உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கு 9 பேர் பட்டியலை திருப்பியனுப்பிய மத்திய அரசு.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக நியமிப்பதற்குப் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்ட 9 வழக்கறிஞர்கள் கொண்ட பட்டியலை மத்திய அரசுதிரும்ப அனுப்பியுள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டை பின்பற்றி, உரிய பிரதிநிதித்துவம் வழங்கி, புதிய முன்மொழிவை அனுப்புமாறு மத்திய சட்டத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது தலைமை நீதிபதி உட்பட மொத்தம் 56 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 19 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வழக்கறிஞர்கள் கே.கோவிந்தராஜன், இ.வி.சந்துரு(எ) இ.சந்திரசேகரன், பி.வி.பாலசுப்பிரமணியம், என்.சி. அசோக்குமார், ஆர்.காந்தி, அசன்முகமதுஜின்னா, எம்.பி. செந்தில், ஜெ.சந்திரன் சுந்தர் சசிகுமார், இ.மனோகரன் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முன்மொழிவு அனுப்பியது.
இந்த முன்மொழிவு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனைக்காக மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்ற கொலீஜியம், சென்னை உயர் நீதிமன்றத்தின் முந்தைய தலைமை நீதிபதியின் முன்மொழிவை மறுபரிசீலனை செய்வதற்காக திரும்ப அனுப்ப மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.முன்மொழிவுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வழக்கறிஞர்கள் மற்றும் பிற தகுதியான வழக்கறிஞர்களின் நன்னடத்தையைச் சரிபார்த்துத் தகுதியான வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்கும் வகையில் புதிய முன்மொழிவு அனுப்பவும் உச்சநீதிமன்ற கொலீஜியம் கூறியுள்ளது. இதையடுத்து 9 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்கும் முன்மொழிவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.இது தொடர்பான கடிதத்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களின்போது பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கி முன்மொழிவுகளை அனுப்புமாறும் மத்திய அரசின் சட்டத்துறை தெரிவித்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில்
பரிந்துரைக்கப்பட்ட 9 மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட பட்டியலை மத்திய அரசுதிருப்பி அனுப்பியது. நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டை பின்பற்றி, உரிய பிரதிநிதித்துவம் வழங்கி, புதிய முன்மொழிவை அனுப்புமாறு மத்திய சட்டத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளன. தற்போது தலைமை நீதிபதி உட்பட மொத்தம் 56 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 19 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வழக்கறிஞர்கள் கே.கோவிந்தராஜன், இ.வி.சந்துரு(எ) இ.சந்திரசேகரன், பி.வி.பாலசுப்பிரமணியம், என்.சி. அசோக்குமார், ஆர்.காந்தி, அசன்முகமதுஜின்னா, எம்.பி. செந்தில், ஜெ.சந்திரன் சுந்தர் சசிகுமார், இ.மனோகரன் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முன்மொழிவு அனுப்பியது.
இந்த முன்மொழிவு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஆலோசனைக்காக மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்ற கொலீஜியம், சென்னை உயர் நீதிமன்றத்தின் முந்தைய தலைமை நீதிபதியின் முன்மொழிவை மறுபரிசீலனை செய்வதற்காக திரும்ப அனுப்ப மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.முன்மொழிவுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வழக்கறிஞர்கள் மற்றும் பிற தகுதியான வழக்கறிஞர்களின் நன்னடத்தையைச் சரிபார்த்துத் தகுதியான வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்கும் வகையில் புதிய முன்மொழிவு அனுப்பவும் உச்சநீதிமன்றக் கொலீஜியம் கூறியுள்ளது. இதையடுத்து 9 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்கும் முன்மொழிவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.இது தொடர்பான கடிதத்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களின்போது பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கி முன்மொழிவுகளை அனுப்புமாறும் மத்திய சட்டத்துறை அதில் கூறியுள்ளது விரைவில் ஒரு புதிய பட்டியலை தயாரித்து நீதிமன்றத்தில் இருந்து அனுப்பப்படும் என்று காணலாம். நீதிபதிகள் நியமனத்தில்
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 124 பிரிவு (2) ன் படி, குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அல்லது உயர் நீதி மன்றங்களின் தலைமை நீதிபதிகளை தேவைக்கேற்ப கலந்தாலோசனை செய்து, மற்ற நீதிபதிகளை நியமனம் செய்கிறார்.
சட்ட பிரிவு 124 (4) ன் படி, ஒரு நீதிபதி அந்தப் பொறுப்பை வகிக்கத் தகுதியற்றவர் அல்லது (லஞ்சம் போன்ற) இழி நடத்தை கொண்டவர் என்று கருதினால், குற்றம் மீது விசாரணை நடத்தி, பாராளுமன்றத்தில் விவாதித்து பெரும்பான்மை வாக்குகளுடன் பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யலாம். அதனடிப்படையில் குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்வார்.
