முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் தீபாவளி கொண்டாடிய பிரதமர்

 பிரதமர் திரு. நரேந்திர மோடி ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் தீபாவளியைக் கொண்டாடினார்

ஐ.என்.எஸ். விக்ராந்த் வெறும் போர்க்கப்பல் மட்டுமல்ல, 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் கடின உழைப்பு, திறமை, தாக்கம் மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்: பிரதமர்



ஐ.என்.எஸ். விக்ராந்த் என்பது தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் ஆகியவற்றின் தலைசிறந்த சின்னமாகும்: பிரதமர்

முப்படைகளுக்கும் இடையிலான அசாதாரண ஒருங்கிணைப்பு, சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானைச் சரணடைய கட்டாயப்படுத்தியது: பிரதமர்

உலகின் சிறந்த பாதுகாப்பு ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றுவதே எங்கள் குறிக்கோள்: பிரதமர்

இந்தியக் கடற்படை இந்தியப் பெருங்கடலின் பாதுகாவலராக நிற்கிறது: பிரதமர்


நமது பாதுகாப்புப் படைகளின் வீரம் மற்றும் உறுதிப்பாட்டிற்கு நன்றி, நாடு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது, நாங்கள் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை ஒழித்து வருகிறோம்: பிரதமர்

ஐ.என்.எஸ். விக்ராந்தில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆயுதப்படை வீரர்களிடம் உரையாற்றினார். இன்று ஒரு குறிப்பிடத்தக்க நன்னாள், குறிப்பிடத்தக்க தருணம் மற்றும் குறிப்பிடத்தக்க காட்சி என்று குறிப்பிட்ட திரு. மோடி, ஒரு பக்கம் பரந்த கடல், மறுபுறம், இந்தியத் தாயின் துணிச்சலான வீரர்களின் மகத்தான வலிமை ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

ஐஎன்எஸ் விக்ராந்தில் கழித்த தமது இரவை நினைவு கூர்ந்த பிரதமர், அந்த அனுபவத்தை வார்த்தைகளில் விவரிக்கக் கடினமாக இருப்பதாகக் கூறினார். கடலில் ஆழ்ந்த இரவையும் சூரிய உதயத்தையும் இந்தத் தீபாவளியை பல வழிகளில் மறக்கமுடியாததாக மாற்றுவதாக அவர் விவரித்தார். ஐஎன்எஸ் விக்ராந்திலிருந்து, நாட்டின் 140 கோடி மக்களுக்கும் பிரதமர் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ஐஎன்எஸ் விக்ராந்த் நாட்டுக்கு ஒப்படைக்கப்பட்ட தருணத்தை நினைவுகூர்ந்த திரு மோடி, அந்த நேரத்தில், விக்ராந்த் ஒரு பிரமாண்டமானது, மகத்தானது, பரந்து விரிந்த, தனித்துவமானது  என்று குறிப்பிட்டதாகக் கூறினார். "விக்ராந்த் வெறும் போர்க்கப்பல் அல்ல; இது 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் கடின உழைப்பு, திறமை, தாக்கம் மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்" என்று பிரதமர் தெரிவித்தார். நாடு உள்நாட்டிலேயே கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்தைப் பெற்ற நாளிலேயே, இந்திய கடற்படை காலனித்துவ மரபின் முக்கிய சின்னத்தைக் கைவிட்டதை அவர் நினைவு கூர்ந்தார். சத்ரபதி சிவாஜி மகாராஜால் ஈர்க்கப்பட்டு, கடற்படை ஒரு புதிய கொடியை ஏற்றுக்கொண்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டிலேயே கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த்,  இந்தியாவின் ராணுவ வலிமையை பிரதிபலிக்கிறது என்று கூறிய பிரதமர், சில மாதங்களுக்கு முன்பு, விக்ராந்தின் பெயரே பாகிஸ்தானின் தூக்கத்தைக் கெடுத்ததை  நினைவு கூர்ந்தார். ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற போர்க்கப்பல் எதிரிகளின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க போதுமானது என்று பிரதமர் தெரிவித்தார்.

