முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமர் உரைகள் அடங்கிய தொகுதிகளை குடியரசு துணைத்தலைவர் வெளியிட்டார்

அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை மற்றும் அனைவரின் முயற்சி என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் உரைகள் அடங்கிய தொகுதிகளை குடியரசு துணைத்தலைவர் வெளியிட்டார்

‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை மற்றும் அனைவரின் முயற்சி’ என்ற தலைப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகள் அடங்கிய இரண்டு தொகுதிகளை குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டார். பிரதமரின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் 4 மற்றும் 5-ம் ஆண்டுகளில் அவர் ஆற்றிய உரைகள் இந்தத் தொகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், புனித பண்டிகையான நவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, தாம் பதவியேற்ற பின் கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இது என்று குறிப்பிட்டார்.

நாட்டிற்கு பிரதமர் அளித்த பங்களிப்புகள், தொலைநோக்குப் பார்வை மற்றும் கனவுகளைப் பற்றி புரிந்து கொள்ள இந்த இரண்டு தொகுதிகள் அடங்கிய புத்தகங்கள் பேருதவியாக இருக்கும் என்றார் அவர். பிரதமர் திரு மோடி, "உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும்  உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு ஒரு வாழும் ஊக்கசக்தியாக விளங்குகிறார்.  மக்கள் தங்கள் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த தனது சொந்த வழிகாட்டுதல்கள் மூலம் ஊக்குவிக்கிறார். சாமானிய மக்களின் பிரதிநிதி என்ற நிலையில் இருந்து உண்மையான மக்கள் தலைவராக வளர்ந்துள்ள அவர், சாத்தியமற்றதை எவ்வாறு சாத்தியமாக்க முடியும் என்பதை உறுதியுடன் எடுத்துரைத்துள்ளார்" என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார்.

11 கருப்பொருட்கள் சார்ந்த பிரிவுகளை உள்ளடக்கிய இரண்டு தொகுதிகளில், 2022-23ம் ஆண்டிற்கான தொகுதியில் 76 உரைகளும், 12 மனதின் குரல் நிகழ்ச்சி உரைகளும், 2023-24ம் ஆண்டிற்கான தொகுதியில் 82 குறைகளும் 9 மனதின் குரல் உரைகளும் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டிய குடியரசு துணைத்தலைவர், இவை அனைத்தும் பிரதமரின் தெளிவான சிந்தனை, தொலைநோக்குப் பார்வை மற்றும் உள்ளடக்கிய நிர்வாகத்தில் அவரது உறுதிப்பாடு ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன, என்றார். உரைகளை மிகுந்த சிரத்தையுடன் தேர்வு செய்து அவற்றை வடிவமைப்பதற்காக தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டு பிரிவை குடியரசு துணைத்தலைவர் பாராட்டினர்.

‘எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்!’ என்ற சுவாமி விவேகானந்தரின் பொன்மொழியைக் குறிப்பிட்டு, பிரதமரின் ஒவ்வொரு உரையும் விடாமுயற்சி, உறுதிப்பாடு மற்றும் மக்கள் நலன் சார்ந்த செய்தியையே தாங்கி இருக்கிறது என்று தெரிவித்தார். அரசின் திட்டங்கள் சமூகத்தின் கடைகோடி நபரையும் சென்றடைவதை உறுதி செய்யும் பிரதமர் திரு மோடியின் தொலைநோக்குப் பார்வையை அவரது உரைகள் பிரதிபலிப்பதாக குடியரசு துணைத்தலைவர் கூறினார்.

ஒரே பாரதம் உன்னத பாரதம், காசி தமிழ் சங்கமம், பழங்குடியின கவுரவ தினம், ராஜ பாதைக்கு கடமை பாதை என்று பெயர் மாற்றியது உள்ளிட்ட முன்முயற்சிகளின் வாயிலாக இந்தியாவின் கலாச்சார அடையாளத்தை மீட்டெடுப்பதில் பிரதமரின் பங்கை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதை பற்றி பேசுகையில், ஸ்டார்ட் அப் இந்தியா, ஃபிட் இந்தியா, கேலோ இந்தியா, திறன் இந்தியா மற்றும் வேலை வாய்ப்பு திருவிழாக்கள் முதலிய முன்முயற்சிகளை பாராட்டி 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதற்கு இவை அடிப்படைத் தூண்களாக விளங்கும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மாநிலங்களவை துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷ், குடியரசு துணைத் தலைவரின் செயலாளர் திரு அமித் கரே, தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...