வைசாக்கில் $15 பில்லியன் முதலீட்டில் கூகுளின் பிரம்மாண்டமான டேட்டா ஏ.ஐ. மையம்.
உலகளாவிய தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு இடையே AI சேவைக்கான தேவை அதிகரிக்கிறது. அதற்காக, புதிய டேட்டா சென்டர் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் பிக் டெக் நிறுவனங்கள் அதிக அளவில் செலவு செய்கின்றன.அறிவியல் தொழில்நுட்ப உலகில் இந்தியா ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிறது. உலகின் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான ஆல்பபெட் இன்க். நிறுவனத்தின் கூகிள் (Google), இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டிணத்தில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய முதலீட்டை அறிவித்துள்ள நிலையில் அது இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை மாற்றியமைக்கப் போகும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது மற்றும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.!
கூகிள் நிறுவனம், தென்னிந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் தனது பிரம்மாண்டமான தரவு மையத்தையும் (Data Centre), ஏ ஐ மையம் Artificial Intelligence Hub) அமைக்க $15 பில்லியன் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ₹1,20,000 கோடியை முதலீடு செய்கிறது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் உயர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது கூகிள் இந்தியாவில் மேற்கொள்ளும் மிகப்பெரிய முதலீடாகப் பதிவாகிறது.
அநன் முக்கிய அம்சங்கள் வறுமாறு :
இடம்: ஆந்திரப் பிரதேசத்தின் துறைமுக நகரமான விசாகப்பட்டினம் (Visakhapatnam).
வடிவம்: 1-ஜிகாவாட் (1-gigawatt) திறன் கொண்ட மிகப்பெரிய டேட்டா சென்டர் வளாகம்.
தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு: இந்த வளாகம் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு (AI Infrastructure), பெரிய அளவிலான ஆற்றல் ஆதாரங்கள் (Large-scale) மற்றும்மேம்படுத்தப்பட்ட ஃபைபர்-ஆப்டிக் நெட்ஒர்க் (Expanded fibre-optic network) ஆகியவற்றை ஒருங்கிணைக்கும்.இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டது உலகளாவிய தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு மத்தியில் ஏஐ சேவைக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆகவே புதிய டேட்டா சென்டர் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் மிகப்பெரிய டெக் நிறுவனங்கள் அதிக அளவில் செலவு செய்தும் வருகின்றன. இந்த நிலையில் கூகிளின் இந்த முதலீடு வந்துள்ள நிலையில் நாட்டின் ஏகோபித்த கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவிக்கையில், "தரவு என்பது புதிய எரிபொருள்' என்று அழைக்கப்படும் இந்தக் காலகட்டத்தில், இதுபோன்ற முன்முயற்சிகள் மாநிலத்துக்கு ஒரு மூலோபாய நன்மையாக (Strategic Advantage) அமையும்" எனக் கூறினார். இந்த மாபெரும் முதலீட்டின் மூலம், ஆந்திரப் பிரதேசம் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவும் ஏஐ மற்றும் டிஜிட்டல் துறைகளில் புதிய சிகரத்தை எட்டுமென்று நம்பப்படுகிறது. இது இந்திய இளைஞர்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்புகளையும், தொழில்நுட்ப வளர்ச்சியையும் உறுதி செய்யும் ஒரு திருப்புமுனையாகவே அமையக்கூடும்.
விசாகப்பட்டினத்தில் அமையவுள்ள கூகுளின் A1-ஜிகாவாட் ஹைப்பர்ஸ்கேல் தரவு மையம், ஆந்திரப் பிரதேசத்திற்கு ரூபாய். 10,000 கோடி வருவாயை ஈட்டும் -என மத்திய இணையமைச்சர் சந்திர சேகர் பெம்மாசானி தகவல்.















கருத்துகள்