முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறுநீரக மோசடியில் உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல்

சிறுநீரக மோசடியை விசாரிக்க ஐ.ஜி. தலைமையில் 4 ஐ.பி.எஸ். உயர் அலுவலர்கள் அடங்கிய குழுவை நியமித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு தாக்கல்


செய்துள்ளது.  திமுகவின் கிட்னி திருட்டு ( முறைகேடு) குற்றவாளிகளை காப்பாற்றும் மேல்முறையீடு: ஒரு அரசியல் மோசடியின் உச்சம்..இதை விவாதிக்காத தொலைக்காட்சி ஊடகங்கள் !


தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், குற்றம், ஊழல், மற்றும் ஆட்சியாளர்களின் நிர்வாகச் சீர்கேடு பாதுகாப்பு என்பன ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து, சமூகத்தின் அடிப்படை மதிப்புகளைச் சீரழிக்கும் சக்தியாக மாற்றப்படுவது புதிதல்ல. ஆனால், 2025-ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம், தமிழ்நாடு அரசின் ஒரு செயல், அத்தகைய மோசடியின் உச்சத்தை எட்டியுள்ளது. நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் நடந்த கிட்னி திருட்டாகிய முறைகேடு  மோசடி வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட்டதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இது வெறும் சட்டரீதியான நடவடிக்கை மட்டுமல்ல; இது திமுகவின் கட்சி சார்ந்த குற்றவாளிகளை குறிப்பாக, கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான கதிரவன் போன்றவர்களைக் காப்பாற்றும் ஒரு தீமானமான முயற்சி. இந்த மேல்முறையீட்டின் பின்னணியில், பாமர ஏழைத் தொழிலாளர்களின் வாழ்க்கையை அழித்த கோரமான குற்றங்கள், அரசியல் பாதுகாப்பு, மற்றும் நீதியின் மீதான துரோகம் ஆகியவைகள் மறைந்துள்ளன. திமுக ஆட்சியின் அழுத்தத்தால், பல தொலைக்காட்சி ஊடகங்கள் இந்த விஷயத்தை 'சட்ட விவகாரம்' என்று மட்டும் சுருக்கி, ஆழமான விமர்சனத்தைத் தவிர்க்கின்றன. 

முதலில், இந்த வழக்கின் பின்னணியைப் புரிந்துகொண்டு மக்கள் அறிய வைப்பது ஒவ்வொரு பத்திரிகையாளர்களின் கடமை. 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரபாளையம் போன்ற இடங்களில் ஏழை விசைத்தறி தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில், ஒரு கோரமான கிட்னி திருட்டு ரேக்கெட் வெளியே வந்தது. ஏழை பெண்கள், ஆசை வார்த்தைகளால் ஏமாத்த நிலையில், தங்கள் சிறுநீரகங்களை இலவசமாக 'தானம்' செய்வதாகக் கூறி, 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றப்பட்டனர். இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள்: தனியார் மருத்துவமனைகள், மத்தியஸ்தர்கள், மற்றும் மருத்துவமனை ஊழியர்கள். குறிப்பாக, பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இது திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்குச் சொந்தமானது  இந்தக் குற்றங்களின் மையமாக இருந்தது. திருச்சிராப்பள்ளி சித்தார் மருத்துவமனை உள்ளிட்ட பிற நிறுவனங்களும் இதில் ஈடுபட்டிருந்தன. இந்த மருத்துவமனைகள், பஞ்சை பராரிகளான கூலி ஏழைத் தொழிலாளர்களைக் குறிவைத்து, போலி ஆவணங்களை உருவாக்கி, அவர்களின் உடல்நலத்தை அழித்தன. விசாரணையில், பள்ளிப்பாளையத்தில் மட்டும் 6 பெண்கள் கிட்னித் திருட்டுக்கு ஆளானதாகத் தெரியவந்தது. இது வெறும் தனிப்பட்ட குற்றமல்ல; இது ஒழுங்கமற்ற உடல் உறுப்பு விற்பனைத் தொழிலின் ஒரு பகுதி, இது தமிழ்நாட்டின் ஏழை மக்களை மிருகத்தனமாக சுரண்டுகிறது. இந்தியாவில் உடல் உறுப்பு தானம் தமிழ்நாட்டில் அதிகம் நடைபெறும் என்றாலும், இது சட்டவிரோதமான திருட்டாக மாற்றப்படுவது, அரசின் கண்காணிப்பின்மையின் சான்று.


