக மாறும்" என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா வெள்ளை மாளிகையின் ஊடகப் பிரிவுச் செயலாளர் கரோலின் லெவிட் எக்ஸ் பதிவில் இந்த உத்தரவைப் பற்றி விளக்கியதில்.
இது வருடாந்திரக் கட்டணமில்லை. விண்ணப்பிக்கும் போது செலுத்தும் ஒருமுறைக் கட்டணம் மட்டுமே.
ஏற்கெனவே ஹெச்-1பி விசா வைத்துக் கொண்டு தற்போது அமெரிக்காவிற்கு வெளியே இருப்பவர்கள் மீண்டும் வருகிற போது 1 லட்சம் டாலர் செலுத்த வேண்டியதில்லை. ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் எப்போதும் போல நாட்டைவிட்டு வெளியே சென்று திரும்பலாம். இது அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவால் பாதிக்கப்படாது
இந்த விதி புதிய விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும். பழைய விசாக்களின் புதுப்பித்தல்களையும் ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களையும் இந்த உத்தரவு பாதிக்காது எனத் தெரிவித்துள்ள நிலையில் இது அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இந்தியா மீதான வன்மமாகவே பார்க்கும் பலரும் கூறவது உண்மையா என்பது இனிவரும் காலங்களில் தான் அறியமுடியம்.








கருத்துகள்