முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காசியில் நகரத்தார் 10 மாடி தர்ம சத்திரத்தை திறந்து வைத்த குடியரசு துணைத்தலைவர்

காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார்  சமூகம் கட்டிய 10 மாடி கொண்ட தர்ம சத்திரத்தை திறந்து வைத்தார்  குடியரசு துணைத்தலைவர்



உத்தர பிரதேசத்தின் வாரனாசி எனும் காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகம் சாரபில் ரூபாய்.60 கோடி மதிப்பில் கட்டிய 10 மாடி தர்ம சத்திரத்தை குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்த பின்  விழாவில் பேசியதாவது: தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். அது மீண்டும் வெல்லும். இனி இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அதற்கு ஆதாரமாகத் தான் இந்த பிரம்மாண்டமான கட்டிடம் இந்த இடத்தில் எழுப்பப்பட்டுள்ளது. யாரால் ஆக்கிரமிக்கப்பட்டாலும், அது காலத்தைக் கடந்து பல வருடங்கள் ஆனாலும் நீதியும் சத்தியமும் மீண்டும் நிலைாநாட்டப்படும் என்பதைத் தான் இது காட்டுகிறது.


25 ஆண்டுகளுக்கு முன்பு 2020 ல் நாடாளுமன்ற உறுப்பினராக காசிக்கு வந்தேன். பிரதமர் நரேந்திர மோடி, காசியின் வேட்பாளராக முதல்முறை போட்டியிட்ட நேரத்தில் தேர்தல் வேலைக்காக இங்கு வந்தேன். கிராமத்தில் ஒரு வாக்காளரிடம் பேசும் போது அவர், 'இங்கு எந்த மாற்றமும் வரப்போவது இல்லை' என்றார். ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காசிக்கும், இப்போதுள்ள காசிக்கும் சம்பந்தமேயில்லை. மகத்தான மாற்றங்களுக்கு சொந்தமாக மாறியிருக்கிறது.




இதற்கு பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தான் காரணம். மனதும் முயற்சியும் இருந்தால் உலகத்தில் முடியாதது எதுவும் இல்லை.ரூபாய்.60 கோடியில் தர்மசத்திரம் எழுந்து நிற்கிறது. இதற்கு கடன் வாங்கவில்லை. நன்கொடையால் சாத்தியமாகியிருக்கிறது. அப்படி இனிய கட்டிடத்தை கலாசாரப் பிணைப்பை இணைப்பை காசிக்கும், தமிழகத்துக்கும் இணைப்பை உருவாக்கும் இந்த விழாவில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்.சிவனிடம் இருப்பிடமாக முதலாவதாக வருவது காசிதான். காசி நகரில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதைப் பார்க்கும் போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.இது மிகவும் அற்புதமானது. இந்த மாற்றம் பிரதமர் நரேந்திர மோடியின் பிரியத்தையும் முயற்சியையும் பிரதிபலிக்கிறது. யோகி ஆதித்யாநாத் அரசின் முயற்சி காரணமாக இந்த மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.



