காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகம் கட்டிய 10 மாடி கொண்ட தர்ம சத்திரத்தை திறந்து வைத்தார் குடியரசு துணைத்தலைவர்
உத்தர பிரதேசத்தின் வாரனாசி எனும் காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகம் சாரபில் ரூபாய்.60 கோடி மதிப்பில் கட்டிய 10 மாடி தர்ம சத்திரத்தை குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்த பின் விழாவில் பேசியதாவது: தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். அது மீண்டும் வெல்லும். இனி இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அதற்கு ஆதாரமாகத் தான் இந்த பிரம்மாண்டமான கட்டிடம் இந்த இடத்தில் எழுப்பப்பட்டுள்ளது. யாரால் ஆக்கிரமிக்கப்பட்டாலும், அது காலத்தைக் கடந்து பல வருடங்கள் ஆனாலும் நீதியும் சத்தியமும் மீண்டும் நிலைாநாட்டப்படும் என்பதைத் தான் இது காட்டுகிறது.
25 ஆண்டுகளுக்கு முன்பு 2020 ல் நாடாளுமன்ற உறுப்பினராக காசிக்கு வந்தேன். பிரதமர் நரேந்திர மோடி, காசியின் வேட்பாளராக முதல்முறை போட்டியிட்ட நேரத்தில் தேர்தல் வேலைக்காக இங்கு வந்தேன். கிராமத்தில் ஒரு வாக்காளரிடம் பேசும் போது அவர், 'இங்கு எந்த மாற்றமும் வரப்போவது இல்லை' என்றார். ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காசிக்கும், இப்போதுள்ள காசிக்கும் சம்பந்தமேயில்லை. மகத்தான மாற்றங்களுக்கு சொந்தமாக மாறியிருக்கிறது.
இதற்கு பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தான் காரணம். மனதும் முயற்சியும் இருந்தால் உலகத்தில் முடியாதது எதுவும் இல்லை.ரூபாய்.60 கோடியில் தர்மசத்திரம் எழுந்து நிற்கிறது. இதற்கு கடன் வாங்கவில்லை. நன்கொடையால் சாத்தியமாகியிருக்கிறது. அப்படி இனிய கட்டிடத்தை கலாசாரப் பிணைப்பை இணைப்பை காசிக்கும், தமிழகத்துக்கும் இணைப்பை உருவாக்கும் இந்த விழாவில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்.சிவனிடம் இருப்பிடமாக முதலாவதாக வருவது காசிதான். காசி நகரில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதைப் பார்க்கும் போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.இது மிகவும் அற்புதமானது. இந்த மாற்றம் பிரதமர் நரேந்திர மோடியின் பிரியத்தையும் முயற்சியையும் பிரதிபலிக்கிறது. யோகி ஆதித்யாநாத் அரசின் முயற்சி காரணமாக இந்த மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.
இந்த காசி நகர் உலகின் பழமையான நகரங்களில் ஒன்று என்பதை யாராலும் மறக்க முடியாது. உலகின் ஆன்மீக நகரம் எது என்று கேட்டால் காசி என்று எளிதாகக் கூற முடியும். இந்நகரில் மட்டும் 72 ஆயிரம் கோவில்கள் இருப்பதாக அறிகிறோம். நம்புகிறோம். இங்கு இருக்கும் காற்றிலும் மண்துகளிலும் ஓம் நமச்சிவாய என்ற சிவ மந்திரம் என்றைக்கும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. காசிக்கு புனித யாத்திரை வந்தால் அது நிறைவடைய ராமேஸ்வரம் செல்ல வேண்டும். தெற்கே இருப்பவர்கள் காசிக்கு வருவதும், காசியில் இருப்பவர்கள் ராமேஸ்வரம் செல்வதும், பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்கதையாகத் தொடர்கிறது. இந்த கலாசார பிணைப்பை, இணைப்பை, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்துகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், துறவிகள் காசிக்கு வந்து ஞானம், தெய்வ அருள் பெற்றனர். குமரகுருபரர் இங்கு வந்து மடத்தை நிறுவியுள்ளார். ஒரு கோவிலைக் கட்டியுள்ளார். பாரதியார் இங்கு வந்துள்ளார்.