இந்திய நீதிபதிகள் உத்தேச மதிப்பாக 7800 பேர் பணியில் இருக்கிறார்கள். இவர்களிடம் சொத்து மதிப்பு பட்டியல் நிர்வாகத்தால் கேட்க முடியாது. கேட்டால் நீதி துறையில் நிர்வாகம் குறுக்கீடு எனும் தீர்ப்பு வழங்கும். காரணமாக தன்னிச்சையாக தனது சொத்து விவரங்களை அவர்கள் வெளியிட வேண்டுமென உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் சிலர் கூறியதோடு அவர்களும் சேர்த்து மொத்தம் 780 நீதிபதிகள் கள் மட்டுமே தங்களுடைய சொத்து விபரங்களின் பட்டியலை வெளியிட்டனர். மீதியுள்ள 7000 த்துக்கு மேல் உள்ள நீதிபதிகள் தங்களுடைய சொத்துப் பட்டியலை வெளியிட மறுத்தனர் என்ற ஒரு குற்றச் சாட்டும் உள்ளது. ஆக தங்களின் சொத்துபட்டியலை வெளியிட மறுக்கும் நீதிபதிகளிடம் நேர்மையான நீதியை எதிர் பார்க்க முடியுமா என்று பல மூத்த வழக்கறிஞர்கள் மத்தியில் எழுந்து உள்ளது இது குறித்து லோக் பால் வினா எழுப்ப உரிய அமைப்பாக உள்ளது.
நீதிபதிகளை நீதிபதிகளே தேர்வு செய்யும் கொலீஜியம் வழிமுறைகள் நடைமுறையில் உள்ளது. மூன்று நீதிபதிகள் ஆணைப்படி அமலிலிருக்கும் கொலீஜியம் சிஸ்டம் தான்
இந்த சிஸ்டம் மூலம் பதவியில் இருக்கும் நீதிபதிகளின் உறவினர்களை நீதிபதிகளாக நியமிக்கும் பழக்கம் உருவானது (uncle judge syndrome). இந்த முறைகேட்டை 2017 ஆம் ஆண்டில் நீதிமன்றம் ஒத்துக் கொண்ட போதும் இதுவரை அதை சீர் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
நீதிபதிகளை தேர்வு செய்ய நீட் அல்லது யூபிஎஸ்சி போன்ற உயர்வான தேர்வு முறை அவசியம் என வெகு காலமாகவே கருதப் பட்டு வந்த நிலையில், இந்த அவசியத்தை கருத்தில் கொண்டு, 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், தேசிய நீதிபதிகள் நியமன கமிசன் (National judicial appointments commission (NJAC) மசோதா 2014, இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்று, குடியரசு தலைவரால் சட்டமாக்கப் பட்டது.
குடியரசு தலைவரால் இயற்றப் பட்ட இந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் செல்லாது எனத் தீர்ப்பளித்தது மட்டும் அல்ல, நீதிபதிகள் பிற நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலீஜியம் சிஸ்டம் (collegium system) முறையை மீண்டும் அமுல் படுத்தியது. அதற்கு, நீதி மன்றங்களில் நிர்வாகத் தலையீடு இருக்கக் கூடாது எனும் அரசியல் சாசன வரைமுறை மீறப்பட்டு உள்ளது என்பதாகும்.
இப்போது பல்கலை துணைவேந்தர் நியமனத்தில், குடியரசு தலைவருக்கு நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது, நிர்வாகத்தில் நீதித் துறைமின் தலையீடு ஆகாதா என்ற கேள்வி எழுகிறது.
2022 ஆம் ஆண்டு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமனம் இதுவரை குடும்ப சொத்து மாதிரி 250 முதல் 300 குடும்பங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், பெண்களுக்கும் தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களுக்கும் உரிய ஒதுக்கீடு வழங்கப்படாமல் உள்ளதென்றும் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 33 சதவீதமும், உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 50 சதவீதமும் நீதித் துறையில் உயர் பதவியில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களாகவே உள்ளதாக ஒரு ஆய்வு கூறுகிறது. உச்ச நீதி மன்றத்தில் பணியாற்றும் 31 நீதிபதிகளில் 6 பேர் முன்னாள் நீதிபதிகளின் வாரிசுகள் ஆகவும் உள்ளனர். மீதம் உள்ளவர்கள் உயர் நீதி மன்றத்திலிருந்து நியமிக்கப் பட்டாலும் நீதிமன்ற குடும்ப பின்புலம், அல்லது அரசியல் பின்புலம் உள்ளவர்களாகவே உள்ளனர். என மூத்த வழக்கறிஞர்கள் மத்தியில் கருத்து உள்ளது.
இப்படிப்பட்ட காரணங்களால் கொலீஜியம் அமைப்பு உள்ள நிலையில் , OBCs, SCs and STs, மக்களுக்கு உரிய விகிதாசாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி பதவி வழங்கவில்லை என்ற கருத்தும் உள்ளது.
இதற்கு தீர்வு தான் என்ன? மக்கள் ஆட்சியில் மக்கள் தான் பெரியவர்கள். மக்கள் பிரதிநிதிகளால் மட்டுமே, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு சட்டமியற்ற முடியும். தேவைப் பட்டால் அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தவும் முடியும். அப்படி இயற்றப்பட்ட சட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு உள்ளதா என்று மட்டுமே நீதிமன்றம் ஆராய முடியும். சட்டம் இயற்றத் தடை போட முடியாது.
மத்திய அரசும், குடியரசு தலைவரும் கலந்து ஆலோசனை செய்து, இது போன்ற நீதி மன்றங்களின் செயல்பாட்டுக்கு நீதி பெறும் வகையில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உரிய தகுந்த திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதே மக்கள் விருப்பமாக உள்ளது.



கருத்துகள்