முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை உயர் நீதி​மன்ற வளாகத்​தில் 11 மாடிகள் கொண்ட புதிய அலுவலகக் கட்டிடம் திறப்பு விழா

சென்னை உயர் நீதி​மன்ற வளாகத்​தில் நிர்வாக பிரிவு அலுவலகத்திற்கென 11 மாடிகளுடன் புதிய அடுக்​கு​மாடிக் கட்டிடத்தை




உச்ச நீதி​மன்றத்தின் நீதிப​திகள் நேற்று திறந்து வைத்​தனர். பாரம்​பரியக் கட்டிடத்​தில் இயங்கி வரும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நீதி​மன்ற அறைகளுக்கு இணையாக நிர்​வாகப் பிரிவுடன் கூடிய பல்வேறு அலுவலகப் பிரி​வும் தனித்தனி அறைகளில் இயங்கி வந்தன. இதனால் ஏற்பட்ட இடநெருக்​கடியை கருத்​தில்​கொண்டு நிர்​வாகப் பிரிவுக்கென புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்​யப்​பட்​தன்படி, எஸ்பிளனேடு நுழைவுவா​யில் பகுதி​யில் 11 அடுக்​கு​மாடிகளுடன் கட்டப்​பட்ட புதிய நிர்​வாகப் பிரிவுக் கட்டிடத்தை உச்ச நீதி​மன்றத்தின் நீதிப​திகள் எம்.எம்​.சுந்​தரேஷ், ஆர்.ம​காதேவன் ஆகியோர் நேற்று திறந்து வைத்​தனர். அதன்​ பின்  நடைபெற்ற விழா​வில் முன்​னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்​தப்​பட்​டது.



நிகழ்​வில் பேசிய உயர் நீதி​மன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஆர்​.ஸ்ரீராம், ‘‘நீ​தித்​துறை தனது நீதிபரிபாலனத்தை விரைவாக வழங்கிட நிர்​வாகத் துறை​யின் செயல்​பாடுகள் அவசி​ய​மானது மட்டுமின்றி, முக்​கிய​மானதும் கூட. நீதித்​துறை​யின் முது​கெலும்பாக உள்ள நிர்​வாகத் துறைக்கு போதிய இடவசதி இல்லாமல் இருந்து வந்த குறையை இந்தப் புதிய கட்டிடம் தீர்த்து வைத்​துள்ளது.இந்தப் புதிய கட்டிடத்​தில் வழக்கு ஆவணங்​களின் பாது​காப்பு, நீதித்​துறைக்கான வழக்கு ஆவணங்கள், கணக்குகள்  அலுவல​கங்​கள், தபால் துறை உள்ளிட்ட நிர்​வாகப் பிரிவு அலுவல​கங்கள் இயங்​கும். இந்த அடுக்​கு​மாடி கட்டிடம் அமைவதற்கு உதவிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி’’ எனத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதி​மன்றத்தின் மூத்த நீதிப​திகள் எஸ்.எஸ்​.சுந்​தர், ஆர்.சுப்​பிரமணி​யன், ஆர்.சுரேஷ்கு​மார் மத்திய அரசின் கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் ஏ.ஆர்​.எல் சுந்​தரேசன், அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ் ராமன் உள்​ளிட்ட பலர் பங்​கேற்றனர்​. அதேபோல சென்னை பழைய சட்டக் கல்லூரிக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள புராதன கூடுதல் நீதிமன்ற கட்டிடம் இன்று திறக்கப்பட்டது சென்னை பாரிமுனையில் உயர் நீதிமன்ற வளாகத்தில் சென்னை அரசு சட்ட கல்லூரி 10 ஆண்டுகளுக்கும் மேல் செயல்பட்டு வந்த நிலையில், 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி இரண்டு பிரிவு மாணவர்களுக்கிடையே கல்லூரி வளாகத்தில் மோதல் ஏற்பட்டது. கல்லூரியின் பிரதான வாயிலுக்கு அருகில், இரும்புக் கம்பிகள் மற்றும் கட்டைகள் உள்ளிட்ட கொடிய ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். காவல்துறையினர் கண் முன் நடந்த இந்த மோதல் சம்பவம் தமிழநாடு முழுவதும் அப்போது அதிர்வை ஏற்படுத்தியது. அதேபோல் பல்வேறு பிரச்னைகளுக்காக சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் தொடர்ந்து போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டது. இது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்ததையடுத்து சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. நீதிபதி சண்முகம் தலைமையிலான ஆணையம், தற்போதுள்ள இடத்தில் சட்டக் கல்லூரியை மூடிவிட்டு புதிய இடத்திற்கு கல்லூரியை இட மாற்றம் செய்ய வேண்டுமென் 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அளித்ததை




ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு அரசு 118 கோடி ரூபாய் செலவில் திருவள்ளூர் மாவட்டம், பட்டரை பெரும்புதூர் கிராமத்தில் ஒரு சட்டக் கல்லூரியும், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள புதுப்பாக்கம் கிராமத்தில் மற்றொரு சட்டக் கல்லூரியும் கட்டியது. 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் தேதி முதல் புதிய இடத்தில் அரசு சட்டக் கல்லூரிகள் செயல்படத் தொடங்கின. அதன் பின்னர் உயர் நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்ட சட்டக் கல்லூரியின் இடம் மூடப்பட்டு உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பிற்குள் வந்தது.


தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இடநெருக்கடி அதிகரித்து வந்த காரணத்தாலும் புதிய நீதிமன்றங்களின் தேவை ஏற்பட்டதாலும் சட்டக் கல்லூரி செயல்பட்டு வந்த புராதனக் கட்டிடத்தில் உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிமன்ற அறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 133 ஆண்டுகள் பழமையான சட்டக் கல்லூரியை பழமை மாறாமல் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு 23 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டது. புனரமைப்புப் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று உயர் நீதிமன்றத்திற்காக இங்கு புதிதாக 6 நீதிமன்ற அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துடக்கவிழாவும் நடந்தது. நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் புராதன கூடுதல் நீதிமன்றக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் கட்டிடத்தின் திறப்பு விழா, உச்சநீதி மன்ற மாண்புமிகு நீதியரசர் சூர்யா காந்த் அவர்கள், மாண்புமிகு மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்கள், 26.10.2025  இன்று கலந்து கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிமன்றக் கட்டிடத்தை திறந்து வைத்தனர். திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, மற்றும் தமிழ்நாடு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...