38 பேர் பலியான கரூர் சம்பவத்திற்கு விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்
கரூர் சம்பவத்திற்கு விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்.
மிகவும் துயரச் சம்பவம். தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் பலி 62 பேர் சிகிச்சை பெறும் நிலையில். ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது மாநில அரசு இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து பத்து லட்சம் ரூபாயும் மருத்துவ சிகிச்சை பெறும் நபர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவியும் வழங்க முதல்வர் அறிவிப்பு. இந்த நிலையில் தமிழ்நாடு அரசியலில் அறிஞர் அண்ணாதுரைக்கு கூடிய கூட்டத்தை விட தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு கூட்டம் கூடியதை மறுக்க இயலாது.
இன்று மதியம் கூட வெயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் தான் முதலில் சிலர் மயக்கமடைந்த செய்தியைப் பார்த்தோம். ஆனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட எவ்வித காரணங்களும் நடைபெறாத நிலையில் இத்தனை உயிர்கள் பறிபோனதன் உண்மைக் காரணம் அறியப்பட வேண்டும்.
அரசியலில் யார் காலிலும் விழுந்து சில தற்குறி தலைவர் போல பதவிக்காக அதிகாரத்திற்காக எதையும் செய்யத் துணிவார்களென்பது அனைவரும் அறிந்ததே.
கடந்த 24 மணி நேரத்திற்குள் காசு குடுத்து எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு கூட்டிய கூட்டத்தை விட தன்னெழுச்சியாகக் கூடிய கூட்டம் இரு பெரும் ஊழல் கட்சிகளுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது என்பது உண்மை தான்
தற்செயலான விபத்தோ திட்டமிட்டு நடத்தப்பட்டதோ இந்த பெருந்துயரத்திற்கு அரசு விரைந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
ஒரு கூட்டம் நடக்க அனுமதி அளித்த அரசு அதற்குரிய பாதுகாப்பை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவச் சேவைகளை வழங்க முடியாத தமிழ்நாடு பொதுப்பணிப்துறையும் காவல்துறையும் இக்கொடுமைக்கு காரணமாகியிருக்கிறது. இந்த நிலையில் பாரதக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவில்துள்ளார்கள்
காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் - என பிரதமர் நரேந்திர மோடி
கரூர் மாவட்ட நிர்வாகமும் காவல்
துறையும் தான் இதற்கு முதல் பொறுப்பு..
அனுமதி வழங்கியவர்களே பொறுப்பு. இசையமைப்பாளர் ஏ ஆர் இரகுமான் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய இரண்டு ஆணையர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டார்கள். இப்போது அரசு திட்டமிடல் இல்லை உளவுத்துறை பணி சரியாக இருந்ததா என்பதும் மற்றும் மருத்துவ மனையில் டாக்டர் இல்லை காவல் பணிக்கு உரிய காவலர்கள் இல்லை காவல்துறை சரியான பாதுகாப்பு ஒத்துழைப்பு கொடுத்து இருக்கலாமே என்பதுமே இப்போது பேசு பொருள்
ஆளுநர் மற்றும் முதல்வர் வரும் போது ரோடு மூழுவதும் காவல் காக்க நிற்கும் காவலர்கள் மருந்துக்குக் கூட இல்லை. நடிகரைப் பார்க்கக் கூட்டம் கூடியது என்பது தோற்பவர்கள் கூறும் காரண மூட்டை.கூட்டம் பாதுகாப்புக்கு காவல் துறை பணி எவ்வளவு
இரண்டாவது விஜய் கட்சி நிர்வாகிகள்..
மூன்றாவது இந்திய ரசிகர்கள் மனநிலை.
கரூரில், தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட சுமார் 38 பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு, எத்தனை பேர் வருவார்கள் என்பதை முறையாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும், கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான அளவு காவல்துறையினரை பணியமர்த்துவதும் காவல்துறையின் பொறுப்பு.
