முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோயமுத்தூர் செல்வபுரம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் மீது தங்க மோசடி வழக்குப் பதிவு

கோயமுத்தூர் செல்வபுரம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் மீது தங்க மோசடி  வழக்குப் பதிவு. ரூபாய்.1 கோடி தங்கத்தை மிரட்டி வாங்கியதாக காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு

கோயமுத்தூர் கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூபாய்.1கோடி மதிப்புள்ள தங்கத்தை மிரட்டி வாங்கியதாக காவல்துறை ஆய்வாளர்  மீது குற்றப்பிரிவுக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்துகின்றனர்.

கோயமுத்தூர் சிவானந்தாகாலனியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 58), கட்டுமானத் தொழில் நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி வீட்டிலிருந்த போது அப்போது பணியில் இருந்த செல்வபுரம் காவல்துறை ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட 7 பேர் வந்தவர்கள் சோமசுந்தரத்திடம், நீங்கள் நகை வியாபாரியான முத்துக்குமார் என்பவரிடம் ரூபாய் 1 கோடி மதிப்பில் தங்கம் வாங்கி மோசடி செய்துள்ளீர்கள். எனவே உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக உங்களை விசாரிக்கவேண்டும் எனக்கூறி அவரை செல்வபுரம் காவல் நிலையத்துக்கு கூட்டிச்சென்று அங்கு மிரட்டி நகையை வாங்கினர் பின்னர் காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் காவலர்கள் சோமசுந்தரத்திடம் விசாரணை நடத்திய  போது அவர், தனக்கு நகை வியாபாரி முத்துக்குமார் என்பவர் யாரென்றே தெரியாது. அப்படி இருக்க நான் அவரிடம் எப்படி நகையை வாங்கி இருக்கமுடியும் என்று கூறியதாகத் தெரிகிறது.


அதற்கு காவலர்கள், நீங்கள் தான் நகையை வாங்கி உள்ளீர்கள். எனவே அந்த நகையை இப்போது திருப்பி கொடுக்க வில்லை என்றால் கைது செய்து, சிறையில் அடைத்து விடுவோம் என மிரட்டியதாகவும், அதனால் வேறு வழியில்லாமல் அவர் தனது உதவியாளர் மூலம் ரூபாய்.1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான நகையை வாங்கி அதை ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் காவலர்களிடம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் சோமசுந்தரத்தை திரும்ப அனுப்பி வைத்ததாகவும். இப்படி சம்பந்தமே இல்லாத ஒரு வழக்குத் தொடர்பாக தன்னை மிரட்டி நகையைப் பறித்து மிரட்டிய காவல்துறை செல்வராஜ் உள்ளிட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயமுத்தூர் மாநகரக் காவல்துறை குற்றப்பிரிவிடம் சோமசுந்தரம் புகார் கொடுத்தார்.

ஆனால் அந்த மனு மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் CRL OP   மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, சோமசுந்தரம் கொடுத்த  புகார் மனுவினை விசாரணை நடத்தி அதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நிலையில்

அதை தொடர்ந்து கோயமுத்தூர் மாநகரக் குற்றப்பிரிவு காவல்துறை யினர் நகை வியாபாரி முத்துக்குமார், அப்போது பணியில் இருந்த செல்வபுரம் காவல்துறை ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீதான விசாரணை உண்மையாக நடக்கும் பட்சத்தில் விரைவில் அவர்கள் கைதாகலாம்  மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வாளர் செல்வராஜ் தலைமறைவாக உள்ளதால், போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சம்பவம்: சோமசுந்தரம் என்பவருக்கு எதிராக ஒரு பொய்யான முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து, அவரை கைது செய்வதாக மிரட்டி, அவரிடமிருந்து தங்க நகைகளைப் பறித்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...