தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு,
பேரூராட்சி தலைவரான பாம.க.வின் , மாவட்டச் செயலாளர் ஸ்டாலினைக் கொல்ல முயற்சி எனக் கூறப்படுகிறது. மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருவதாகத் தகவல். தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் நான்கு பேர் கொண்ட மர்மநபர்கள் பெட்ரோல்
குண்டு வீசி தாக்குதல் நடத்திய போது ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில், பேரூராட்சி மன்றத் தலைவரும் பா.ம.க.,வடக்குப் பகுதி மாவட்டச் செயலாளருமான ம.க.ஸ்டாலின் மற்றும் இளையராஜா, அருண் என்பவரும் இருந்துள்ளனர் அதில் இளையராஜா, அருண் இருவரும் காயமடைந்தனர். விசாரணையில் மர்மநபர்கள் பாமக மாவட்டச் செயலாளர் ஸ்டாலினைக் கொல்ல முயற்சி செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் காவல்துறை தேடி வருகின்றனர். கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியுள்ளார்.
ம.க. ஸ்டாலின் அவரது தம்பி, வழக்கறிஞர் ராஜா, சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். அதற்குப் பதிலாக, கொலை சம்பவம் நடந்திருப்பதாகவும் பேசப்படுகின்றது. ம.க. ஸ்டாலின் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் இப்போதும் நிலுவையில் உள்ளன. பேரூராட்சித் தலைவர் பதவியிலுள்ள ம.க. ஸ்டாலின் ஆடுதுறையில் பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியுள்ளார் எனலாம். வழக்கம்போல் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றவர் அங்கு இருந்த நிலையில் உடன் இளையராஜா, அருண் ஆகியோர் இருந்துள்ளனர்.
பேரூராட்சி அலுவலகத்திற்குச் சென்ற மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி ம.க. ஸ்டாலினை கொலை செய்ய முயன்ற நிலையில் சுதாரித்த ம.க.ஸ்டாலின் அங்கிருந்து தப்பியதாகவும்
மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதால் இளையராஜா, அருண் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ம.க.ஸ்டாலினை மர்ம நபர்கள் கொலை செய்ய முயன்று தப்பி சென்ற சம்பவம் அவரது ஆதரவாளர்களை மட்டுமே அதிர்ச்சியடைய செய்துள்ளது.தனக்கு பாதுகாப்பு கேட்டு ம.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆகவே எதற்கு அவர் பாதுகாப்பு கேட்டார் என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது
இக் கொலை முயற்சியில் ஈடுப்பட்ட மர்ம நபர்கள் யார், எதற்காக இதை செய்தார்கள் அரசியல் காரணங்களுக்காகவா அல்லது தனிப்பட்ட விரோதம் காரணமாகவா என்பது குறித்து திருவிடைமருதூர் காவல்நிலையத்தில் விசாரணை நடத்துகின்றனர். இதனால் ஆடுதுறை பகுதி பரப்புடன் காணப்படுகிறது. ஆரம்ப கால பாமகவின் தலைமை நிலையச் செயளாலர் கோதை கேசவன் இருந்தார் அதன் பின்னர் பலரும் பதவியை பிடிக்க போட்டி அரசியல் நடத்தும் நிலைதான் அங்கு காணமுடியும். மருத்துவர் ராமதாஸ் மற்றும் கோ.க.மணி ஆதரவாளராக அறியப்படும் நபர் ஸ்டாலின் என்பது ஒரு புறம் மற்றும்குண்டு வீச்சு காரணமாக டயர்களை கொளுத்தி அவரது ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டனர் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் சணல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்த தகவல் அறிந்த மருத்துவர் ச.
ராமதாஸ் தரப்பு ஆதரவாளர்கள் ஆடுதுறையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ம.க. ஸ்டாலின் மீது குண்டு வீசி கொல்ல முயன்ற கும்பலையும், அதை ஏவி விட்டவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். ம.க. ஸ்டாலினுக்கும் அவரது வீடு அலுவலகங்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் - என
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கைநடந்த
சம்பவத்துக்குப் பின்னணி, அரசியலா அல்லது வேறு வகையிலான விரோதமா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்.
சட்டம் நம்மை என்ன செய்து விட முடியும் என்ற மமதை மனநிலையின் அப்பட்டமான வெளிப்பாடு தான் இது.
ஏனெனில் நடந்திருப்பது ஏதோ 'உணர்ச்சிவசப்பட்ட' திடீர் குற்றமல்ல.
ஆண்ட்ராய்டு போன், CCTV காலத்தில் தப்ப முடியாது எனத் தெரிந்திருந்தும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
சில நாள் தான் நீதிமன்றக் கட்டுக்காவல்., உடனே ஜாமீன் மூலம் விடுவிப்பு, வழக்கில் இறுதி வாய்தா வரும் போது பாத்துக்கொள்ளலாம் என்பதே. இதுதான் கூலிப்படை மற்றும் அதன் மாதிரியே செயல்படுபவர்களின் திமிர்த்தனம்.
தமிழ்நாட்டில் இப்போது அப்படி ஒரு மனநிலை தாராளமாகவே முரட்டுத்தனம் வளர்ந்து வருகிறது.
அதனால்தான் மீண்டும் மீண்டும் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாகும் சம்பவங்கள்.
உள்ளூர் நிலவரம் பற்றி உளவு பார்க்க வேண்டிய காவல் துறை பணியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை.
சரிப்படுத்த வேண்டிய திமுக அரசு பொறுப்பு டிஜிபி போட்டுள்ளார்கள் என விமர்சனம் எழுகிறது.









கருத்துகள்