காசி அரசவையில் அங்கம் வகித்துள்ளார். அதனால் தான் பாரதியார் 'செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையான்' என்று பாடினார். தேசத்தின் ஒற்றுமையைப் பற்றி நாம் உணர்வதற்கு காரணமாக இருக்கும் புனித நகரம் காசி என்பதில் நமக்கு பெருமை தான்.நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் 1863 ஆம் ஆண்டு துவங்கப்பட்டதாக அறிகிறேன். அப்படி பழமையான காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சத்திரம், தமிழகத்தில் இருந்து காசிக்கு வரும் பக்தர்களுக்கு உணவு, தங்கும் இடம் வழங்குவதே நோக்கம் . நேற்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி என்றைக்கும் சரி அதுவே நோக்கம்.ஜார்க்கண்ட் கவர்னராக நான் காசிக்கு வந்த போது நம்முடைய நகரத்தார் சங்கத்தில் இருந்து தான் தினமும் பூஜைப் பொருட்கள் காசி கோவிலுக்கு சம்போ எடுத்துச் செல்வது வழக்கம் என்பதை முதல்வர் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டார். அதில் நானும் கவர்னராக நடந்து சென்று இறைவனை வழிபடும் வாய்ப்பை நகரத்தார் வழங்கினார். பூஜை பொருட்களை எடுத்து செல்லும் போது வழியில் நிற்பவர்கள், ' சம்போ சம்போ சங்கர மஹாதேவா என்று ஒலிப்பதை கேட்க முடிகிறது. அதனால் இந்த வழக்கத்தை சம்போ என அழைக்கின்றனர்.இதில் ஒரு ஆச்சர்யம், 1942 ல் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட ஆங்கிலேயே அரசு கூட 'சம்போ' நிகழ்ச்சியை தடை செய்யவில்லை. கடந்த காலத்தில் நம்முடைய கலாசார பெருமைகளை பலரும் திருடிச் சென்றுள்ளனர். நம்முடைய தெய்வங்களின் சிலைகள் கடத்தப்பட்டு கொண்டு சென்று இருக்கிறார்கள். சில பேர் கூடக் கேட்பார்கள் ' சாமிக்கே தன்னுடைய சிலையை காப்பாற்ற முடியாத போது மக்களை எப்படி காப்பாற்றும் என்று கேட்பார்கள். அது அப்படி அல்ல. அரசன் அன்று கொல்வான். தர்மம் நின்று கொல்லும் என்பது தான் நமது அர்த்தம். காணாமல் போன நமது கடவுள் சிலைகள் இன்று பாரத புண்ணிய பூமிக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். அன்னபூரணி சிலை கனடாவில் இருந்து 2021 ல் திரும்ப கொண்டு வரப்பட்டது. பிரதமர் நரேந்நிர மோடி கடுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளார். 55 சிலைகள், ஆயிரகணக்கான கலைப்பொருட்கள் இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்டுள்ளது.அந்த இரண்டு கர்மயோகிகள் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு காசி தெருக்களில் ஹரஹர மகாதேவா கோஷம் முன்பை விட பெருமையாகவும் சுதந்திரமாகவும் சொல்லப்படுகிறது. னத் தெரிவித்தார்.
ஆக்கிரமிப்பு மீட்பு நடந்த பின் தான் கட்டப்படட நகரத்தார் தர்ம சத்திரம். இப்போது கட்டியுள்ள இடம் சமாஜ்வாதி கட்சியினரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. பாரதிய ஜனதா கட்சி அரசு உபி மாநிலத்தில் அமைந்த பிறகு அந்த இடம் மீட்கப்பட்டு நகரத்தார் சமூகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த இடத்தில் தான் இந்த பிரம்மாண்டமான தர்மசத்திரம் கட்டப்பட்டு உள்ளது.காசியின் புனிதமான சூழலில் காகங்கள் கரையாது என்பது ஒரு நம்பிக்கை. காசியில் கருடன் பறப்பதைப் பார்க்க முடியாது என்பது மற்றொரு நம்பிக்கை. காசியில் பல்லி கத்துவது இல்லை என்பதும் பொதுவான நம்பிக்கைகளில் ஒன்று. காசியில் பிணங்கள் அழுகிய வாடை வராது என்றும் நம்பப்படுகிறது தென்னிந்தியாவில் மல்லி மற்றும் முல்லை போன்ற பூக்களின் வாசனை காசியில் இருக்காது என்றும், சாமந்திப் பூக்கள் அதிகம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நம்பிக்கைகள் அனைத்தும் காசியின் புனிதத்தன்மை மற்றும் அதிசயத் தன்மையைக் குறிக்கின்றன.











கருத்துகள்