அயல் நாடடுக் கார் விற்பனை மோசடியில் கோயமுத்தூரைச் சேர்ந்த ஒரு கும்பல் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.
கார் விவகாரம் நடந்த உண்மை நிலை என்ன? வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு நேரடியாக இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்களுக்கு, காரின் விலையில், 100 முதல் 200 சதவீதம் வரை வரி விதிக்கப் படுகிறது. இந்த நிலையில் அண்டை நாடான பூட்டானில் ராணுவ கேபடன் மற்றும் மேஜர் மற்றும் கார்னல் பயன்படுத்திய, 'லேண்ட் க்ரூஸர், லேண்ட் ரோவர்' உள்ளிட்ட சொகுசுக் கார்களை, கேராளா மாநிலம் கொச்சினைச் சேர்ந்த ஒரு கும்பல் ஏலத்திற்கு எடுத்துள்ளது. அதை சட்டவிரோதமாக சுங்க வரி செலுத்தாமல் எல்லை தாண்டிக் கடத்தி வந்து, ஹிமாச்சலப் பிரதேசத்தில் பதிவு செய்து நாடு முழுதும் விற்பனை செய்துள்ளது குறித்து தகவலறிந்த வருவாய் புலனாய்வுத் துறை மற்றும் கலால் மற்றும் சுங்கத் துறை அலுவர்கள், 'ஆப்பரேஷன் நும்கோர்' என்ற பெயரில் நாடு முழுதும் நேற்று முன்தினம் அதிரடி சோதனையில் ஈடுபட்டதில், கேரளாவின் பிரபல திரைப்பட நடிகர்கள் பிருத்விராஜ், மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் ஆகியோரின் இடங்களிலும் சோதனை நடந்தன.
துல்கர் சல்மானிடம் இது போன்ற இரண்டு சட்டவிரோதமான சொகுசு கார்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து கொச்சின் கலால் மற்றும் சுங்க இலாக்கா இயக்குநரகத்தின் கமிஷனர் திஜு நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் : -பூட்டானில் இருந்து நம் நாட்டு எல்லை வழியாக அதிக விலை உடைய பயன்படுத்தப்பட்ட கார்கள் கடத்தப்பட்டுள்ளதாக உளவுத்தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சோதனைகள் நடத்தப்பட்டன. சுற்றுலா அனுமதி மற்றும் காரை பிரித்து கன்டெய்னர்களில் அடைத்து, எல்லை தாண்டி இங்கு கொண்டு வந்துள்ளனர். இதில் கொச்சியைச் சேர்ந்த ஒரு கும்பல் செயல்பட்டுள்ளது. நம் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின், இந்த வாகனங்கள் ராணுவம் மற்றும் அமெரிக்கத் துாதரகத்திற்கு சொந்தமானவை போல் காட்ட போலி ஆவணங்களைத் தயாரித்துள்ளனர். அதன் பின் ஹிமாச்சலப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டன. வாகனங்களின் தகவல்களை வழங்கும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின், 'பரிவாஹன்' தளத்திலும், வாகனத்தின் உரிமையாளர் விபரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அங்கு உள்ள ஊழியர்களைப் பயன்படுத்தியோ அல்லது 'ஹேக்கிங்' எனப்படும் கணினியை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் எடுத்தோ இதை செய்திருக்க வாய்ப்புள்ளது. இந்த விபரங்களை நம்பி நடிகர்கள் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் இந்த சட்டவிரோத சொகுசுக் கார்களை வாங்கி உள்ளனர். தெரியாமல் வாங்கி இருந்தாலும் இந்த கார்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும். நேற்று முன்தினம் நடந்த சோதனையில் 36 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் இரண்டு கார்கள் நடிகர் துல்கர் சல்மானுக்கு சொந்தமானவை. நடிகர் பிருத்விராஜின் கார்கள் எதுவும் சோதனையில் சிக்கவில்லை. கேரளாவில் மட்டும் இது போன்று கடத்தி வரப்பட்ட 200 கார்கள் பயன்பாட்டில் உள்ளன". எனக் கூறினார். இந்த சோதனையில், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கார்களில் போதைப் பொருள் மற்றும் தங்கம் கடத்தல் நடவடிக்கையிலும் குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. சொகுசு கார் விவகாரத்தில் புழங்கும் பணம், பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளிக்க வழங்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் கலால் மற்றும் சுங்க அலுவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நடிகர் துல்கர் சல்மான் என்பவர் நடிகர் மம்முட்டி என்ற முகமது குட்டி மகனாவார் இதுகுறித்து சுங்கத் துறை அலுவலர்கள் தீவிர புலன் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அதன் முதற்கட்ட விசாரணையில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர், நிசான் பேட்ரோல் (patrol) வகை சொகுசு கார்களை மலையாள நடிகர்களான துல்கரும், பிருத்வியும் வேறு நபர்களடம் வாங்கியதாக தகவல்கள் கசிந்தன. உடனே கேரளாவிற்கு விரைந்த சுங்கத்துறையினர் திருவனந்தபுரத்தில் உள்ள நடிகர் பிருத்விராஜ் வீட்டில் சோதனை நடத்தினர். மேலும் தேவாரத்தில் உள்ள அவருக்கு சொந்தமான வீட்டிலும் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு எந்த வெளிநாட்டுக் கார்களும் சிக்கவில்லை. மற்றொரு குழுவினர் கேரளாவின் பனம்பிள்ளி நகரில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில்
சோதனை நடத்தினர். அதில் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஃபெண்டர் வகை கார் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் சிக்கின. மேலும், சுங்க அலுவர்களின் விசாரணையில் கேரளா முழுவதும் 150 முதல் 200 வாகனங்கள் வரை இதுபோன்ற வாகனங்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கேரளா முழுவதும் அலுவலர்கள் நடத்திய சோதனையில் முதல் நாளில் மட்டும் 36 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்களையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து கேரளாவின் திருவனந்தபுரம், கோழிக்கோடு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் சோதனை நீடித்து வரும் நிலையில், மலையாள நடிகர்களுக்கு கார் விற்பனை சப்ளை செய்த கும்பலுக்கும் அலுவலர்கள் செக் வைத்துள்ளனர். வரி ஏய்ப்பு மூலம் அரசாங்கத்தை ஏமாற்றி எவ்வளவு கோடி ரூபாய் கைமாற்றியது? வேறு யாரெல்லாம் பூடான் கார்களை வாங்கி உள்ளனர்? தமிழ்நாட்டிலும் யாராவது சிக்குவார்களா? என அடுத்தடுத்து பரபரப்பைக் கிளப்பி உள்ளது. சுங்க அலுவலர்களின் விசாரணையின் முடிவிலேயே, அது தொடர்பான மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், இந்த மோசடியில் கோவையைச் சேர்ந்த கும்பல் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுங்கத் துறை அலுவலர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் துல்கர் சல்மான் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

















கருத்துகள்