இந்தக் குற்றத்தின் தீவிரத்தை உணர்ந்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தை அணுகினர். சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25, ஆம் தேதியன்று, மதுரை தென்மண்டலக் காவல்துறை தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில், 4 ஐ.பி.எஸ். உயர் அலுவலர்கள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட்டது. நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் அருள் முருகன், அடங்கிய அமர்வு அரசின் முதல் தகவல் அறிக்கையை 'திருப்தி அளிக்காதது' என்று கண்டித்து, "மக்களின் வாழ்க்கை தொடர்பான விவகாரத்தில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை" என ஆதங்கம் தெரிவித்தனர். இந்த உத்தரவு, நீதியின் வெற்றியாகவே பார்க்கப்பட்டது . ஏனென்றால், உள்ளூர் காவல்துறை விசாரணை போதுமானதல்ல; அரசியல் செல்வாக்கு கொண்டவர்கள் ஈடுபட்டிருக்கும் போது, சுயாதீனமான சிறப்புக் குழு மட்டுமே உண்மையை வெளிப்படுத்தும். ஆனால், தமிழ்நாடு  முதல்வர்  தலைமையிலான திமுக அரசு இந்த உத்தரவை ஏற்கவில்லை. செப்டம்பர் 20, 2025 ஆம் தேதியன்று,  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இது வெறும் 'சட்ட ரீதியான' செயல் என்று சொல்ல முடியாது; இது குற்றவாளிகளைக் காப்பாற்றும் திட்டமிடப்பட்ட முயற்சி.

இந்த மேல்முறையீட்டின் காரணம் முதன்மையாக, திமுக சார்ந்த குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அரசியல் தேவை. கதிரவன் மணச்சநல்லூர் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் இந்த மோசடியின் மையத்தில் இருக்கிறார். அவரது மருத்துவமனையில் நடந்த கிட்னி திருட்டு, காவல்துறையின் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஏனென்றால், அவர் திமுகவின பிரமுகர். ஊழல் குற்றவாளிகளை பாதுகாக்கும் 'நிலை மாற வேண்டும் என்பதே பல தலைவர்கள் கூறும் கருத்து அரசு, சிறப்புகா குழு அமைப்பதை 'அரசின் அதிகாரத்திற்கு' எதிரானது என்று அரசே வாதிடுவது  வினோதமானது.  ஆனால், உண்மை என்ன?  உள்ளூர் காவல்துறை, திமுகவின் செல்வாக்கால் 'மென்மையாக' விசாரித்தால், சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் போன்றவர்கள் தப்பிவிடலாம். ஆனால், சுயாதீன குழு அமைந்தால், அரசியல் இணைப்புகள் வெளியே வரும் அது திமுகவின் பிம்பத்தை அழிக்கும் என்ற அச்சம் ஆளும் ஆட்சியினர் தரப்பிற்கு ஏற்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டின் விளைவுகள் பெரும் சமூகப் பேரழிவை ஏற்படுத்தும். முதலில், ஏழை மக்களின் நம்பிக்கை உடைந்துவிடும். விசைத்தறி தொழிலாளர்கள், ஏற்கனவே வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களை ஏமாற்றி உடல்நலத்தை அழிக்கும் உறுப்பு திருட்டுக்  குற்றங்கள், அரசின் பாதுகாப்பால் தொடரும். அவலம் 2025 ஜூலையில், ஒரு இதழ் செய்தியில், மாநில அமைச்சர் எம்.ஏ. சுப்ரமணியன் "குற்றவாளிகள் தப்பவே முடியாது" என்று கூறினார். ஆனால், இன்று அரசு அவர்களையே காப்பாற்றுகிறது! 


 இரண்டாவதாக, மருத்துவத் துறையின் நம்பகத்தன்மை சிதைந்துவிடும். தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் முன்னணியில் இருந்தாலும், இத்தகைய மோசடிகள் அதை சந்தேகத்திற்குரியதாக்கும். மூன்றாவதாக, அரசியல் ரீதியாக, திமுகவின் 'மக்கள் நல' உருவம் உடைந்துவிடும். அதிமுக, பாஜக போன்ற எதிர்க்கட்சிகள், இதை 'கிட்னி திருட்டு திமுக' என்று விமர்சிக்கின்றன. செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று, திருச்சிராப்பள்ளியில் அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. பாஜக தலைவர் வேலூர் சையது இப்ராஹிம் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கிட்னி தானம் குறித்து விசாரிக்கச் சென்றபோது கைது செய்யப்பட்டது, அரசின் அச்சத்தைத் தான் வெளிப்படுத்துகிறது என்பதே பல தலைவர்கள் கருத்து.

இந்த விவகாரம் ஊடகங்களில் விவாதிக்கப்படுமா? சந்தேகமே. சில செய்தித் தொலைக்காட்சிகள் சிறு செய்தியாகத் தரலாம். ஆனால், ஆழமான விவாதம் செய்ய முன்வர மாட்டார்கள்.  இதை ஆட்சியின் அழுத்தமாகவும் ஊடகங்களை 'நடுநிலை' என்ற பெயரில் மௌனப்படுத்தியுள்ளது. இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். ஊடகங்கள் ஜனநாயக முறையில் விவாதிக்காவிட்டால், மக்கள் குரல் அழிந்துவிடும்.

இந்த மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்பதே பலரது கருத்து. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...