பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 க்கான
பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் பாஜக தேசிய துணைத் தலைவர் பைஜெயந்த் பாண்டா MP மற்றும் மத்திய விமான போக்குவரத்து மற்றும் கூட்டுறவுத் துறை இணை அமைச்சர் .முரளிதர் மொஹல் ஆகிய இருவரும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பொறுப்பாளர்களாக நியமித்து பாஜக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் பிரசாரம், கூட்டணிக் கட்சி விவகாரம், கட்சிக்கு பொறுப்பாளர்கள் நியமனம் என தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர அரசியல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.தமிழ்நாடு பாஜக. தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் தொகுதிப் பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பணிகளை இருவரும் மேற்கொள்வர் எனத் தெரிகிறது. விரைவில் இருவரும் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.தேர்தல் பொறுப்பாளராக பாஜகவின் தேசிய துணைத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பைஜெயந்த் பாண்டா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், தேர்தல் இணை பொறுப்பாளராக மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒடிசாவின் கேந்த்ரபரா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் வழங்கினர். இந்த முறை மக்களவை மூலம் நாடாளுமன்றத்துக்குச் சென்றார் பாண்டா. பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமீத்ஷா ஆகியோர் மதிப்பைப் பெற்றவர் பாண்டா 2021 ஆம் ஆண்டில் அஸாம் சட்டமன்றத் தேர்தல் முதல் 2025 ஆம் ஆண்டில் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தல் வரை பாண்டாவிடம் கொடுக்கப்பட்ட தேர்தல் பொறுப்புகள் எல்லாவற்றையுமே திறம்பட க்கையாண்டவர் அவர் என்பதையும், எங்கே எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும், சூழலுக்கேற்ப வியூகங்களை அமைத்து, காய்களை நகர்த்துவதில் வல்லவர் என்றும் பாண்டாவைப் பற்றி கூறுகிறார்கள். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தைக் கையாளும் பொறுப்பை பாண்டாவிடம் தான் பிநரேந்திர மோடியும் ஷாவும் ஒப்படைத்திருந்தார்கள் .தமிழ்நாடு பாஜகவுக்குள் நிலவும் குழப்பங்கள், பிரதான கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்குள் நிலவும் குழப்பங்கள், இரு கட்சிகளின் தோழமைக் கட்சிகளில் நிலவும் குழப்பங்கள்… இவற்றையெல்லாம் முடிவுக்குக் கொண்டுவரவும், திமுகவை ஆட்சியில் இருந்து வீழ்த்தவும் ஒரு பெரிய ஆளுமைத் திரன் கை தேவைப்படுகிறது; பாண்டாதான் அதற்கு பொருத்தமாக இருப்பார் என்று பிரதமர் நரேந்தரஃமோடியிடம் அமித் ஷா கூறியதாகவும், மோடியும் அதை ஆமோதித்ததாகவும் தெரிகிறது.திரைக்குப் பின்னால் செயல்படும் அமைதியான வியூகவாதி” என்று வெளியே பெயரெடுத்திருந்தாலும், மிகுந்த அதிரடியாகவும் ஆட்டத்தையே மாற்றியமைக்கும் வகையிலும் காய்களை நகர்த்தக் கூடியவர் பாண்டா. தமிழ்நாட்டு அரசியல் களத்தில், பாண்டாவின் காய் நகர்த்தல்கள் என்னவாக இருக்கும்; பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கணக்குகளாக எத்தகு விளைவுகளை இவை உண்டாக்கும் என்பதை வரவிருக்கும் காலம் உணர்த்தும்!



கருத்துகள்