சீருடையில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கைது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பக்கம் பூச்சிவாக்கம் கிராமத்தில் ஆகஸ்ட் மாதம் ஒரு இரவில் அடுமனைக் கடையில் புகுந்து சில மர்ம நபர்கள் முருகன் என்ற நபரைக் தாக்கினர் இது சம்பந்தமாக புகார் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட நிலையில் இது வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு மாற்றம் செய்தனர். அதே சமயம் இந்த வழக்கில் காவலர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாகப் பேசப்படுகிறது. இருப்பினும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலரின் பெயரைச் சேர்க்காமல் வழக்கு பதிவு செய்யாமல் காலம் கடத்தி நிலுவையில் வைத்ததாகவும். அது தொடர்பாகப் பாதிக்கப்பட்டவராகக் கருதும் புகார்தாரர் முருகன் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புகாரை. அளித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி செம்மல் அமர்வில் இன்று 8.செப்டமபர் 2025 ல் விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் சண்முகத்தை ஆஜர்படுத்த வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். அதே சமயம் காவல் கண்காணிப்பாளர் அலுவல் காரணமாக சென்னை சென்றதன் காரணமாக பதிலாகக் காஞ்சிபுரம் நகரத்தின் சட்டம் ஒழுங்கு துணை காவல் பணி கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் ஆஜரானார். இந்த வழக்கில் காவலரைச் சேர்க்காத காரணத்திற்காக துணைக் காவல்துறைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் மீது வழக்குப்பதிவு செய்து செப்டம்பர் 22 ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி செம்மல் உத்தரவிட்டார்.
காரணம் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நீதிமன்றத்திலேயே சீருடையுடன் கைது செய்யப்பட்ட நிலையில் காவலர்கள் உதவியுடன் நீதிமன்ற வாளாகத்திலிருந்த காரில். கைதான சங்கர் கணேஷ் தப்பியோடியதாக முதலில் கூறப்பட்டது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இதனால் நீதிமன்ற வளாகம் பரபரப்பானது. இந்த நிலையில் சிறிது நேரத்தில் காவல்துறை வாகனத்தில் காஞ்சிபுரம் கிளைச் சிறைக்கு வந்ததாகத் தகவல் வெளியாகியது.
காவல்துறையினர் அளித்த விளக்கத்தில் “கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் தப்பியோடவில்லை. கழிவறைக்குத் தான் சென்றிருந்தார்” எனத் தெரிவிக்கப்பட்டது. நம்முடைய வாசகர்கள் அறிய ஒரு சட்ட விளக்கம். காவல் நிலையத்தில் புகாரளித்தும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லையெனில் புதிய குற்றவியல் சட்டம் BNS மற்றும் BNSS அடிப்படையில் நடவடிக்கைகள்.
BNSS பிரிவு 173 (1)
பொதுமக்கள் யாரும் ஒரு தக்கதொரு புகாரை காவல் நிலையத்தில் அளித்தபின்னர், அது ஒரு "அறிக்கையான குற்றம்" (cognizable offence) எனப்பட்டால், காவல் பணி செய்யும் அலுவவர் FIR (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்ய வேண்டும்.
FIR பதிவு செய்ய மறுத்தால்
1. முதலில், அந்தப் பகுதியின் Station House Officer (SHO) அல்லது காவல் பணி ஆய்வாளரிடம் எழுத்துப்பூர்வமான புகார் அளிக்க வேண்டும். 2. அதுவும் பயனளிக்காவிட்டால், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அல்லது மாநகராக இருந்தால் ஆணையரான உயர் அலுவலரிடம் புகார் அளிக்கலாம். BNSS பிரிவு 173(3)ன்படி, அவரும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையாளர்.
மேலும் நடவடிக்கை எடுக்க: BNSS பிரிவு 175(3)
காவல் துறையினர் வழக்கை பதிவு செய்ய மறுத்தால், அதன் பின்னர்:
BNSS பிரிவு 175(3) (முந்தைய CrPC பிரிவு 156(3)க்கு பதிலாக) கீழ், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேரடியாக மனு தாக்கல் செய்யலாம்.
இந்த மனுவை குற்றம் நடந்த அல்லது குற்றச்சாட்டு சார்ந்த காவல் நிலைய எல்லையில் உள்ள முதன்மை நீதிமன்றம் (Magistrate having jurisdiction)-க்கு பிராது அளிக்கலாம்.
நீதிபதி, உங்கள் மனுவை பரிசீலித்து, அதில் சுயம்தானாக அதாவது சூ- மோட்டோவாக விசாரணைக்கு ஏற்புடையதெனத் தெரிந்தால், உடன் காவல் துறையே வழக்கைப்பதிவு செய்யும் படி உத்தரவிடலாம்.
அந்த உத்தரவை காவல்துறை பணியாளர்கள் மீற முடியாது; காவல் துறை FIR பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
அதற்கு மாற்று வழிகள்: BNSS பிரிவுகள் 2(1)(f), 2(1)(h), 210, 211, 213:
புகார் அளித்த நபர் FIR மூலம் வழக்கு தொடுப்பதை விட நேரடியாக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு மனுவாகவும் அளிக்கலாம்:
பழைய CrPC புதிய BNSS குறித்து விளக்கம்
Sec 2(4) Sec 2(1)(f) "Complaint" எனப்படும் குற்றச்சாட்டு மனுவை விளக்கும்.
