முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு விதிகள், 2025

டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு விதிகள், 2025 அறிவிக்கப்பட்டுள்ளன


டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு  விதிகள், 2025-ஐ 2025, நவம்பர் 14 அன்று மத்திய அரசு அறிவித்தது. டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம், 2023 முழுமையாக செயல்படுத்தப்படுவதை இது குறிக்கிறது. இந்தச் சட்டமும் விதிகளும் சேர்ந்து, டிஜிட்டல் தனிப்பட்ட தரவைப் பொறுப்புடன் பயன்படுத்துவதற்கான தெளிவான,


குடிமக்களை மையமாகக் கொண்ட கட்டமைப்பை உருவாக்குகின்றன. அவை தனிப்பட்ட உரிமைகள் மற்றும் சட்டபூர்வமான தரவு செயலாக்கத்தில் சமமான முக்கியத்துவத்தை அளிக்கின்றன.




வரைவு விதிகளை இறுதி செய்வதற்கு முன், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பொதுமக்களின் கருத்துகளை வரவேற்றது. தில்லி, மும்பை, குவஹாத்தி, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களில் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இந்த விவாதங்களில் பல்வேறு பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். புத்தொழில் நிறுவனங்கள்,




எம்எஸ்எம்இ-கள், தொழில்துறை அமைப்புகள், சிவில் சமூகக் குழுக்கள், அரசுத் துறைகள் என அனைத்தும் விரிவான பரிந்துரைகளை வழங்கின. குடிமக்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இறுதி விதிகளை வடிவமைப்பதில் இந்தப் பங்களிப்புகள் முக்கியப் பங்கு வகித்தன.




விதிகள் அறிவிப்பின் மூலம், தரவுப் பாதுகாப்பிற்கான நடைமுறை மற்றும் புத்தாக்கத்திற்கு ஏற்ற அமைப்பை இந்தியா இப்போது பெற்றுள்ளது. இது புரிந்துகொள்வதை எளிதாக்குகிறது இணக்கத்தை ஊக்குவிக்கிறது;  நாட்டின் வளர்ந்து வரும் டிஜிட்டல் சூழல் அமைப்பில் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.




2023, ஆகஸ்ட் 11 அன்று நாடாளுமன்றம் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது. இந்தியாவில் டிஜிட்டல் தனிநபர் தரவைப் பாதுகாப்பதற்கு முழுமையான கட்டமைப்பை இந்தச் சட்டம் உருவாக்குகிறது. நிறுவனங்கள் அத்தகைய தரவைச் சேகரிக்கும்போது அல்லது பயன்படுத்தும்போது என்ன செய்ய வேண்டும் என்பதை இது விளக்குகிறது. இந்தச் சட்டம் 'சரள்' அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. இதன் பொருள் இது எளிமையானது, அணுகக்கூடியது, பகுத்தறிவு சார்ந்தது மற்றும் செயல்படக்கூடியது. மக்கள் மற்றும் வணிகங்கள் விதிகளை சிரமமின்றிப் புரிந்துகொள்ளும் வகையில் எளிய மொழி மற்றும் தெளிவான விளக்கப்படங்களைப் பயன்படுத்துகிறது.



இந்தச் சட்டம் ஏழு முக்கிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இவற்றில் ஒப்புதல் மற்றும் வெளிப்படைத்தன்மை, நோக்க வரம்பு, தரவு குறைப்பு, துல்லியம், சேமிப்பு வரம்பு, பாதுகாப்பு, பொறுப்பேற்றல் ஆகியவை அடங்கும். தனிப்பட்ட தரவு, சட்டபூர்வமான மற்றும் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதையும் அவை உறுதி செய்கின்றன.

தரவு காப்பாளர்கள் இணக்கமாக இல்லையென்றால் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம்  கணிசமாக அபராதம் விதிக்கிறது. தரவு காப்பாளர்கள் நியாயமான பாதுகாப்பைத் தரத் தவறினால் ரூ. 250 கோடி வரை அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும். தனிப்பட்ட தரவு மீறல் மற்றும் குழந்தைகள் தொடர்பான கடமைகளை மீறுவது குறித்து வாரியம் அல்லது பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அறிவிக்காமல் இருப்பது ஒவ்வொன்றுக்கும் ரூ.200 கோடி வரை அபராதம் விதிக்கக்கூடும். சட்டம் அல்லது விதிகளை மீறும்  தரவு காப்பாளர்களுக்கு ரூ. 50 கோடி வரை அபராதம் விதிக்கக்கூடும்.



இந்தச் சட்டமும் விதிகளும் இணைந்து, ஒரு வலுவான மற்றும் சமநிலையான அமைப்பை உருவாக்குகின்றன. அவை தனியுரிமையை வலுப்படுத்துகின்றன, பொது நம்பிக்கையை வளர்க்கின்றன, பொறுப்பான புத்தாக்கங்களை ஆதரிக்கின்றன. அவை இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் பாதுகாப்பான மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையுடன் வளர உதவுகின்றன.

இந்த விதிகள் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட முழுமையான இந்திய டிஜிட்டல் தரவுப் பாதுகாப்பு வாரியத்தை நிறுவுகின்றன. குடிமக்கள் ஆன்லைனில் புகார்களைப் பதிவு செய்து, தனிச்சிறப்புப்  போர்டல் மற்றும் மொபைல் பயன்பாடு மூலம் தங்கள் வழக்குகளைக் கண்காணிக்க முடியும். இந்த டிஜிட்டல் அமைப்பு விரைவான முடிவுகளை ஆதரிக்கிறது மற்றும் குறை தீர்க்கும் செயல்முறையை எளிதாக்குகிறது. வாரியத்தின் முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தால் விசாரிக்கப்படும்.



டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகள், நாட்டிற்கு நம்பகமான, எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் டிஜிட்டல் சூழலை உருவாக்குவதில் ஒரு முக்கியமான செயல்பாட்டைக் குறிக்கின்றன. தனிப்பட்ட தரவு எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதை அவை தெளிவுபடுத்துகின்றன, தனிநபர்களின் உரிமைகளை வலுப்படுத்துகின்றன மற்றும் நிறுவனங்களுக்கு உறுதியான பொறுப்புகளை உருவாக்குகின்றன. இந்த நடவடிக்கைகள் மூலம் குடிமக்களுக்கு சேவை செய்யும், டிஜிட்டல் நிர்வாகத்தில் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் பாதுகாப்பான, மிகவும் வெளிப்படையான தரவுச் சூழல் அமைப்பை நோக்கி இந்தியா முன்னேறுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...