முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காங்கிரஸ் கட்சி வீழ்ச்சிக்கு ஜாதி அரசியல் தான் காரணம் இது மக்கள் கருத்து

பீஹார் சட்டமன்றத் தேர்தல் 2025 ல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு பரிதாபமான தோல்வியைச் சந்தித்துள்ளது.



2020 ஆம் ஆண்டில் 19 இடங்களைப் பெற்ற கட்சி, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் முன்னேற்றம் எதுவும் இல்லை காரணம் அதன் அகில இந்தியத் தலைமை மல்லிகர்ஜூன கார்கே. தன்னை ஒரு காமராஜர் போலவே நினைக்கும் நிலையில் தனது ஜாதி சார்ந்த நபர்களை மட்டுமே வளர்க்க நினைத்து மாநிலத் தலைவராக மாற்றம் செய்த பின்னர் கழுதை தேய்த்து கட்டெறும்பு ஆகி தற்போது காணவில்லை. இது தற்செயலான தோல்வி அல்ல; கட்சியின் அடிப்படைப் பலவீனங்களின் வெளிப்பாடு. தலைமை இல்லாமை, உத்தி இழப்பு, உள்ளார்ந்த பிளவு, ஜாதி அரசியலில் பின்தங்கிய தன்மை, இவையே காங்கிரஸின் பீஹார் மாநிலத்தில் தோல்விக்கான முக்கியக் காரணங்கள். 




முதலாவதாக, பீஹாரில் காங்கிரஸுக்கு ஒரு நல்ல தலைவர் முகம் இல்லை. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தேசிய அளவில் பிரசாரம் செய்தாலும், முந்தைய வசீகரமில்லை உள்ளூர் தலைவர்களிடம் செல்வாக்கும் இல்லை. மாநிலத் தலைவர் மாதவ் ஆனந்த் அல்லது ஷகீல் அகமது போன்றோர், யாதவ் அல்லது முஸ்லிம் வாக்காளர்களிடம் கூட ஒரு ஈர்ப்பு இல்லை. 2020 ஆம் ஆண்டில்  தேஜஸ்வி யாதவின் இளைஞர் உருவத்துக்கு முன் காங்கிரஸ் தலைவர்கள் மங்கிப்போனார்கள்; இப்போதும் அதே நிலை தான். கட்சி, தனது பாரம்பரியத் தலைவர்களான ஜெகதீஷ் திவாரி, சத்யேந்திர சிங் போன்றோரை முன்னிறுத்தவில்லை. மாறாக, டில்லியில் இருந்து வரும் உத்தரவுகளுக்கு அடிபணிந்து, உள்ளூர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளத் தவறியது. இது, வாக்காளர்களிடம் "காங்கிரஸ் யாருக்காக?" என்ற கேள்வியை எழுப்பியது.




இரண்டாவதாக,  மஹாகூட்டணியில் (எம்ஜிபி) காங்கிரஸ் ஒரு ஜூனியர் பார்ட்னராக மட்டுமே செயல்பட்டது. ஆர்ஜேடி (தேஜஸ்வி) மற்றும் இடதுசாரிகள் ஆகியோரின் நிழலில் தனது அடையாளத்தை இழந்தது. 2020 ஆம் ஆண்டில்"மகாகட்பந்தன்" என்ற பெயரில் ஒன்றுபட்டாலும், வாக்கு இடமாற்றம் (vote transfer) சரியாக நடக்கவில்லை. இப்போதும் அதே தவறு. காங்கிரஸ் கட்சி, முஸ்லிம் வாக்குகளை மட்டுமே நம்பியது; ஆனால், முஸ்லிம்கள் பெரும்பாலும் ஆர்ஜேடிக்கு நகர்ந்தனர். ஓபிசி, பட்டியல் சமூகம், ஈபிசி வாக்குகளில் காங்கிரஸுக்கு பங்கு இல்லை. பிரசாரத்தில் ராகுல் காந்தியின் "நியாய்" திட்டம் பேசப்பட்டாலும், பீஹாரின் உள்ளூர் பிரச்சினைகளான வேலையின்மை, குடியேற்றம், வெள்ளம் ஆகியவற்றுக்கு உறுதியான தீர்வு இல்லை. "பெண்களுக்கு ரூபாய்.2,500" என்ற ஆர்ஜேடி வாக்குறுதிக்கு முன், காங்கிரஸின் "மகாலட்சுமி" திட்டம் மங்கலாகத் தான் தோன்றியது.





மூன்றாவதாக, பீஹார் அரசியல் ஜாதி அடிப்படையில் இயங்குகிறது. என்.டி.ஏ. ஓபிசி (குர்மி, கோயரி), ஈபிசி, பட்டியல்(நோனியா, பாஸ்வான்), உயர்ஜாதி ஆகியவற்றை ஒருங்கிணைத்தது. ஆர்ஜேடி யாதவ்-முஸ்லிம் கூட்டணியை வைத்திருந்தது. காங்கிரஸுக்கு? ஒரு ஜாதி அடித்தளமும் இல்லை. பாரம்பரியமாக பிராமணர், ராஜ்புத், பூமிகார் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு இருந்தன; ஆனால், அவை இப்போது பாரதிய ஜனதா கட்சிக்கு மாறிவிட்டன. கட்சி, புதிய சமூகப் பொறியியல் (social engineering) பரிசோதனை செய்யவில்லை. உதாரணமாக, மல்லாஹ், நிஷாத் போன்ற மீனவ சமூகங்களை இணைக்க முயலவில்லை. இடதுசாரிகளுடன் கூட்டணி இருந்தாலும், பட்டியல் ஜாதி வாக்குகள் சிபிஎம்-க்கு சென்றன. காங்கிரஸ் கட்சி, ஜாதி அரசியலில் ஒரு "பொதுவான" கட்சியாக மட்டும் தோன்றியது – இது அக் கட்சிக்கு பீஹாரில் கொடுக்கப்பட்ட மரண தண்டனை.