Sec 2(7) Sec 2(1)(h) "Magistrate" எனப்படுபவர் யார் என்பதை விவரிக்கிறது.
Sec 190(1)(a) Sec 210(1)(a) நீதிபதி, ஒரு தனிநபரால் அளிக்கப்படும் புகாரின் அடிப்படையில் வழக்கை எடுத்துக் கொள்ளலாம்.
Sec 200 Sec 211 நீதிபதி, புகாராளரை எதிர்கொண்டு உறுதிப்படுத்தல் விசாரணை மேற்கொள்வது.
Sec 202 Sec 213 நீதிபதி மேலதிக விசாரணை செய்ய முடியும்.
முக்கியமாகபுகார்தாரர் ஒரு மாண்புமிக்க நீதிமன்றத்தில், BNSS பிரிவு 175(3) அல்லது 210, 211, 213 அடிப்படையில் மனு தாக்கல் செய்தால், நீதிபதி: உரிய காவல் துறைக்கு வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது.
அல்லது மனுதாரர் புகாரை விசாரிக்க நேரடியாக ஒப்புக்கொண்டு நடவடிக்கையும் எடுக்கலாம்.
இந்த வழியில் போகும்போது, பாதிக்கப்பட்ட மனுதாரர் மனுவில் கீழ்காணும் விபரங்கள் இருக்க வேண்டும்:
குற்றச்சாட்டு நிகழ்ந்த தேதி, நேரம், இடம் குற்றம் மேற்கொண்ட நபரின் விவரங்கள் (ஏதேனும் தெரிந்திருந்தால்) மனுதாரர் புகாரின் அடிப்படை ஆதாரங்கள் (சாட்சிகள், ஆவணங்கள்)
FIR பதிவு செய்ய மறுத்த காவல் நிலையம் குறித்த விவரங்கள்
உயர் அலுவலர்களிடம் நீங்கள் அளித்த மனுக்கள் (நகல் இணைக்கவும்) இப்போது நடவடிக்கைகள் பாயும். இதில் பொது நீதி யாதெனில் நீதிமன்றத்தால் கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகு தப்பித்தால், சிறைக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பில் உள்ள காவலர்கள் சஸ்பெண்ட் ஆவார்கள் என்பது அவருக்குத் தெரியாதா?வாலாஜாபாத் காவல் நிலைய எல்லையில் 25.07.2025 ஆம் தேதி ஒரு அடுமனையில் ஏற்பட்ட கைகலப்பு சம்பந்தமாக பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் கொடுத்த புகார் மீது 27 நாட்களாக புகார் பதிவு செய்யப்படாமல் வைத்திருக்கப்பட்டிருக்கிறது அதன் பிறகு நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 20.08.2025 ஆம் தேதி எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது அதன் பிறகு நீதிமன்றம் உத்தரவிட்டும் இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய விசாரணை அலுவலரான துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் எந்தவிதமான விசாரணையும் செய்யாமல் புகார் பொய்யா உண்மையா என விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் குற்றவாளிகளாக கூறப்படும் நபர்கள் கைது செய்யப்படாமல் இருந்திருக்கிறது இதற்குக் காரணம் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் காவல்துறையைச் சேர்ந்தவர் எனும் காரணம் சொல்லப்படுகிறது அது உறுதி செய்யப்படவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும் உரிய நடவடிக்கை எடுக்காமல் வழக்கின் நிலை பற்றிய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் இருந்ததால் நீதிமன்றம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷை கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள் தங்கள் கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்றால் அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை முடிவில் குற்றம் உறுதி ஆனால் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை சிறை தண்டனை விதிக்க தற்போது சட்டம் தெரிவிக்கிறது. இந்த உத்தரவின் அடிப்படையில் நீதிபதியின் காரில் சிறைக்கு அழைத்துச் சென்ற பொழுது சம்பந்தப்பட்ட அதிகாரி சிறைக்கு அருகில் வரும் பொழுது தப்பி ஓடி விட்டதாக சொல்லப்பட்டது இந்த சூழ்நிலையில் அவர் மறுபடியும் சிறைக்குத் திரும்பி சிறை வாசலில் காத்திருப்பதாக தற்பொழுது சொல்லப்படுகிறது.
துணைக் கண்காணிப்பாளர் தப்பி ஓடியது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக மாறும் என்பதால் மேல் அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் கூட அவர் திரும்பி வந்திருக்கலாம் ஆனால் காவல்துறை தரப்பில் அவர் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் நீதிமன்ற உத்தரவுக்காக காத்துக் கொண்டிருந்தார் என்று சொல்கிறார்கள்
என்னமோ அதற்குள் எங்கிருந்து உத்தரவாக வந்ததோ. தெரியவில்லை. மக்கள் மட்டுமே வேகமாக இல்லாவிட்டால் இங்கு பலருக்கும் உண்மை தெரியாமல் காதுகுத்து நடக்கும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற துணைக் கண்காணிப்பாளர் அறிவார். இனி மேல் விசாரணைக்கு வழக்கு வரும் போது மனு அளித்தவர் தந்த பிராதின் உண்மை நிலை தெரியும். நாமறிந்த வரை நீதிபதி செம்மல் நேர்மையாளர் சட்ட வழி நடக்கும் நீதிமான்.










கருத்துகள்