இந்த காசி நகர் உலகின் பழமையான நகரங்களில் ஒன்று என்பதை யாராலும் மறக்க முடியாது. உலகின் ஆன்மீக நகரம் எது என்று கேட்டால் காசி என்று எளிதாகக் கூற முடியும். இந்நகரில் மட்டும் 72 ஆயிரம் கோவில்கள் இருப்பதாக அறிகிறோம். நம்புகிறோம். இங்கு இருக்கும் காற்றிலும் மண்துகளிலும் ஓம் நமச்சிவாய என்ற சிவ மந்திரம் என்றைக்கும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. காசிக்கு புனித யாத்திரை வந்தால் அது நிறைவடைய ராமேஸ்வரம் செல்ல வேண்டும். தெற்கே இருப்பவர்கள் காசிக்கு வருவதும், காசியில் இருப்பவர்கள் ராமேஸ்வரம் செல்வதும், பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்கதையாகத் தொடர்கிறது. இந்த கலாசார பிணைப்பை, இணைப்பை, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்துகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், துறவிகள் காசிக்கு வந்து ஞானம், தெய்வ அருள் பெற்றனர். குமரகுருபரர் இங்கு வந்து மடத்தை நிறுவியுள்ளார். ஒரு கோவிலைக் கட்டியுள்ளார். பாரதியார் இங்கு வந்துள்ளார்.காசி அரசவையில் அங்கம் வகித்துள்ளார். அதனால் தான் பாரதியார் 'செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையான்' என்று பாடினார். தேசத்தின் ஒற்றுமையைப் பற்றி நாம் உணர்வதற்கு காரணமாக இருக்கும் புனித நகரம் காசி என்பதில் நமக்கு பெருமை தான்.நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் 1863 ஆம் ஆண்டு துவங்கப்பட்டதாக அறிகிறேன். அப்படி பழமையான காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சத்திரம், தமிழகத்தில் இருந்து காசிக்கு வரும் பக்தர்களுக்கு உணவு, தங்கும் இடம் வழங்குவதே நோக்கம் . நேற்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி என்றைக்கும் சரி அதுவே நோக்கம்.ஜார்க்கண்ட் கவர்னராக நான் காசிக்கு வந்த போது நம்முடைய நகரத்தார் சங்கத்தில் இருந்து தான் தினமும் பூஜைப் பொருட்கள் காசி கோவிலுக்கு சம்போ எடுத்துச் செல்வது வழக்கம் என்பதை முதல்வர் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டார். அதில் நானும் கவர்னராக நடந்து சென்று இறைவனை வழிபடும் வாய்ப்பை நகரத்தார் வழங்கினார். பூஜை பொருட்களை எடுத்து செல்லும் போது வழியில் நிற்பவர்கள், ' சம்போ சம்போ சங்கர மஹாதேவா என்று ஒலிப்பதை கேட்க முடிகிறது. அதனால் இந்த வழக்கத்தை சம்போ என அழைக்கின்றனர்.இதில் ஒரு ஆச்சர்யம், 1942 ல் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட ஆங்கிலேயே அரசு கூட 'சம்போ' நிகழ்ச்சியை தடை செய்யவில்லை. கடந்த காலத்தில் நம்முடைய கலாசார பெருமைகளை பலரும் திருடிச் சென்றுள்ளனர். நம்முடைய தெய்வங்களின் சிலைகள் கடத்தப்பட்டு கொண்டு சென்று இருக்கிறார்கள். சில பேர் கூடக் கேட்பார்கள் ' சாமிக்கே தன்னுடைய சிலையை காப்பாற்ற முடியாத போது மக்களை எப்படி காப்பாற்றும் என்று கேட்பார்கள். அது அப்படி அல்ல. அரசன் அன்று கொல்வான். தர்மம் நின்று கொல்லும் என்பது தான் நமது அர்த்தம். காணாமல் போன நமது கடவுள் சிலைகள் இன்று பாரத புண்ணிய பூமிக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். அன்னபூரணி சிலை கனடாவில் இருந்து 2021 ல் திரும்ப கொண்டு வரப்பட்டது. பிரதமர் நரேந்நிர மோடி கடுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளார். 55 சிலைகள், ஆயிரகணக்கான கலைப்பொருட்கள் இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்டுள்ளது.அந்த இரண்டு கர்மயோகிகள் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு காசி தெருக்களில் ஹரஹர மகாதேவா கோஷம் முன்பை விட பெருமையாகவும் சுதந்திரமாகவும் சொல்லப்படுகிறது. னத் தெரிவித்தார்.

ஆக்கிரமிப்பு மீட்பு நடந்த பின் தான் கட்டப்படட  நகரத்தார் தர்ம சத்திரம். இப்போது கட்டியுள்ள இடம் சமாஜ்வாதி கட்சியினரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. பாரதிய ஜனதா கட்சி அரசு உபி மாநிலத்தில் அமைந்த பிறகு அந்த இடம் மீட்கப்பட்டு நகரத்தார் சமூகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த இடத்தில் தான் இந்த பிரம்மாண்டமான தர்மசத்திரம் கட்டப்பட்டு உள்ளது.காசியின் புனிதமான சூழலில் காகங்கள் கரையாது என்பது ஒரு நம்பிக்கை. காசியில் கருடன் பறப்பதைப் பார்க்க முடியாது என்பது மற்றொரு நம்பிக்கை. காசியில் பல்லி கத்துவது இல்லை என்பதும் பொதுவான நம்பிக்கைகளில் ஒன்று. காசியில் பிணங்கள் அழுகிய வாடை வராது என்றும் நம்பப்படுகிறது தென்னிந்தியாவில் மல்லி மற்றும் முல்லை போன்ற பூக்களின் வாசனை காசியில் இருக்காது என்றும், சாமந்திப் பூக்கள் அதிகம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நம்பிக்கைகள் அனைத்தும் காசியின் புனிதத்தன்மை மற்றும் அதிசயத் தன்மையைக் குறிக்கின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...