மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழல் முறைகேடு காரணமாக காலதாமதமாக மேயர் இந்திராணி ராஜினாமா செய்தார்.
நாளை அக்டோபர் மாதம்.,17 ஆம் தேதி மதுரை மாநகராட்சிக்கு புதிய மேயர் தேர்வு செய்யப்படுகிறார். மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் சொத்து வரி தாக்கல் செய்வதில் மிகப்பெரிய திட்டமிட்ட ஊழல் முறைகேடு நடந்ததை அடுத்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, மத்தியக் குற்றப்பிரிவு காவலதுறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில், ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன், உதவி வருவாய் ஆய்வாளர், உதவி ஆணையர் உதவியாளர், மற்றும் ஊழல் செய்ய உதவிய புரோக்கர்கள் எனப் பலரையும் கைது செய்தனர். மேலும், மாநகராட்சி அலுவலர்கள் சிலர் பாஸ்வேர்டை முறைகேடாகப் பயன்படுத்தியதாக மேயர் இந்தராணியின் கணவர் பொன் வசந்தை மத்தியக் குற்றப்பிரிவுக் காவலதுறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், திமுகவின் மண்டலத் தலைவர்கள் மற்றும் மண்டல தலைவர்களின் கணவர்களுக்கும் இதில் தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர்கள் கேஎன் நேரு, மூர்த்தி ஆகியோரும், மேயர் இந்திராணி, திமுகமண்டலத் தலைவர்கள் உள்ளிட்டோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தினர். மேலும், இந்த விவகாரத்தில் திமுக தலைமை நெருக்கடி கொடுத்துள்ளது எனப் பேசப்படும் நிலையில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி ராஜினாமா செய்தார். இது தொடர்பான கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் அவர் வழங்கினார். இந்த ராஜினாமாக் கடிதத்தை ஏற்பது குறித்து நாளை அக்டோபர் மாதம்.,17 ஆம் தேதி துணை மேயர் நாகராஜன் தலைமையில் கவுன்சிலர்களின் அவசரக் கூட்டம் நடைபெறுகிறது.
ராஜினாமா ஏற்கப்படும் பட்சத்தில் அன்றைய தினமே புதிய மேயர் தேர்வு செய்யப்படுகிறார். இதில் பொதுநீதி யாதெனில் : மேயர் தேர்வு நடக்கட்டும் ஆனால் ஊழல் செய்தவர்கள் மீது கடும் தண்டனை கிடைக்குமா என யாரும் பேசவில்லை ஏன் என்ற வினா எழுகிறதுமதுரை மாநகராட்சியில் நடந்த சுமார் 200 கோடி மதிப்பிலான சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் சமீபத்தில் ராஜினாமா செய்த மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தற்போது சிலர் ஜாமீன் பெற்றுள்ளனர்.
முதற்கட்டமாக அரசு சார்ந்த கணினியின் வரி விதிப்பு தொகையில் திருத்தங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு அரசு ஊழியர் இது போன்ற நிதி மோசடித் தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டால் மிக முக்கியமாக IPC பிரிவுகள் 120B ( கூட்டுச் சதி), 420 (மோசடி), 471 (அரசு சார் ஆவணங்களில் மோசடி), மற்றும் PC Act (ஊழல் தடுப்புச் சட்டம்) ஆகியவையின் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இந்த குற்றத்தின் வீரியத்தை முற்றிலும் குறைக்கும் விதமாக மேற்கூறிய எந்த ஒரு பிரிவையும் FIR இல் சேர்க்கப்படாதது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
மேற்கூறிய IPC 120B, 420, 471 பிரிவுகள் மற்றும் PC Act ஆகியவையின் கீழ் வரும் குற்றங்கள் PMLA Act-
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் scheduled offence - ன் அட்டவணையில் வரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தால், அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொள்வதற்கு முகாந்திரம் ஆகிவிடும் என்கிற காரணத்தால், பெயருக்கு 465, 466, 468, 477 ஏ மற்றும் ஐ.டி. சட்டங்களின் பிரிவுகளில் மட்டும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அமலாக்கத்துறையிடம் இருந்து காக்கும் வகையில் வழக்குப் பதிவு செய்திருப்பதே ஒரு மோசடிதான்.
ஏற்கனவே அமலாக்கத்துறையின் பிடியில் பல தி.மு.க அமைச்சர்கள் சிக்கி இருக்கும் நிலையில், மேலும் ஒரு அமலாக்கத்துறை வழக்கை எதிர்கொள்ள முடியாதென்பதை நன்கு உணர்ந்த தி.மு.க., வெகு சாமார்த்தியமாக இந்த FIR-ல் குற்றத்திற்கேற்ப பிரிவுகளை சேர்க்காமல் விட்டிருக்கிறது.
கீழ்நிலையில் இருக்கும் சில ஊழியர்களைக் காப்பாற்றவே இந்த மெனக்கெட்டிருப்பதாக தெரியவில்லை; சம்பந்தப்பட்டிருக்கும் மேல் மட்டத்திலிருப்பவர்கள் நோக்கி அமலாக்கத்துறை வந்துவிட கூடாது என்பதற்காகவே FIR இல் இந்த மோசடி நடந்திருக்க வேண்டும் என்ற ஐயம் எழுவதை தவிர்க்க இயலவில்லை.
எனவே தமிழழ்நாடு குற்றப் புலணாய்வுக் காவல்துறை குற்றத்திற்கேற்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மக்கள் கேட்கும் நிலையில்.
விஞ்ஞான முறையில் ஊழல் செய்து அதிலிருந்து விஞ்ஞான முறையில் தப்பிக்கவும் முயற்சி மதுரையில், இந்த அநீதிக்கும் நீதி கிடைக்குமா..?
‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்பதை நினைவில் கொள்ளவும் ?
மதுரை கிழக்கு மண்டலத் தலைவராக உள்ள வாசுகி சசிகுமார் மட்டும் ராஜினாமா செய்யவிவ்லை அதேபோல் சரவண புவனேஸ்வரியும் மண்டலத் தலைவர் தான். இவர்கள் மட்டுமல்லாமல் கவுன்சிலர்கள் மகாலட்சுமி, ரோகிணி, லட்சிகா ஸ்ரீ, இந்திரா காந்தி ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருந்த போதிலும் . தேர்தலுக்கு ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், மாவட்ட இரண்டு அமைச்சர்கள் மத்தியில் நடக்கும் போட்டியில் புதிய மேயர் மாற்றத்தில் வாசுகி சசிகுமாருக்கு வாய்ப்பு வரலாம் திமுக தலைமையும் அவர் தரப்பில் கரிசனம் உள்ளதாகக் கூறுகின்றனர்.
.jpg)












கருத்துகள்