பணிக்காலத்தில் பெருமளவில் ஊழல் செய்து கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்த ஓய்வு தலைமைப் பொறியாளர்
மத்திய பிரதேசத்தின் பொதுப் பணித் துறைதலைமை பொறியாளராக கோவிந்த் பிரசாத் மெஹ்ரா பணியாற்றி. 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றார்.
அதன்பின் தலைநகர் போபாலில் அவரது வீட்டில் வசித்து வந்தார். அவர் பணியிலிருந்த காலத்தில் பெருமளவில் ஊழல் செய்து கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்திருப்பதாக புகார் எழுந்தது தொடர்பாக மத்திய பிரதேச லோக் ஆயுக்தா ஊழல் தடுப்பு துறையினர் போபால் மற்றும் நர்மதாபுரம் பகுதிகளில் மெஹ்ராவுக்குச் சொந்தமான 4 வீடுகளில் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தினர்.
அந்த வீடுகளிலிருந்து 2.7 கிலோ தங்க நகைகளும். 5.5 கிலோ அளவில் வெள்ளிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூபாய்.35 லட்சம் ரொக்கம், மற்றுமா பல கோடி மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் மெஹ்ராவின் சைனி கிராமத்தில் 32 சுற்றுலா விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.
சொகுசு வாகனங்கள்: மேலும் பிவிசி பைப் தயாரிக்கும் தொழிற்சாலை, பல்வேறு பண்ணை வீடுகளும் அவரது குடும்பத்தினர் பெயர்களில் இருப்பது தெரிய வந்துள்ளது. ஒரு பண்ணை வீட்டிலிருந்து 17 டன் மலைத் தேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மெஹ்ராவின் வீடுகளில் இருந்து ஏராளமான சொகுசு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் மதிப்பு சில கோடிகளைத் தாண்டும் எனத் தெரிகிறது. இதுகுறித்து லோக் ஆயுக்தா வினர் தரப்பில் தெரிவித்ததாவது
ஓய்வு பெற்ற அரசு அலுவலர் கோவிந்த் பிரசாத் மெஹ்ரா வீடுகளிலிருந்து கிலோ கணக்கில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்திருக்கிறோம். ஏராளமான சொத்துப் பத்திரங்களையும் கைப்பற்றியுள்ளோம். இவற்றின் அரசு மதிப்பு சுமார் ரூபாய்.60 கோடி ஆகும். ஆனால் விற்பனை விலை அதிகம் அடுத்தகட்டமாக மெஹ்ராவின் 2 மகன்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு லோக் ஆயுக்தா ஊழல் தடுப்பு காவலர்கள் தெரிவித்தனர்.









கருத்துகள்