முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிள்ளையார்பட்டி கோவில் அறங்காவலர் நியமிக்கத் தடை

பிள்ளையார்பட்டி கோவில் பி. க. நக டிரஸ்ட் அறங்காவலர் நியமனத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன், சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-







சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் திருக்கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. 1,300 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் கடந்த 600 ஆண்டுகளாக செட்டிநாட்டுப் பகுதியில் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை சமஸ்தானம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் நாட்டுக்கோட்டை நகரத்தார் ஜாதியைச் சேர்ந்த 20 குடும்பத்தினரால் பாரம்பரியப் பரம்பரையாக சுழற்சி முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.



1978-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை அங்கீகரித்த ஸ்கீம் திட்டத்தின் படி, மேற்கண்ட 20 குடும்பத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 2 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கற்பக விநாயகர் கோவிலின் வருட அறங்காவலர்களாக விநாயகர் சதுர்த்தி முடிவில் மாறுதலாக நியமிக்கப்படுதல் வேண்டும்.



எங்கள் குடும்பத்தில் ஏற்கனவே அறங்காவலர்களாக பொறுப்பும் வகித்துள்ளனர். தற்போது எங்களது குடும்பத்தினர் அறங்காவலர்களாக பொறுப்பை வகிக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒரு நபருக்கு வேண்டிய நபரை அறங்காவலராக நியமிக்கும்படி சிலர் இடையூறுகளைச் செய்து வருகின்றனர். இது டிரஸ்ட் சட்டத்துக்கு புறம்பானது. எனவே விதிமுறைகளின் படி எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை அறங்காவலராக இந்த ஆண்டில் நியமிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை வேறு நபர்களை அறங்காவலர் பதவிக்கு நியமிக்க அறநிலையத்துறைக்கு தடை விதிக்க வேண்டும். என WP. (MD) 32235   /2025 ரிட் மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு  வந்த போது, பிள்ளையார்பட்டி கோவில் பி.க. நக டிரஸ்ட் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆலய அறங்காவலர் நியமனத்தில் டரஸ்ட் சட்டவிதிமுறைகள் மீறப்படவில்லை என்றார்.






அப்போது நீதிபதி, தமிழ்நாட்டில் இந்தக் கோவில் மட்டும்தான் முறையாக செயல்படுவதாக நினைத்தேன். இங்கும் இப்படியெல்லாம் நடப்பது வருத்தமளிக்கிறது என்றார். விசாரணை முடிவில்,  பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் அறங்காவலர் நியமன விவகாரத்தில் நவம்பர் 18- ஆம் தேதி வரை எந்த முடிவும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்





மருதங்குடி எனும் இராஜநாராயணபுரம் குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோவிலான பின்னர் பிள்ளையார்பட்டியான தேசி விநாயகர் மருதீசர் கோவில், சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பே பல்லவர் மற்றும் பாண்டிய மன்னர்கள் திருப்பணிகளில் அமைக்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியலாம். பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோவில்களை அமைத்த பெருமை முற்காலப் பாண்டியர்களுக்கு உண்டு. ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்கிற சிற்பியால் பிள்ளையாரின் உருவமும், சிவலிங்கத்தின் உருவமும் செதுக்கப்பட்டுள்ள தகவல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டது. ஆய்வின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு இரண்டு அல்லது ஐந்து நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த குடைவரைக் கோவில் என்பதை அறியலாம். பொ.ஊ. 4 ஆம் நூற்றாண்டில் பிள்ளையார் சிலையை மலைக் குகையில் குடவரையாக செதுக்கி இருக்கலாம் என்று நம்மப்படுகிறது. இது போல் 14 சிலைகள் உருவங்கள் இக் கோவிலில் அமைந்துள்ளது. மேலும், கல்வெட்டுகள் மூலமாக, எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், இராஜ நாராயணபுரம். மேலும், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் போன்றவை இத் திருத்தலத்தின் முற்காலப் பெயர்கள் என அறியலாம்

இந்தக் கோவில் பொ.ஊ. 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழநாட்டில் காவிரிப் பூம்பட்டிணத்தில் இருந்து புலம்பெயர்ந்து பாண்டிய நாட்டில் 93 கிராமங்களில் குடியமர்ந்த சோழநாட்டு மகுட வைசியர்களான நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கு பாண்டிய மன்னர் சாசனம் செய்து கொடுத்த பின் நான்காம் திருப்பணி முதல் அவர்கள் வசமானது இருந்த போதும் மன்னருக்கே முதல் மரியாதை இரண்டாம் மரியாதை நகரத்தாருக்கு என்பது வரலாறு. நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் கடந்த முப்பதாண்டு காலம்ஸமிகச் சிறப்பான முறையில், ஆகம முறை தவறாமல் வழிபாடு நடைபெறுகிறது. அதற்கு முன்பு இங்கு கூட்டம் அதிகம் வராத காலத்தில் இருந்த நிலை தற்போது மாறிவிட்டது இந்த ஸ்தல கற்பக விநாயகருக்கு தேசி விநாயகர் என்ற திருநாமமே உண்டு. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க, அழகுள்ள விநாயகர் எனப் பொருள்.சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப்பெற்றுள்ளது.  இக்கோவிலின் பிரதான தெய்வமாக கற்பக விநாயகர் இருக்கிறார். மலையைக் குடைந்து அமைக்கப்பெற்ற சுமார் 6 அடி உயரமுள்ள  பிள்ளையாரின் உருவம் வடக்குத் திசை நோக்கி காணப்படுகிறது. குகைக்கோயிலில், மருதீசரான சிவன் லிங்கம் மற்றும் பிற கடவுளர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆகம விதிப்படி கல்வெட்டுக்களில் எழுதப்ப்ட இக்கோவில், பொ.ஊ. 1291 மற்றும் 1238 ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததெனலாம். அது குறித்த கல்வெட்டு ஒன்னு கிழக்கு பக்கத்துக் கதவினை ஒட்டி இருந்ததை நகரத்தார் மன்னர் கல்வெட்டு அப்புறப் படுத்தியதை கடந்த நாற்பது ஆண்டு காலமாக யாமறிவோம்.   கோவில் கட்டிய மன்னர் இவர்களுக்கு வழங்கிய அறப்பணி என்பது மறைக்கப்பட்டு இவர்கள் கட்டிய கோவில் போலவே வழிநடத்தும் நிலை அடுத்த தலைமுறை அறியாத தகவல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...