முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிலங்கள் குறித்த பாதுகாப்பு ஆவணங்கள் தொலைந்தது குறித்து நடவடிக்கை எடுக்கவும் ரூபாய் 25000 அபராதம் விதித்து தகவல் ஆணையம் உத்தரவு

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகில் பள்ளக்காட்டுப்புதூர் பழனியப்பன், கிராம வரைபடம் உள்ளிட்ட சில ஆவணங்களின் நகல்களைகா கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கக் கோரியிருந்தார்.



ஆனால், இந்த ஆவணங்களை பொது தகவல் அலுவலரான மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் வழங்கவில்லை அதற்கு அடுத்து முதல் மேல்முறையீடு 45 நாளில் மாவட்ட வருவாய் அலுவலருக்கு தாக்கல் செயத நிலையில் அப்போதும் வழங்கவிலை என்பதால் இரண்டாம் மேல் முறையீடு மாநிலத் தகவல் ஆணையத்திற்கு 90 நாட்கள் முடிந்த நிலையில் தாக்கல் செய்தார். அப்போது நடந்த தொலைபேசி விசாரணை முடிவில் வழங்கும்படி தெரிவித்த வாய்வழி உத்தரவிலும் தரவில்லை இதனால் பொது தகவல் அலுவலரான நாமக்கல் கலெக்டரின் நேர்முக உதவியாளருக்கு எதிராக சென்னையில் உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அவர் நிறைவேற்ற மனுவை தாக்கல் செய்து முறையிட்டார்.


இந்த வழக்கு விசாரணையின் போது, 'மனுதாரர் கோரிய கிராம வரைபடம் அலுவலகப் பதிவறையில் தேடிப்பார்த்ததில் கிடைக்கவில்லை' என நாமக்கல் மாவட்ட பொது தகவல் அலுவலர் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த மாநிலத் தகவல் ஆணையம், 'மனுதாரர் கோரிய ஆவணங்களை அலுவலகக் கோப்புகளை தேடிப்பார்த்து வழங்க வேண்டுமென 23.3.2022 ஆம் தேதியன்று உத்தரவிட்டது .இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என மனுதாரர் தனியாக ஒரு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை மாநிலத் தலைமை தகவல் ஆணையர் முகமது ஷகீல் அக்தர் விசாரித்தார். அப்போது, நேரில் ஆஜரான மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்தியா, 'மனுதாரர் கோரிய ஆவணங்கள் சேலம் மாவட்ட நில அளவை அலுவலகத்தில் இருக்கலாம் எனக் கருதி அந்த ஆவணங்களின் நகல் கோரி கடிதம் அனுப்பினோம். அவர்கள் தங்கள் அலுவலகப் பராமரிப்பில் அந்த ஆவணங்கள் இல்லை எனத் தெரிவித்து விட்டனர்' என்று பதில் சொல்லி தப்பிக்க நினைத்து பிரமானப் பத்திரம் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாநில தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், "தகவல் ஆணையம் 23.3.2022 அன்று பிறப்பித்த உத்தரவை மதிக்காததால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது அதிகார அமைப்புக்கு ரூபாய்.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். மனுதாரர் கோரிய ஆவணங்கள் வருவாய்த்துறையினரால் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள். ஆனால் அந்த ஆவணங்கள் பராமரிப்பில் இல்லை என அளிக்கப்பட்டுள்ள பதில் முற்றிலும் ஏற்புடையதல்ல, 

இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என மனுதாரர் கோரிக்கை அடிப்படை யில்

நிரந்தரப் பதிவேடுகளான கிராம வரைபடம் உள்ளிட்டவற்றை உரிய முறையில் பராமரிப்பதும், பாதுகாப்பதும் வருவாய்த்துறையின் முக்கியக் கடமையாகும். மனுதாரர் கோரிய ஆவணங்கள் எப்படி மாயமானது? என்பது குறித்து நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை நடத்த வேண்டும். அத்துடன் வருவாய்த் துறை ஆவணங்கள் காணாமல் போனதற்கு பொறுப்பான நபர் யார்? என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து அது குறித்து அறிக்கையை டிசம்பர் மாதம் 18- ஆம் தேதி நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும்" இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.நிலம் தொடர்பான அளவை ஆவணங்கள் மற்றும் வருவாய் துறை வரிவிதிப்பு சார்ந்த ஆவணங்கள் வருவாய் ஆணையர்,


நில அளவை மற்றும் நில வரித்திட்ட ஆணையரகம், சர்வே ஹவுஸ், காமராஜர் சாலை,சேப்பாக்கம்,சென்னை - 600005. மற்றும் அந்நந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆவணக்காப்பகங்களில் கட்டாயம் இருக்க வேண்டும்.

இது குறித்து சுற்றறிக்கைகள் மற்றும் அரசாணை களின் விபரம் கீழ் உள்ளது

1) CSO-CIRCULAR DATE: 12-03-2024,

2) CSO - CIRCULAR 1/11886/2023 (.) : 23.07.2023.

3) CSO - CIRCULAR -3/40472/2015 (.) : 23.12.2015,

4) PIO, O/o Collector, Dpi, Letter No. ..9839/2025/13, : 23.05.2025,

5) PIO, O/o Collector, Dpi, Letter No. ..1527/2025/13, %: 03.02.2025,

6) PIO, O/o Collector, Dpi, Letter No. ..1871/2025/13, : 30.01.2025,

7) PIO, O/o Collector, Dpi, Letter No. ..19441/2024/13, : 19.08.2024,

8) PIO, O/o Collector, Dpi, Letter No. ..4878/2024/13, : 21.03.2024,

9) PIO, O/o Collector, Dpi, Letter No. ..49192024/13, : 20.03.2024,

..32285/2023/13, : 18.01.2024, 10) PIO, O/o Collector, Dpi, Letter No.

11) G.O. Ms No. 370, R and DM Deptt 21-07-2020,

12) G.O.(MS) No.450. R&DM Deptt. Dated 21.11.2019. இவை கூறும் விபரங்கள் படி சட்டம் கடமையைச் செய்யத் தவறும் அரசு பணி அலுவலர்கள் அதற்கு லஞ்சம் கேட்கும் சூழல் தமிழ்நாட்டில் தான் அதிகம், அதேபோல் ஊழல் குற்றம் செய்து ஆவண மறைப்பு செய்தவர்களை காப்பாற்ற முயலும் சில ஊழியர்கள் உள்ள வரை பழனிசாமி போன்ற நபர்கள் நடவடிக்கை தேவை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...