நான்காவதாக, பீஹார் மாநில காங்கிரஸ் கட்சியில் உள் குழுக்கள் பிரச்சினை. ஒரு பிரிவு ராகுல் காந்திக்கு விசுவாசம்; மற்றொன்று கார்கே ஆதரவு மாநிலத் தலைவர்களுக்கு ஆதரவு. தேர்தலில் வேட்பாளர் தேர்வு தொகுதி வழங்கலில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பல தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் ஆர்ஜேடி ஆதரவாளர்களால் நேரடியாகவே எதிர்க்கப்பட்டனர். கட்சியின் அமைப்பு பலவீனம்; பூத் நிலை ஏஜன்ட் ஊழியர்கள் இல்லை. 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பீஹாரில் 3 இடங்களை மட்டும் வென்ற கட்சி, சட்டமன்றத் தேர்தலில் எந்த முன்னேற்றம் காட்டவில்லை. பணம், தொண்டர்கள், பிரசார இயந்திரம் – எதிலும் என்.டி.ஏ.வுடன் போட்டியிட முடியவில்லை.

இறுதியாக, காங்கிரஸ் கட்சி பீஹாரை தேசிய அரசியலின் பகுதியாக மட்டும் பார்க்கிறது. "பாரதிய ஜனதா கட்சியைத் தோற்கடிக்க வேண்டும்" என்ற ஒரே கோஷம். ஆனால், வாக்காளர்களுக்கு உள்ளூர் தலைமை, உள்ளூர் தீர்வு வேண்டும். நிதீஷ் குமார் "பீஹார் முதலில்" என்றார்; தேஜஸ்வி யாதவ் "வேலை முதலில்" என்றார். காங்கிரஸ் கட்சி? "நியாய்" என்றது – ஆனால், அது பீஹாரின் மண்ணில் வேரூன்றவில்லை.

காங்கிரஸ் கட்சியின் பீஹார் தோல்வி ஒரு எச்சரிக்கை மணி. நேரு குடும்பம் என்ற பிம்பம் உடைந்து விட்டது, கட்சி நல்ல நிர்வாகிகளை மாற்றம் செய்யாவிட்டால்,  உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், தமிழ்நாடு  போன்ற மாநிலங்களிலும்  இதே நிலை தான் வந்துவிடும். உறுதியான உள்ளூர் தலைமையை உருவாக்க வேண்டும், ஜாதி சமன்பாட்டில் பங்கு பெற வேண்டும், அமைப்பை வலுப்படுத்த வேண்டும், உள்ளூர் பிரச்சினைகளுக்கு உள்ளூர் தீர்வு காண வைக்க வேண்டும். இல்லையெனில், காங்கிரஸ் கட்சி ஒரு அருங்காட்சியகக் கட்சியாக மட்டுமே திகழும் – வரலாற்றில் மட்டும் வாழும், வாக்குச்சாவடியில் காணாமல் இறந்து போகும். காங்கிரஸ் கட்சி தன்னை மீட்டெடுக்க இனி வரும் மாநிலத் தேர்தலில் தனியாகவே களம் காண வேண்டும். போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளில் டெபாசிட் இழந்து தோற்றாலும் பரவாயில்லை, உழைக்கும் எண்ணமும், உழைப்பின் முக்கியத்துவமும் புரியும், கட்சி சிறிதளவு உயிர் பெறும். "சோத்துக்குத்தானே அலையறே?

இந்தா சாப்பிடு சோறு"

என்று இலவசம் என்று தரும் இலவச சோறு திட்டமும் உழைப்பாளர்களை அடிமையாக்கும் திட்டமே. மக்கள் விரும்புவது இலவசங்களும், ஆட்சியாளர்கள் நடத்தும் கவர்ச்சி நிகழ்ச்சிகளோ அல்ல, "சோத்துக்குத்தானே அலையறே?

இந்தா சாப்பிடு சோறு சாப்பிடு "

என இலவசம் என்று தரும் இலவசச் சோறு திட்டம் உழைப்பாளர்களை அடிமையாக்கும் திட்டமே.



அவர்களுக்குத் தேவை இலவச சோறு அல்ல. உழைத்துச் சாப்பிட நிரந்தர வேலை.

உழைக்கவே முடியாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளிக்கும் திட்டமென்றால் நல்லது.

75 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி அதன் தொண்டர்களுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுக்க வில்லை.

மீனை உணவாக தர வேண்டாம். மக்கள் விருப்பம் இலவசமாக கல்வி, மருத்துவம், ஊழலற்ற வேலைவாய்ப்பு, மது ஒழிப்பு உள்ளிட்ட பல இது இப்போது உள்ள அரசியல் வியாபாரிகள் நடத்தப்போவது இல்லை,சிலப்பதிகாரக் கூற்றின் படி அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும், அறம் (தர்மம்) அழியின் உலகம் அழியும், அதைத் தாங்குவோர் அரசர்க்கு அரசு; அநீதி ஆளும் அரசு அழியும்,

விதுரனின் நீதி இது நியமம் உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...