முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எஸ்ஐஆர்-க்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

எஸ்ஐஆர்-க்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில்  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைத் தொடரலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு.   வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து தமிழ்நாட்டில் ஆளும் திமுக கூட்டணிக் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை தாக்கல் செய்த மனுக்களுக்கு  தேர்தல் ஆணையம் இரண்டு வாரங்களுக்குள் பதில் மனுக்களைத் தாக்கல் செய்யும் வகையில் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கள் உத்தரவிட்டனர்.



இந்த விவகாரத்தில் தாக்கல் செய் யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் சூப்ப காந்த் ஜாாயல் பாச்சி அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நவம்பர்.11 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பு மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், தமிழ் சுத்தில் அதிக மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித் துள்ளது. இத்தகைய சூழலில் எஸ்ஐ ஆர் நடவடிக்கை மேற்கொள்வது சரியல்ல. டிசம்பரில் கிறிஸ்துமஸ், ஜனவரியில் பொங்கல் திருவிழா கொண்டடாட்ட மாதங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது மக்களைச் சிரமத்துக்கு உன்ளாக்கும் என்பதால் இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமென வாதிட்டார்.

அதைக்கேட்ட நீதிபதி சூர்ய காந்த் நீங்கள் ஏன் அஞ்சுகிறீர்கள்? இது ஒரு ஆரம்பகட்ட நடவடிக்கை தானே இதில் பல்வேறு         பிரச்சனைகன் இருந்தாலும் அனைத்துக்கும் தேர்தல் ஆணையம் உரிய பதிலையும் விளக்கத்தையும் கொடுக்க வேண்டும்' எனக் கூறினார்.

மேலும் நீதிபதிகள், நாட்டிலேயே முதல்முறைாாக வாக்காளர் பட்டி யல் தயாரிக்கப்படுவது போல குறை கூற முயல்கிறீர்கள். எங்களுக்கும் கள நிலவரம் தெரியும். ஒட்டுமொத்தமாக அதன் செயல்பாட்டை ஏன் குறை கூறுகிறீர்கள்?  ஒருசில குறை பாடுகள் இருந்தால் அவற்றை சுட்டிக்காட்டுங்கள் தேர்தல் ஆணையம் சரி செய்யும். நீங்கள் மனுவில் குறிப்பிடப்பட்ட  காரணங்கள் ஏற்புடையதாக இருந்தால் நாங்களே எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை விதிப்போம் என்றனர்.

தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் ராகேஷ் துவிவேதி, 'எஸ்ஐ.ஆர் தொடர்பாக உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மனுக்களைச் உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். அவற்றின் மீதான விசாரணையை நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும் என நீதிபதிகளிடம் கேட்டுக் கொண்டதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட வழக்குகனை உச்ச          நீதிமன்றத்துக்கு மாற்ற உரிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் அவற்றை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எஸ்ஐஆர்-க்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.



எனத் தெரிவித்தனர். அதிமுக மனு: முன்னதாக, எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு ஆதரவாக அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள். அடுத்த விசாரணையை நவம்பர் மாதம் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட் 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து அதற்குரிய பணிகளைத் தொடங்கியுள்ளது.தேசியக் குடியுரிமைச் சட்டத்தின் படி, 1950 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை,  இந்திய ஆட்சி நிலத்தில் பிறந்த எவரொருவரும் இந்தியாவின் குடிமகனாக ஏற்றுக் கொள்ளப்படும். பெற்றோர் இந்தியாவின் குடிமகமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. காரணம் அது 600 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களின் ஆட்சி ஆகவே 2003 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திருத்ததின்படி (the citizenship (amendment) act, 2003), 1.071987 - 03.12. 2004 இடைப்பட்ட காலத்தில் பிறந்தவரின் பெற்றோரில் ஒருவர் கட்டாயம் இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும். 2004 ஆம் ஆண்டில் பிறந்தவரின் பெற்றோர் இருவரும் இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும் (அல்லது) பெற்றோரில் ஒருவர் இந்தியாவின் குடிமகமாக இருந்தால் மற்றொருவர் சட்டவிரோதக் குடியேறியாக இருக்கக் கூடாது. இதன் காரணமாக,  தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த (SIR) விதியின்படி, 1987, 2004 ஆம் ஆண்டுக்கு முன்பு, 2004 ஆம் ஆண்டுக்குப் பின்பு என்ற மூன்று குடிமை அடுக்குகள் உள்ளன. குடியுரிமை-வாக்குரிமை இரண்டும் பிரிக்க இயலாத அடிப்படை உரிமைகளாகும். அடையாளம் மற்றும் முகவரி உறுதிப்படுத்தும் பொருட்டு 13 ஆவணங்கள் பரிந்துரைக்கப்பட்டதன்படி பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், கல்விச் சான்றிதழ், பணியாளர் அடையாள அட்டை, வசிப்பிடச் சான்றிதழ், ஓய்வூதிய ஆவணங்கள், ஜாதி அல்லது வன உரிமைச் சான்றிதழ்கள் ஆகியவை அடங்கும். தற்போதைய வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த (SIR) விதியின்படி, 2002 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட SIR-ல் உங்களின் பெயரோ உங்களின் பெற்றோரின் பெயரோ இருந்தால் விண்ணப்பதாரர் ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. வாக்காளர் கணக்கீட்டுப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்பிக் கொடுத்தாலே போதுமானது. ஒருவேளை,  2002 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட SIR-ல் உங்களின் பெயரோ உங்களின் பெற்றோரின் பெயரோ இல்லை என்றால் தான் தேர்தல் ஆணையம் பட்டியலிட்டிருக்கும் 13 சான்றாவணங்களில் ஏதேனும் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக, 01.07.1987க்கு முன்பு பிறந்து, 2002 ஆம் ஆண்டில் SIRல் இடம் பெறாதவர்கள் தற்போது தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு இருக்கும்  13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்குரிமையை பெற முடியும்.01.07.1987 -02.12.2004க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள், தன்னுடைய அடையாளத்தையும் தனது பெற்றோர்களில் ஒருவரின் அடையாளத்தையும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு இருக்கும்  13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்குரிமையை பெற முடியும். அதேபோன்று, 2.12.2004க்குப் பிறகு பிறந்தவர்கள்,தன்னுடைய அடையாளத்தையும், தன்னுடைய பெற்றோர் இவர்களின் அடையாளத்தை கண்டிப்பாக காட்டி வாக்குரிமையை பெற முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...