வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து ஜெ.ஜெயலலிதாவின் இரண்டாம் தரப்பு வாரிசு ஜெ.தீபா தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி
முன்னால் முதல்வர் காலஞ்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதா உயிரோடிருந்த போது, அவர் ரூபாய்.36 கோடிக்கு வருமான வரி பாக்கி வைத்திருந்தார். அதை அவரது சட்டப்பூர்வ இரண்டாம் தரப்பு வாரிசு செலுத்தும் படி
வருமான வரித்துறை சார்பாக நோட்டீசை அனுப்பிய நிலையில் அதை எதிர்த்து சென்னை உயர்நீநிமன்றத்தில் ஜெ.தீபா வழக்குத் தொடர்ந்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வமான வாரிசுகளாக அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மற்றும் அண்ணன் மகன் ஜெ.தீபக் ஆகியோரை அறிவித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் ஜெ. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவர் ரூபாய்.36 கோடிக்கு வருமான வரிப் பாக்கியும் வைத்திருந்தார்.
அவர் இறந்த பின்னர், இந்த த்தொகையை செலுத்தும்படி அவரது சட்டப்படியான இரண்டாம் தரப்பு வாரிசுகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதில், ரூபாய்.36 கோடியை செலுத்தும்படி உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்த போது, ஜெ.ஜெயலலிதா பாக்கி வைத்துள்ள ரூபாய்.36 கோடியை
தற்போது, அந்த நோட்டீஸ் திரும்ப பெறப்பட்டு விட்டது. அந்த தொகையை ரூபாய்.13 கோடியாக குறைத்து, திருத்தி அமைக்கப்பட்ட நோட்டீசு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ''ரூ.36 கோடி செலுத்தும்படி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற்று விட்டதால், அதை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். ரூபாய்.13 கோடி கேட்டு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தீபா சட்டப்படியாக நிவாரணத்தை கோர உரிமை உள்ளது'' என்று உத்தரவிட்டார்.
கருத்துகள்