நடிகர் விஜய் கூட்டத்தில், மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இத்தனை கவனக்குறைவாகத் தமிழக அரசும், காவல்துறையும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு, அந்த மாவட்டத்தின் மொத்த காவல்துறையினரையும் அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகியிருக்கிறது
உடனடியாக, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் முழு விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்". என பாஜக முன்னால் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்த தகவல். மேலும் "குளறுபடிகள்தான் உயிரிழப்புக்குக் காரணம்"க ரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழப்பு என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது
பரப்புரைக்கான ஏற்பாடுகளைச் செய்வதிலும், கூட்டத்தை காவல்துறையினர் ஒழுங்குபடுத்துவதிலும் செய்த குளறுபடிகள் தான் இதற்குக் காரணம்
கரூர் நெரிசல் மற்றும் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்;
நெரிசலில் சிக்கி உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூபாய்.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும்
என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட தகவல் மேலும் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் அவர்கள் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், மற்றும் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது .
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர். எம். ஆர். விஜயபாஸ்கர் அவர்களை நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கே அனுமதிக்கப்பட்டாருக்கான உதவிகளை வழங்க பணித்துள்ளேன்.
மேலும், எனது அறிவுறுத்தலின் படி, மருத்துவமனை உள்ள பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) தொண்டர்கள் மனிதச் சங்கிலி அமைத்து, சிகிச்சை பெறுவோருக்கான உரிய உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தமிழ்நாடு அரசு மேற்க்கொள்ளவும்,
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்துகிறேன். என அதிமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் கருப்புநாள் இன்று திக்கித்து நிற்போர் ஒருபுறம் இப்படியான சூழலிலும் மவுனித்து மய்யமாய் நிற்போரும் இருக்கிறார்கள். யாரையும் திட்டக்கூட வேண்டாம். ஒரு இரங்கல், காயமுற்றோர் நலம்பெற பிரார்த்தனை செய்வதாக ஒரு அறிக்கை மட்டுமே வந்துள்ளது.
சரி போகட்டும்.
த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் தவிர, ஆல் இன்டியா பார்ட்டி முதல் அங்கீகாரம் இழந்திருக்கும் பார்ட்டிவரை வருத்தமும் இரங்கலும் தெரிவித்திருக்கிறார்கள்.
யாருடைய கட்சியின் பிரச்சார நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்களோ, அந்தக் கட்சியின் தலைவர் மட்டும் ஒன்றும் பேசாமல் போனது தான் அரசியல் கேள்வி இருந்த போதும்
விஜயகாந்தை கேப்டன் என்று சொன்னால் மட்டும் போதாது, கேப்டன் போல ஒற்றை விரலசைவில்; ஒற்றைக் குரலொளியில்; ஒட்டுமொத்த தொண்டனையும் கட்டிப்போடும் ஆளுமையும் சேர்ந்தே இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் அந்தத்தகுதியை வளர்த்துக் கொள்வது நல்லது.
சரி, இதுகூட நாள்கள் பிடிக்கும்...
இதே கரூரில், இப்படியான பிரமாண்ட மாநாட்டை, ஆளுங்கட்சியான திமுக, கொஞ்ச நாள்களுக்கு முன்னர் நடத்தியது; காயம் இல்லை; மயக்கம் இல்லை; அதிகபட்சமாய் யாரும் சாகவில்லை; எப்படி இது சாத்தியப்பட்டது என்று யாராவது ஒரு கரைவேட்டியை கேட்டு அறிந்து கொண்டிருக்கலாம். அதுவும் பிடிக்கவில்லையா, அதிமுக தரப்பில் கேட்டிருந்தால்கூட சொல்லி இருப்பார்கள்...
வழிநெடுக குண்டும் குழியுமாய் சாலைகள் இருந்தது உண்மை அதில் பொறுமை இல்லாத தொண்டர்கள்
ஒரு மகனை இழந்து விட்டேன் ஒரு மகனைக் காணவில்லை என்று கதறும் தாயின் அருகே 38 உயிர்களை இழந்த உறவுகளின் கதறல்கள் சோகம்
பின்னர் விரிவான செய்திகளுடன் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் தானாக முன்வந்து உத்தரவிட வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்புகளாகிறது



























கருத்துகள்