முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆடுதுறை குண்டு வீச்சு சம்பவத்தில் பிண்ணனி யார் பின் விசாரணை தீவிரம்

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு,


பேரூராட்சி தலைவரான பாம.க.வின் , மாவட்டச் செயலாளர்  ஸ்டாலினைக் கொல்ல முயற்சி எனக் கூறப்படுகிறது. மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருவதாகத் தகவல். தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் நான்கு பேர் கொண்ட மர்மநபர்கள் பெட்ரோல்

குண்டு வீசி தாக்குதல் நடத்திய போது ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில், பேரூராட்சி மன்றத் தலைவரும் பா.ம.க.,வடக்குப் பகுதி மாவட்டச் செயலாளருமான ம.க.ஸ்டாலின் மற்றும் இளையராஜா, அருண் என்பவரும் இருந்துள்ளனர் அதில் இளையராஜா, அருண் இருவரும் காயமடைந்தனர். விசாரணையில் மர்மநபர்கள் பாமக மாவட்டச் செயலாளர் ஸ்டாலினைக் கொல்ல முயற்சி செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் காவல்துறை தேடி வருகின்றனர். கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியுள்ளார்.



ம.க. ஸ்டாலின் அவரது தம்பி, வழக்கறிஞர் ராஜா, சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். அதற்குப் பதிலாக, கொலை சம்பவம் நடந்திருப்பதாகவும் பேசப்படுகின்றது. ம.க. ஸ்டாலின் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் இப்போதும்  நிலுவையில் உள்ளன. பேரூராட்சித் தலைவர் பதவியிலுள்ள ம.க. ஸ்டாலின் ஆடுதுறையில் பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியுள்ளார் எனலாம்.  வழக்கம்போல் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றவர் அங்கு இருந்த நிலையில் உடன் இளையராஜா, அருண் ஆகியோர் இருந்துள்ளனர்.

 பேரூராட்சி அலுவலகத்திற்குச் சென்ற மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி ம.க. ஸ்டாலினை கொலை செய்ய முயன்ற நிலையில் சுதாரித்த ம.க.ஸ்டாலின் அங்கிருந்து தப்பியதாகவும் 




மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதால் இளையராஜா, அருண் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ம.க.ஸ்டாலினை மர்ம நபர்கள் கொலை செய்ய முயன்று தப்பி சென்ற சம்பவம் அவரது ஆதரவாளர்களை மட்டுமே அதிர்ச்சியடைய செய்துள்ளது.தனக்கு பாதுகாப்பு கேட்டு ம.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆகவே எதற்கு அவர் பாதுகாப்பு கேட்டார் என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது 

இக் கொலை முயற்சியில் ஈடுப்பட்ட மர்ம நபர்கள் யார், எதற்காக இதை செய்தார்கள் அரசியல் காரணங்களுக்காகவா அல்லது தனிப்பட்ட விரோதம் காரணமாகவா என்பது குறித்து திருவிடைமருதூர்  காவல்நிலையத்தில் விசாரணை நடத்துகின்றனர். இதனால் ஆடுதுறை பகுதி பரப்புடன் காணப்படுகிறது. ஆரம்ப கால பாமகவின் தலைமை நிலையச் செயளாலர் கோதை கேசவன் இருந்தார் அதன் பின்னர் பலரும் பதவியை பிடிக்க போட்டி அரசியல் நடத்தும் நிலைதான் அங்கு காணமுடியும். மருத்துவர் ராமதாஸ் மற்றும் கோ.க.மணி  ஆதரவாளராக அறியப்படும் நபர் ஸ்டாலின் என்பது ஒரு புறம் மற்றும்குண்டு வீச்சு காரணமாக டயர்களை கொளுத்தி அவரது ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டனர் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் சணல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்த தகவல் அறிந்த மருத்துவர் ச.

ராமதாஸ் தரப்பு ஆதரவாளர்கள் ஆடுதுறையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ம.க. ஸ்டாலின் மீது குண்டு வீசி கொல்ல முயன்ற கும்பலையும், அதை ஏவி விட்டவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். ம.க. ஸ்டாலினுக்கும் அவரது வீடு அலுவலகங்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் - என

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கைநடந்த 

சம்பவத்துக்குப் பின்னணி, அரசியலா அல்லது வேறு வகையிலான விரோதமா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்.

சட்டம் நம்மை என்ன செய்து விட முடியும் என்ற மமதை  மனநிலையின் அப்பட்டமான வெளிப்பாடு தான் இது.

ஏனெனில் நடந்திருப்பது ஏதோ 'உணர்ச்சிவசப்பட்ட' திடீர் குற்றமல்ல.

ஆண்ட்ராய்டு போன், CCTV காலத்தில் தப்ப முடியாது எனத் தெரிந்திருந்தும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

சில நாள் தான் நீதிமன்றக் கட்டுக்காவல்., உடனே ஜாமீன் மூலம் விடுவிப்பு, வழக்கில் இறுதி வாய்தா வரும் போது பாத்துக்கொள்ளலாம் என்பதே. இதுதான் கூலிப்படை மற்றும் அதன் மாதிரியே செயல்படுபவர்களின் திமிர்த்தனம்.

தமிழ்நாட்டில் இப்போது அப்படி ஒரு மனநிலை தாராளமாகவே முரட்டுத்தனம் வளர்ந்து வருகிறது.

அதனால்தான் மீண்டும் மீண்டும் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாகும் சம்பவங்கள்.


உள்ளூர் நிலவரம் பற்றி உளவு பார்க்க வேண்டிய காவல் துறை பணியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. 

சரிப்படுத்த வேண்டிய திமுக அரசு பொறுப்பு டிஜிபி போட்டுள்ளார்கள்  என விமர்சனம் எழுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...