முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நியோமேக்ஸ் மோசடியில் காத்திருக்கும் செஃபி மற்றும் அமலாக்கத்துறை

நியோமேக்ஸ் மோசடியில் காத்திருக்கும் செஃபி மற்றும் அமலாக்கத்துறை அக்டோபர் மாதம்.8 ஆம் தேதி வரை புகாரளிக்க உயர்நீதிமன்றம் அனுமதி

நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் புகாரளிக்க அக்டோபர் 8ஆம் தேதி வரை இறுதி வாய்ப்பு வழங்கியது உயர்நீதிமன்றம் அக்டோபர் 8ஆம் தேதிக்குள் புகார் அளிப்பவர்களுக்கு மட்டுமே இழந்த தொகை பெற்றுத்தரப்படும் என்றும் அறிவிப்பு 


பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் நேரிலோ அல்லது eowmadurai2@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ புகார் அளிக்கலாம் - நீதிபதிநியோமேக்ஸ் நிறுவன சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை விரைவில் முடிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவன பல ஆயிரம் கோடிக்கு முதலீடு வசூலித்து திருப்பி தராமல் மோசடி செய்தது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் மற்றும் தேனி மாவட்டம் கம்பம், தாமரைக்குளம் மற்றும் விருதுநகர் மாவட்டம் வாய்ப்பூட்டான்பட்டி, சிவகங்கை மாவட்ட ம் ஒக்கூர் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தக் கோரி, தேவிகுமார் உட்பட பலர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர் அந்த மனு விசாரணையில்

நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் புகாரளிக்க அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி வரை இறுதி வாய்ப்புகள் வழங்கியது உயர்நீதிமன்றம் 


அக்டோபர் 8ஆம் தேதிக்குள் புகார் அளிப்பவர்களுக்கு மட்டுமே இழந்த தொகை பெற்றுத்தரப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது 

பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் நேரிலோ அல்லது eowmadurai2@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ புகார் அளிக்கலாம் என- நீதிபதி தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் மனுக்களை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். பொருளாதார குற்றப்பிரிவு துணை க் கண்காணிப்பாளர் தரப்பில், ‘‘நியோமேக்ஸ் நிறுவன மோசடி தொடர்பாக 20.6.2023 ஆம் தேதியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுவரை 14,540 புகார்கள் வரை பெறப்பட்டுள்ளன. இந்த புகார்தாரர்களிடம் ரூபாய்.188.29 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ள சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றை பறிமுதல் செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில சொத்துக்களைப் பொறுத்தவரை மனுதாரர்கள் முதலீடு செய்வதற்கு முன்பே தனிநபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அவற்றை பறிமுதல் செய்ய முடியாது’’ எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, ‘‘பொருளாதார முதலீட்டுக் குற்றங்களுக்கான சட்டத்தில், மோசடி நிதி நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், சொத்துக்களை அடையாளம் காணும் பணியில் வருவாய் அலுவலர்கள் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் பணி முடிவடையும் எனவும் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவலதுறை தரப்பு கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெறும் வகையில் மோசடி நிதி நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை விரைவில் முடிக்க வேண்டும். சொத்துக்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வந்தால் அதை விரைவில் முடிக்க வேண்டும். இப்பணிக்கான மதிப்பீட்டு குழு மற்றும் துணைக்குழுவுக்கு விசாரணை அமைப்பு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் குழு நிறுவனங்கள் தொடர்பான விஷயத்தில், அமலாக்கத்துறை இயக்குநரகம் (ED) சென்னை மண்டல அலுவலகம், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், 121.80 கோடி மதிப்புள்ள, 121.80 கோடி ரூபாய் மதிப்புடையது ,பண மோசடி தடுப்புச் சட்டம் (PMLA) நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் குழு நிறுவனங்கள் தொடர்பான வழக்கில், பணமோசடி சட்டம் (PMLA), 2002, ஆம் ஆண்டு, படி பண சூதாட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் ஈடுபட்டு பல்வேறு இடங்களில் நியோமேக்ஸ் சேர்த்து தற்காலிகமாக ED யால் இணைக்கப்பட்ட அசையும் மற்றும் அசையாத சொத்துக்கள். குறித்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இது சாத்தியமா என்பதே எழுவினா? இந்த நிலையில் நியோமேக்ஸ் சொத்துக்களின் சொத்துக்களை  ரூபாய் 121.80 கோடியில் ED பணமோசடி வழக்கில் இணைக்கிறது அதை மீறி வருவாய் துறை மற்றும் மாநில பொருளாதார குற்ப்பிரிவு இதில் நீதிமன்றம் உத்தரவிட்டாலும் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பது சாமானியன் அறியாத நிலை இந்த வழக்கில் செபி மற்றும் அமலாக்கத்துறை எதிர் தரப்பு என்பதை மறைத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உத்தரவுகள் பெறப்படுவது முதலீட்டாளர்களுக்கு எந்த பலனும் தரப்போவதில்லை. PACL வழக்கில் நீதிபதி லோதா கமிட்டி போல ஒரு முடிவு இதில் எட்டப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை இதுவரை இல்லை என்பதே உண்மைநியோ மேக்ஸில் முதலீடு செய்தவர்கள் புகார் அளிக்க அக்டோபர்.8 ஆம் தேதி வரை இறுதி வாய்ப்பு: ஆனால் இதுவரை வந்த புகாரகள் 40 சதவீதமே இருந்த போதும் உயர் நீதிமன்றம் உத்தரவை வழங்கிய போதும் ED முடக்கிய சொத்து நிலை என்ன என்பதே முதலீட்டாளர்களும் பொருளாதாரக் குற்றப்பிரிவும் அறியவில்லை மேலும் லஞ்சம் மூலம் வந்த கருப்புப் பணங்களை முதலீடு செய்த அரசு ஊழியர்கள் 60 சதவீதம் பேர் புகாரே கொடுக்கவில்லை என்பதே உண்மை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...