முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகர் ரோயோ சங்கர் காலமானார்

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் இன்று ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி உயிரிழந்தார்.


அவருக்கு வயது, 46.  சிவகங்கை மாவட்டம் 
ஏரியூர் தான் "ரோபோ ஷங்கர்"  பூர்வீகம்  படப்பிடிப்பு தளத்தில் மயக்கமடைந்து உடல்நலக் குறைவால் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுமார் 8.30 மணியளவில் உயிரிழந்தார். எனக் கூறப்படுகிறது. நேற்று உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று மாலையே உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவால், உடனடியாக ஐசியூவுக்கு மாற்றப்பட்டார்.  அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனளிக்காததால், அவர் உயிரிழந்தார். அவரது மறைவு அவரது ரசிகர்கள், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையைச் சேர்ந்தவர்களை பாதித்ததுள்ளது.2011ஆம் ஆண்டில் ரௌத்திரம் படத்தில் நடித்தார். எடிட்டிங்கில் இவரது காட்சியை நீக்கி விட்டார்கள். அதன் பின்னர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.




அதன் பின்னர் இவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த படம் , வாயை மூடி பேசவும். அதேபோல் மாரி படமும் பெரிய அங்கீகாரத்தை சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தது. இவரது டைமிங் நகைச்சுவை இவருக்கு ஹாலிவுட் படமான தி லயன் கிங் படத்தின் இரண்டு பாகங்களிலும் தமிழில் டப்பிங் பேசுவதற்கான வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தது.




மிமிக்கிரி மீது இருந்த ஆர்வம் அவரை தொலைக்காட்சிக்கு கொண்டு வந்துவிட, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டது மட்டும் இல்லாமல், ஒரு நட்சத்திரப் போட்டியாளராகவும் மாறினார். அதன் பின்னர் அவர் அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு செக்மென்ட்டில் இவர் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கினார். அதன் தொலைக்காட்சி நடத்திய நடன நிகழ்ச்சியில் மனைவியுடன் கலந்து கொண்டார். சின்னத்திரையிலிருந்த அவருக்கு வெள்ளித்திரை வாய்ப்புகளும் வந்தது.ரோபோ சங்கர் 1978ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி பிறந்தவர் படிப்பின் மீது எந்த அளவுக்கு ஆர்வம் இருந்ததோ அதே அளவுக்கு மிமிக்கிரி மீதும் தனி ஆர்வம் ஏற்பட்டது. இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றார். இவர் கல்லூரி காலத்தில் இருந்தே கிராமங்கள், நகரங்களில் திருவிழாவின் போது நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதில் ரோபோவைப் போல தனது உடலில் மெட்டாலிக் நிற பெயிண்ட்டை பூசிக் கொண்டு, ரோபோவைப் போலவே, தனது உடலை அசைத்துக் காட்டியதால் அவருக்கு ரோபோ சங்கர் என்று பெயர் வந்தது.சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை அவர் மதுவுக்கு அடிமையாகி இருந்தார்.

குறிப்பாக மஞ்சள் காமாலை ஏற்படுவதற்கு முன்னர் வரை. அளவுக்கு அதிகமான மது பழக்கத்தின் காரணமாக அவருக்கு ஏற்பட்ட மஞ்சள் காமாலையால் பாதிப்புக்கு உள்ளானார். இப்படி இருக்கையில் பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலின் அறிவுரையின் படி, எடுத்துக்கொண்ட மருத்துவத்தால், மீண்டு வந்தார். அதனால் அவர் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் ஓய்வு எடுத்தார். ஒரு வீடியோவில் கூட யாரும் மது அருந்தாதீர்கள் என்றும் அதனால் தான் மிகவும் அவதிப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப் பட்ட பிதற்போது மருந்தை உடல் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், 24 மணி நேரமும் ரோபோ சங்கர் உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டது.மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் BA History படித்த காலத்தில் ரோபோ என்கிற அந்த பெயருக்கு பின்னால் வறுமையின் கொடூரம் மட்டுமே இவருக்கு உண்டு. உடுத்தும் உடை கூட நான்கு, ஐந்து தான் வைத்திருப்பார். கல்லூரியில் படிக்கும் போதே நடன நாட்டிய கலைக்குழுவிற்கு செல்வார். ரோபோ கெட்டப்பிற்கு சில்வர் கோட்டிங்கை தன் உடம்பில் பூசுவார், அதை உடம்பில் பூச குறைந்தபட்சம் 2மணி நேரத்திற்கு மேலாகும். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பச் செலவு, படிப்பு செலவை பார்த்து கொள்வார். நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர், அனைவரையும் சிரிக்க வைத்து கொண்டே இருப்பார். கல்லூரிக்கு பஸ்ஸில் செல்லும் போது மதுரை கிரைம் பிரான்ச், தெற்குவாசல் பகுதியை அலர விடுவார், ரோபோ சங்கர் இல்லாமல் கடைசி பஸ் கிளம்பாது, ஒரு பெரிய கேங் லீடர் போல இருந்தவர் என அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.

அசத்த போவது யாரு? நிகழ்ச்சியின் மூலமாக வெளி மக்களுக்கு தெரிந்தார். தனித் திறமை, விடாமுயற்சியால் திரைப்படத்துறையில் ஒரு நல்ல நிலைக்கு உயர்ந்தவரை காலம் மஞ்சள் காமாலை வடிவில் சீக்கிரமே அழைத்து சென்றது.காட்ஸ்ஜில்லா (GodsJilla) என்ற படத்தின் பூஜையில் ரோபோ சங்கர் கலந்து கொண்டார். அது மட்டும் இல்லாமல் துரைப்பாக்கம் அருகே நடைபெற்ற அந்தப் படத்தின் படப்பிடிப்பில் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு நடித்து வந்தார்.அப்போது ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்த ரோபோ சங்கரை படக் குழுவினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அதற்குப் பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...