குள்றவாளியை விடுவிக்க ரூபாய்.3 லட்சம் வஞ்சம் வாங்கிக் கைதான நாகர்கோவில் காவல் ஆய்வாளர்
அன்பு பிரகாஷ் கன்னியாகுமாரி மாவட்டம், நாகர்கோவில் வட்டம் களியக்காவிளை காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது, திருடன் கொள்ளையடித்த 38 பவுன் தங்க நகைகளில் இவர் மீது 20 பவுன் தங்ங நகைகளைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது அதன் பின்னர் விசாரணை செய்து பணியிடை நீக்கம் செய்யாமல் காப்பாற்ற நினைத்து நேசமணி காவல் நிலைய ஆய்வாளராக பணி மாற்றம் செய்யப்பட்ட அன்பு பிரகாஷ்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராஜன் என்ற சந்தை ராஜன் என்பவர் மீது நேசமணி காவல் நிலையத்தில் நிலுவையிலுள்ள அந்த திருட்டு வழக்கிலிருந்து அவனை விடுவிக்க 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட ஆய்வாளர் அன்பு பிரகாஷ்.
முதல் தவணையாக ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் முன் பணம் பெளற்றதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், வழக்கில் இருந்து அவனை விடுவிக்காமல் லஞ்சப்பணம் மீதித் தொகையான 1,15,000 ரூபாய் தந்தால் மட்டுமே வழக்கின் குற்றப்பத்திரிகையில் பெயரை நீக்குவதாகவும், இல்லையென்றால் குற்றப்பத்திரிகையில் பெயரை சேர்ப்பதாகவும் மிரட்டலாகக் கூறிய ஆய்வாளருக்கு.
அதற்குமேல் பணம் கொடுக்க விரும்பாத திருடன் ராஜன் என்ற சந்தை ராஜன், கன்னியாகுமரி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்காலிடம் புகார் கொடுத்து
அவர்கள் ஆலோசனைப் படி பினாப்தலீன் ரசாயனப் பொடி தடவிய ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை ராஜன் என்ற சந்தை ராஜனிடம் கொடுத்து லஞசமாகக் கொடுக்கும் படி அறிவுரை கூறி அனுப்பினர். தன்னிடம் மீதி பணம் உள்ளதென ஆய்வாளர் அன்பு பிரகாஷுக்கு ராஜன் என்ற சந்தை ராஜன் தகவல் வழங்கியுள்ளார். வெள்ளமடத்திலுள்ள தனது வீட்டிற்கு பணத்தைக் கொண்டுவரும்படி ஆய்வாளர் கூறியுள்ளார். அதனடிப்படையில் ராஜன் என்ற சந்தை ராஜன் வெள்ளமடத்தில் உள்ள ஆய்வாளர் அன்பு பிரகாஷ் வீட்டுக்குச் நேற்று முன்தினம் இரவு அரசு சாட்சி ஒருவருடன் சென்று ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை அரசு சாட்சி முன்னிலையில் கொடுத்துள்ளார்
அப்போது லஞ்சப் பணத்தை வாங்கிய அன்பு பிரகாஷை அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்கால், உதவி ஆய்வாளர் பொன்சன், சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், மற்றும் குழுவில் அருண் அசரியா உள்ளிட்டோர் அடங்கியோர் பணம் பெற்ற கையுடன் பிடித்து கைதானார்.
அவரைக் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்திய பின்னர் அவரை சிறைக்கு கொண்டு செல்லும் போது அன்பு பிரகாஷ் மயங்கி விழுந்துள்ளார். பிடிபடும் போது மயங்காதவர் உண்மையாகவே சிளை செல்லும் போது மயங்கினாரா அல்லது மருத்துவ சிறைக்காக நடித்தாரா என்பதும் இனிமேல் தான் தெரியும்.
அதைத்தொடர்ந்து ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விரைவில் அவர் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக விஜிலன்ஸ் தரப்பு தெரிவித்துள்ளது. அவர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் விபரம் வருமாறு
அன்பு பிரகாஷ் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் சார்பு ஆய்வாளராக மற்றும் பதவி உயர்வு மூலம் ஆய்வாளராகப் பணிபுரிகிறார்.
இவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது இந்த வழக்கில் இவரை சிக்கவைத்த திருடன் ராஜன் என்ன சந்தை ராஜன் கொள்ளையடித்த 38 பவுன் நகைகளில் சுமார் 20 பவுன் நகைகளைத் திருடியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்கு.
மேலும், வருமானத்திற்கு அதிகமாக சொத்துத் சேர்த்ததாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இவரது வீட்டில் சோதனை நடத்திய போது பறிமுதல் செய்து வருமான வரி கணக்கில் காட்ட்டப்படாத நகைகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது
அது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ரூபாய். 1.15 லட்சம் திருடனிடமே லஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்டார் ஆய்வாளர் அன்பு பிரகாஷ்.காரைக்குடியில் பயிற்சி உதவிக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி தற்போது கன்னியாகுமாரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றுகிறார். டாக்டர் ஸ்டாலின் ஐபிஎஸ் இன்று.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் லஞ்சம் வாங்கி ஆய்வாளர் கைதானதன் எதிரொலியாக
மூன்று ஆய்வாளர்கள், 8 சார்பு ஆய்வாளர்களை பிற மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்தும், சரியாக தகவல் தராத
12 காவல் நிலைய தனிப்பிரிவுக் காவலர்களை தனிப்பிரிவிலிருந்து நீக்கம். செய்தும் இந்த வழக்கு சம்பந்தப்பட்டதில் காவலர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்தம்
கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி நகர் காவல் நிலைய ஆய்வாளர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டக் காவல் துறையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் ஐபிஎஸ் காலம்கடந்தாலும் நடவடிக்கை எடுத்துள்ளது அவரது கடமை குறிப்பாக தக்கலை, குளச்சல், இரணியல், ஆகிய காவல் நிலையக் காவல் ஆய்வாளர்கள் மற்றும் 8 காவல் சார்புஆய்வாளர்கள் பிற மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . மேலும் நேசமணி நகர் காவல் நிலைய காவலர் சதீஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை போதாது கன்னியாகுமரி மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் மத்தியிலும் மேலும் லஞ்சம் வாங்கும் காவலர்களை இனம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தொடருமென்பதோடு அவர்கள் மீது பணியிடை நீக்கம் உட்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார் இது காவலர்கள் சட்டவிரோதச் செயல்பாடுகளுக்கு முழுவதும் தடை விதிப்பதாகவே உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து மேலும் நேர்மையாகப் பணியாற்றும் காவலர்கள் மட்டுமே கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்ற முடியும் என்ற நிலையை உருவாக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர் ஆனால் அது போல் எல்லா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களும் முடிவெடுத்தால் ஊழல் நபர்களை எங்கு மாற்றுவது. ஊழல் குறையுமா என்பதே பலரது எழுவினா?
















கருத்துகள்