புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா தீர்த்தான்விடுதி கிராமத்தில், பட்டா பெயர் மாறுதலுக்கு தேவதாஸ் ஆன்லைன் மூலம்,
விண்ணப்பித்துள்ளார், காலம் கடந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் பணி செய்த ஜாஸ்மின் பானுவிடம் கேட்டுள்ளார். அப்போது, பட்டா மாறுதலுக்கு ரூபாய்.10,000 லஞ்சமாகத் தர வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் பானு கறாராகக் கூறியதால் ல், இருப்பினும், லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதால், தேவதாஸ் இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் கிராம நிர்வாக அலுவலரைச் சந்தித்து ரூபாய்.4,000 கொடுத்திருக்கிறார். மீதிப் பணத்தை தீபாவளி முடிந்த பிறகு தருவதாகக் கூற, சரி என்று கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் பானு, வாங்கிய 4,000 ரூபாயையும் தன் பாக்கெட்டில் வைத்துள்ளார். அதனை விவசாயி தேவதாஸ் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் பானு லஞ்சம் வாங்கும் வீடியோவை அவர் பதிவிட்ட நிலையில் சமூக வலைதளங்களில் அது வேகமாகப் பரவியது. அதன் அடிப்படையில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் பானுவை தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்த உத்தரவிட்டார். தற்போது, தேவதாஸ் தரப்பில் சமாதானம் பேசி, லஞ்சம் கொடுக்கவில்லை என வாக்குமூலம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இதே தாலுகாவில் இதுபோன்ற ஏராளமான முறைகேடுகள் நடப்பதாகவும், உயர் அலுவலர்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை விபரம் இதுவரை வெளிவரவில்லை

கருத்துகள்