இந்திய ஆயுதப் படைகளுக்கு தமது சிறப்பு வணக்கத்தைத் தெரிவித்த பிரதமர்,  இந்திய கடற்படையால் ஏற்படுத்தப்பட்ட பயம், இந்திய விமானப்படையால் வெளிப்படுத்தப்பட்ட அசாதாரண திறமை மற்றும் இந்திய ராணுவத்தின் துணிச்சல், முப்படைகளுக்கிடையேயான அற்புதமான ஒருங்கிணைப்பு ஆகியவை, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானை விரைவாக சரணடைய கட்டாயப்படுத்தியதை அவர் சுட்டிக்காட்டினார்.

எதிரி முன்னால் இருக்கும்போதும், போர் நெருங்கும்போதும், சுதந்திரமாகப் போராடும் வலிமையைக் கொண்ட தரப்புக்கு எப்போதும் சாதகமாக இருக்கும் என்று திரு. மோடி கூறினார். ஆயுதப் படைகள் வலுவாக இருக்க, தன்னம்பிக்கை அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். கடந்த பத்தாண்டுகளில், இந்தியப் படைகள் தன்னிறைவை நோக்கி சீராக முன்னேறி வருவதைப் பற்றி பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். கடந்த 11 ஆண்டுகளில், இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, கடந்த ஆண்டு ரூ 1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார்.

“பிரமோஸ் மற்றும் ஆகாஷ் போன்ற ஏவுகணைகள் ஆபரேஷன் சிந்தூர் மூலம் தங்கள் திறன்களை நிரூபித்துள்ளன. உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் இப்போது இந்த ஏவுகணைகளை வாங்க ஆர்வமாக உள்ளன” என்று பிரதமர் கூறினார், மூன்று ஆயுதப் படைகளுக்கும் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் திறனை இந்தியா வளர்த்து வருவதாக அவர் கூறினார். “உலகின் சிறந்த பாதுகாப்பு ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகக் கருதப்படுவதே இந்தியாவின் இலக்கு” என்று திரு மோடி உறுதிப்படுத்தினார். கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 30 மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்று கூறினார். இந்த வெற்றிக்கு பாதுகாப்பு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனங்களின் பங்களிப்புகள் கணிசமாகக் காரணம் என்று அவர் கூறினார்.

"இந்தியக் கடற்படை இந்தியாவின் தீவுகளின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது" என்று பிரதமர் வலியுறுத்தினார். ஜனவரி 26 ஆம் தேதி நாட்டின் ஒவ்வொரு தீவிலும் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு சில காலத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவை அவர் நினைவு கூர்ந்தார். இந்த தேசிய உறுதியை கடற்படை நிறைவேற்றியதாக திரு மோடி கூறினார். இன்று, ஒவ்வொரு இந்தியத் தீவிலும் கடற்படையால் மூவர்ணக் கொடி பெருமையுடன் ஏற்றப்படுகிறது என்று அவர் கூறினார்.

இந்திய ஆயுதப் படைகள் அவ்வப்போது வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்று திரு மோடி கூறினார். ஏமன் முதல் சூடான் வரை, தேவை ஏற்படும் போதெல்லாம், எங்கிருந்தாலும், அவர்களின் வீரமும் துணிச்சலும் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளன. இந்தப் பணிகள் மூலம் இந்தியா ஆயிரக்கணக்கான வெளிநாட்டினரின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய பாதுகாப்புப் படைகளின் வீரம் மற்றும் துணிச்சலால், நாடு ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. நக்சல்-மாவோயிஸ்ட் தீவிரவாதத்திலிருந்து இந்தியா இப்போது முழுமையான விடுதலையின் விளிம்பில் உள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். 2014 க்கு முன்பு, சுமார் 125 மாவட்டங்கள் மாவோயிஸ்ட் வன்முறையால் பாதிக்கப்பட்டன; இன்று, இந்த எண்ணிக்கை வெறும் 11 ஆகக் குறைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

 'பாரத் மாதா கீ ஜெய்!' என்ற முழக்கத்துடன், பிரதமர் மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் இதயப்பூர்வமான தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்து தமது உரையை நிறைவு செய்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...